நாகர்கோயிலில் கழகம் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தங்கை அனிதா நினைவேந்தல்,  நீட் தேர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில், வடசேரி, அண்ணாச் சிலை அருகில் 05.09.2017 செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிக்கு கொட்டும் மழையில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சதா தலைமையில் நடைப்பெற்றது. நீதி அரசர் (மாவட்டத் தலைவர்-பெ.தொ.க) முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ் மதி கண்டன முழக்கங்கள் எழுப்பினார். தோழர்கள் விஷ்ணு, சூசையப்பா, மஞ்சுகுமார், சஜீவ், போஸ், ரசல் இராஜ், சுகுமார், குமரேசன், மணிகண்டன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் முழக்கம் 21092017 இதழ்

You may also like...