கழக செயலவை தீர்மானம் வெற்றி: காவல்நிலையங்களில் கண்காணிப்பு காமிராக்கள்

26.10.2014 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக செயலவை, காவல் நிலையங்களில் ‘மரண தண்டனை’ வழங்கிவிட்டு, உண்மைக்கு மாறான காரணங்களைக் கூறி, காவல்துறையினர் தப்பி விடுவதை சுட்டிக் காட்டி, தீர்மானம் நிறைவேற்றியது. அத் தீர்மானத்தில், “காவல்நிலைய விசாரணைகளில் நடக்கும் உண்மைகளைக் கண்டறிய, எதிர்காலத்திலாவது கண்காணிப்புக் காமிராக்களை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பொருத்த வேண்டும்” என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. திராவிடர் விடுதலைக் கழகம் முன் வைத்த இந்த ஆலோசனை, இப்போது உயர்நீதிமன்ற உத்தரவு வழியாக நிறைவேற்றப்படவிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஐ. பிரகாஷ்ராஜ் தொடர்ந்த பொதுநல வழக்கில் காவல்நிலையத்தில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எப்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, முதல் கட்டமாக 251 காவல் நிலையங்களில் மார்ச் 9ஆம் தேதிக்குள் கண்காணிப்பு காமிராக்களை பொருத்துமாறு காவல்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. பணி நிறைவடைந்த அறிக்கைiயும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசும் கண்காணிப்புக் காமிரா பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டது.

பெரியார் முழக்கம் 12022015 இதழ்

You may also like...

Leave a Reply