கண்டன ஆர்ப்பாட்டம் ! ஈரோடு 29082016

கடமையாற்றத்தவறும் கவுந்தப்பாடி காவல்நிலைய அதிகாரிகளை கண்டித்தும்,
ஆள்கடத்தல் குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் !

நாள் : 29.08.2016,திங்கட்கிழமை,காலை 10 மணிக்கு
இடம் : கவுந்தப்பாடி நால்ரோடு.

ஈரோடு மாவட்டம்,சலங்கப்பாளையம் திராவிடர் விடுதலைக் கழக தோழருடைய மனைவி தேஜாஶ்ரீ அவர்கள் கடத்தப்பட்ட சம்வத்தின் மீதான வழக்கில் மக்கள் கைப்பிடியாக பிடித்து கடத்தல் குற்றவாளிகளை காவல்துறையிடம் ஒப்படைத்தும் குற்றவாளிகள் மேல் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்காமலும்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்கள் இரண்டையும் பிடித்துக்கொடுத்தும் அவற்றை பறிமுதல் செய்யாமலும் கடமை ஆற்றாமல் மெத்தன போக்குடன் நடந்து கொள்ளும் கவுந்தப்பாடி காவல்நிலைய அதிகாரிகளை கண்டித்தும், ஆள்கடத்தல் குற்றவாளிகள் மீது உடனடியாக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இப்படிக்கு,
திராவிடர் விடுதலைக் கழகம்,
ஜாதிமறுப்பு கூட்டியக்கம்.

You may also like...