தோழர் கவுரி லங்கேஷ் அவர்களுக்கு நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்வு சென்னை 17092017

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கவுரி லங்கேஷ்அவர்களுக்கு நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்வு…

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக நேற்று (17.09.2017) மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் தோழர்.பெரியார் யுவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தோழர். எட்வின் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வை தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

நினைவேந்தல் நிகழ்வின் தொடக்கமாக்க தோழர்.கார்த்திக் இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் எழுத்தாளர்.கவுரி லங்கேஷ் அவர்களின் படத்தை கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தி, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நினைவேந்தல் நிகழ்வில் தோழர்.ஜெயநேசன், மனிதி இயக்கத்தின் தோழர்.செல்வி, இளந்தமிழகத்தின் தோழர்.செந்தில், மே17 இயக்கத்தின் தோழர். பிரவீன் மற்றும் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் எழுத்தாளர். கவுரி லங்கேஷ் அவர்களின் சமூக நோக்கத்தை குறித்தும், சமூகநீதிக்கான அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக தோழர்.மா.தேன்ராஜ் சிறப்புரையாற்றிய தோழர்களுக்கும், வந்திருந்த தோழர்களுக்கும் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

chen

You may also like...