பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுத் தலைவர்களுக்கு ஒரு விண்ணப்பம்
சென்னை மாகாணத்தில் சிறப்பாக தமிழ் நாட்டில் சுமார் 10 வருஷங் களுக்கு முன்பாக பார்ப்பனரல்லாதார் சங்கம் ஏற்பட்டதும் அதை ஏற்படுத்த ஸ்ரீமான் டாக்டர் நாயர் அவர்கள் முதன்மையாகவும், சர்.தியாகராய செட்டி யார் உதவியாகவும் இருந்து அதை உலகினர் ஒப்புக் கொள்ளும்படி செய்து, தங்களது கொள்கைகளையும் நிலை நிறுத்தியது உலகமறிந்த விஷயம். ஆனால் இன்றைய தினம் நம்மில் பெரும்பான்மையான மக்கள் அக்கட்சியின் பெயரைச் சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறார்கள். காரணமென்ன? தமிழ்நாட்டில் இக்கட்சியின் கொள்கைகளைப் பிரசாரம் செய்ய பணமில்லாதிருந்ததா? பத்திரிகை இல்லாதிருந்ததா? உத்தியோக மும், அதிகாரமும் இல்லாமலிருந்ததா? எல்லாமிருந்தும் இக்கதி ஆவா னேன்? எதிரிகளின் சூழ்ச்சியும் தந்திரமும் என்று சொல்லலாம். ஸ்ரீமான்கள் நாயரும் செட்டியாரும் உள்ள காலத்திலும் இவ்வெதிரிகள் இருந்தவர்கள் தானே? இப்பொழுது மாத்திரம் இவர்கள் சூழ்ச்சி பலிப்பானேன்? ஒருசமயம் நமக்குள் ளாகவே எதிரிகள் ஏற்பட்டுவிட்டார்கள் என்று சொல்லலாம். அப்படியானால் இனிமேலாவது நமக்குள்ளாக எதிரிகள் ஏற்படா மலிருக்க இப்போது என்ன செய்யப் போகிறோம்? இனிமேலாவது...