ஜி.ஆர்.சாமிநாதனின் மூடத்தனமான தீர்ப்பு

அக்ரஹாரத்தில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலையில் பிற ஜாதியினர் உருண்டு தரிசனம் செய்யும் முறையை கடந்த 2015ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை செய்திருந்தது..
தற்போது இந்த சடங்கு முறைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன். இந்த சடங்கு அடிப்படை உரிமை என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே கர்நாடக அரசும் எச்சில் இலையில் உருண்டு தரிசனம் செய்யும் முறைக்கு தடை விதித்திருந்தது. இப்போது இந்த மூடத்தனம் தமிழ்நாட்டில் உயிர்ப்பெற்று வருகிறது.
இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. அது நீதிபதிகளுக்கு தெரிவதில்லை.
சுகாதார உரிமையை விட பக்தி உரிமை தான் முக்கியமானது என்று நீதிபதிகள் கருதுகிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. வாழை இலையில் எச்சில் செல்கிற போது அதில் ஒரு ரசாயனம் உருவாகி அந்த சக்தியில் அதிர்வலைகள் ஏற்பட்டு மனித சிந்தனையை மாற்றி அமைக்கிறது என்று இவர்கள் அறிவியல் விளக்கத்தை கூறினாலும் வியப்பதற்கு இல்லை. சனாதனம் இப்படி எல்லாம் நாட்டை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது.
– விடுதலை இராசேந்திரன் முகநூல் பதிவு

பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

You may also like...