கழக தலைமையகத்தில் கவுரி லங்கேஷ் படத் திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக 17.09.2017 மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் பெரியார் யுவராஜ் தலைமையில் மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் படத்திறப்பு உணர்ச்சி மயமாக நடந்தது. எட்வின் பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்வை இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) ஒருங்கிணைத்தார்.  கார்த்திக் இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

கவுரி லங்கேஷ் படத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்வில் ஜெயநேசன் (அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு), மனிதி இயக்கத்தின் செல்வி,  இளந்தமிழகத்தின் செந்தில், மே17 இயக்கத்தின் பிரவீன்  சிறப்புரையாற்றினார்கள். மா.தேன்ராஜ் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 21092017 இதழ்

You may also like...