இராசிபுரத்தில் சேகுவேரா பிறந்த நாள் கூட்டம்

இராசிபுரம் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் ஜுன் 14 அன்று புதன்கிழமை இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சேகுவேராவின் 89ஆவது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது

விழாவின் தொடக்க நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர்.பகுத்தறிவு இசைக்குழுவின் பறைமுழக்கம் – இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை: இரா.பிடல் சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க), முன்னிலை:  இரத்தினசாமி, பா. மலர் (தி.வி.க இராசிபுரம் மாநில அமைப்பு செயலாளர்), முத்துபாண்டி (மாவட்டபொருளாளர்), வரவேற்புரை இரா.சுமதி (தி.வி.க இராசிபுரம்), சிறப்புரை: கழகத் தலைவர் கொளத்தூர்மணி, பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர்), நன்றியுரை: மு.சரவணன் (மாவட்டசெயலாளர்).

கூட்டத்தின் முடிவில் வரவு-செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு இரவு உணவாக மாட்டுக்கறிபிரியாணி பரிமாறப்பட்டது.

பெரியார் முழக்கம் 06072017 இதழ்

You may also like...