Tagged: அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஈரோடு 25092017

அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது.. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்நிலையங்களிலும் “சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்” கொண்டாடப் படுகின்றன.. சட்டவிரோத இந்த பூஜையை தடுத்து நிறுத்தக்கோரி, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.. தோழர்.இரத்தினசாமி, மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.ராம. இளங்கோவன், வெளியீட்டுச்செயலாளர் ஆசிரியர்.சிவக்குமார் தோழர்.சண்முகப்பிரியன், தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர்.வேணுகோபால்,வடக்கு மாவட்டச் செயலாளர் தோழர்.சத்தியராசு,தோழர்.கோபி விஜயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்

பள்ளிபாளையம் காவல்நிலையம் முற்றுகை !

ஆயுத பூஜை கழக தோழர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. சட்ட விரோதமாக ஆயுதபூஜை கொண்டாடிய பள்ளிபாளையம் காவல்நிலையத்தில்… நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல்நிலைங்களில் இந்து மத பண்டிகையான ஆயுதபூஜை கொண்டாட கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டிருந்தது. கழகத்தின் கோரிக்கையையும் ஏற்காமலும், அரசின் சட்ட விதிகளையும் மதிக்காமல் சட்ட விரோதமாக அரசின் மதசார்பினையை சீர்குலைக்கும் வகையில் பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் ஆயுதபூஜை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வந்தது,இதை அறிந்து நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் தலைமையில் கழக தோழர்கள் காவல்நிலையம் சென்று விசாரித்தனர். பள்ளிபாளையம் காவல்துறை துணை ஆய்வாளர் ராஜா தோழர்களிடம் ஒருமையில் பேசி கலைந்து செல்லுமாறு மிரட்டியதோடு உள்ளே வைத்து அடித்து விடுவதாகவும் மிரட்டினார். உடனடியாக தோழர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆயுத பூஜையை நிறுத்துமாறும், பூஜைக்கு தயார்படுத்திய பொருட்களை அப்புறப் படுத்துமாறும், ஒருமையில் தகாத வார்த்தைகளை பேசிய துணை ஆய்வாளர் ராஜாவை மன்னிப்பு கேட்குமாறும் கோரிக்கை வைத்தனர்,...