வடசென்னையில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

புளியந்தோப்பு பகுதி கழகத்தின் சார்பில் அம்பேத்கரின் 122-வது பிறந்த நாளை முன் னிட்டு “அம்பேத்கரின் எதிர்பார்ப்பு நிறைவேறி யுள்ளதா” என்ற தலைப் பில் மாபெரும் விளக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. சி.அருள்தாஸ் தலைமை வகிக்க, விசுயன், தா.இ.கோவிந்தன் முன்னிலை வகிக்க வரவேற்புரையினை அ.அமுல்ராசு நிறைவேற்றினார். தொடர்ந்து மாவட்டக் கழகத் தலைவர் ஏ.கேசவன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ச.குமாரதேவன், கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் சிற்பிராஜனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பொது மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிற்பிராசன் நடத்தி முடிக்கும்போது ஆரவாரமும், கைத்தட்டலுமாக பொதுமக்கள் வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியில் புதிதாக ஏழு தோழர்கள் (மது, விஜி, அண்ணாமலை, தமிழ், ராஜசேகர், அப்பு, சுதாகர்) கழகத்தில் இணைந்தனர். நன்றியுரையினை சுப்ரமணியன் நிகழ்த்தினார்.

பெரியார் முழக்கம் 19042012 இதழ்

You may also like...