நிமிர்வோம் வாசகர் வட்டம் – சந்திப்பு 10092017 திருப்பூர்

திருப்பூர் மாநகர செயலாளர் சி. மாதவன் அவர்கள் சகோதரர் சி.நாகராசு – ம. அசுவிதா, வாழ்க்கை துணை ஒப்பந்த விழா முடிந்தவுடன் இன்று நண்பகல் 3:00 மணிக்கு மனிதம் வாசகர் வட்டம் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்களின் தலைமையில் 2வது கூட்டம் நடைபெற்றது
நிகழ்ச்சியில் 15 தோழர்கள் பங்குபெற்றார்கள். வாசகர் வட்ட நோக்கத்தினை எடுத்துக் கூறி இனி கழக நிகழ்வுகளில் எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தோழர்கள் 1 மணிநேரம் வாசிப்பு வட்டத்தை கூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

நிகழ்வில் ஆகஸ்ட் மாத நிமிர்வோம் இதழில் வெளிவந்த “வந்தே மாதரம்” பாடல் குறித்த தலையங்கம் படித்துக் காண்பிக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் இதழின் ஒவ்வொரு கட்டுரையும் அதன் ஆசிரியர் பற்றிய தகவலோடு அனைவரும் தத்தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்

இறுதியாக அடுத்த வாரம் 16/9 அன்று மாலை பொள்ளாச்சியில் வாசகர் வட்ட சந்திப்பு நடத்துவதென்றும் தோழர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் படிக்க போகும் புத்தகத்தை பற்றி முன்கூட்டியே இங்கே பதிவிட்டு அதை பற்றி அடுத்த வட்டத்தில் விவாதிக்கவும் ஒருமனதாக முடிவெடுத்தனர்

tpr

You may also like...