Author: admin

சைமன் கமிஷன் யாதாஸ்து 0

சைமன் கமிஷன் யாதாஸ்து

சைமன் கமிஷன் யாதாஸ்த்தின் முதல் பாகம் வெளியிடப்பட்டு விட்டது. அதைப்பற்றி நாம் இப்போது எவ்வித அபிப்பிராயமும் கூற முற்பட வில்லை. அன்றியும் அதிலிருந்து இந்தியர்களுக்கு எம்மாதிரியான அரசியல் உரிமை கிடைக்கப் போகின்றது என்பதைப் பற்றியும் நாம் சிறிதும் கவலைப் பட வில்லை. ஏனெனில் அதெல்லாம் உத்தியோகமும் பதவியும் அனுபவிக் கக் கருதி அதற்காகவே பல ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு காத்திருப் பவர்களுக்கே விட்டு விடுகின்றோம். நம்மைப் பொறுத்தவரை சைமன் கமிஷன் முடிவான யாதாஸ்த்தில் தீண்டப்படாதவர்கள், பெண்கள், ஜாதி வித்தியாசத்தினால் இழிவுபடுத்தப்பட்டவர்கள் ஆகியவர்கள் விடுதலை விஷயத்திலும் முகமதியர்களும், கிருஸ்தவர்களும் “இந்து”க்களிடம் அவநம்பிக்கை கொண்டு எதிரிகளாயில்லாமல் ஒற்றுமையாய் வாழவும் பொதுவாக எல்லோருக்குமே சமமாக கல்வி கிடைக்கும்படி செய்யவும் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றி யும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ விஷயத்தில் தீண்டாதார்கள், பெண்கள், கிருஸ்துவர் கள், மகமதியர்கள் ஆகியவர்களுக்கு எவ்விதமான ஏற்பாடுகள் செய்யப்பட் டிருக்கின்றது என்கின்ற விஷயத்திலுமே தான் கமிஷனின் சிபார்சை அறிந்து...

பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு  சாவுமணி 0

பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு  சாவுமணி

தென்னாட்டில் வெகுகாலமாக பார்ப்பனராதிக்கத்தினால் உத்தியோக விஷயத்திலும் சமூக விஷயத்திலும் கஷ்டமனுபவித்து வந்த பார்ப்பன ரல்லாதார்களில் சில பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து சுமார் 10, 13 வருஷங்களுக்கு முன்பாக தென் இந்தியர்களின் நல உரிமைச் சங்கம் என்னும் பேரால் பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு சமூக சமத்துவத் தையும் உத்தியோக வகுப்புவாரி பிரநிதித்துவத்தையும் முக்கிய கொள்கை யாய் வைத்து பார்ப்பனர்களை அந்த ஸ்தாபனத்தில் சேர்த்துக் கொள்வ தில்லை என்கின்ற விதிகளையும் ஏற்படுத்தி பார்ப்பனரல்லாத பொது ஜனங்க ளின் ஆதரவையும் பெற்று “ஜஸ்டிஸ்” என்கின்ற ஒரு ஆங்கில பத்திரிகை யையும் “திராவிடன்” என்கின்ற ஒரு தமிழ் பத்திரிகையும் அந்த ஸ்தாபனத் தின் சார்பாக நடத்தி, காங்கிரசின் பேராலும் தேசீயத்தின் பேராலும் பார்ப்பனர் களும் அவர்கள் தாசர்களும் செய்துவந்த தொல்லைகளை எல்லாம் சமாளித்து அறிவாளி மக்களிடத்திலும் அரசாங்கத்தினிடத்திலும் ஒத்துழைத் ததின் பயனால் நாட்டில் அந்த ஸ்தாபனத்திற்கும் பத்திரிகைகளுக்கும் பெரும் பான்மையான பார்ப்பனரல்லாத மக்களின் சரியான...

ஒரு நல்ல சேதி  ஈரோடு முனிசிபாலிடி 0

ஒரு நல்ல சேதி ஈரோடு முனிசிபாலிடி

  ஈரோடு முனிசிபாலிடியானது கொஞ்ச காலத்திற்கு முன் இருந்து வந்த பொருப்பற்றதும், நாணையமற்றதுமான நிர்வாகத்தின் பயனாய் செல்வங்கள் பாழாகி கண்டபடி கண்டவர்களால் ஒழுங்குகளும், பண்டங் களும் கையாளப்பட்டு கடைசியாக கடனில் மூழ்கி சம்பளம் வகையறா பட்டுவாடா செய்யவும் சக்தியற்று இந்த மாகாண பாப்பர் முனிசிபா லிடியிலும் ஒழுக்க ஈனமான முனிசிபாலிடியிலும் முதல்நெம்பராய் இருந்து வந்ததானது மாறி, தற்கால சேர்மென் ஜனாப், கே.எ. ஷேக்தாவூத் சாயபு அவர்கள் காலத்தில் நாணையமும், பொருப்பும் பெற்று செல்வ நிலைமையிலும் சற்று நன்னிலை அடைந்து இப்போது நல்ல முனிசிபாலிடிகளில் ஒன்று என்று சொல்லத்தக்க பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.  அவரது சொந்த செல்வாக்கினால் ஈரோடு முனிசிபாலிடியால் கல்வி இலாக்காவுக்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ. 44,000 – ம் கவர்ன்மெண்டார் தள்ளிக் கொடுத்து வஜா செய்து கொண்டார்கள்.  மற்றும் அவரது சொந்த பிரயத்தனத்தினால் ஜில்லா போர்டுக்கு கொடுப்பட வேண்டிய 2, 3 வருஷ பாக்கியாகிய சுமார் 25,000 ரூபாயும் ஒருவிதத்தில்...

ஆத்மா 0

ஆத்மா

ஆத்மா, என்னும் விஷயத்தைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும் நமது நண்பர்கள் பலர் இது ஒரு தத்துவ விசாரணை விஷயம். இதைப்பற்றி எழுதவோ, பேசவோ வேண்டிய அவசியம் சமுதாய சீர்திருத் தக்காரருக்கு எதற்கு? சுயமரியாதைக்காரர்கள் அனாவசியமாய் கண்ட கண்ட விசயங்களிலெல்லாம் தலையிட்டு சீர்திருத்தத்  துறையைப் பாழாக்கிக் கொள்ளுவானேன்? என்று கூசாமல் பேசுவார்கள்.  ஆனால் இப்படிப்பட்ட நண்பர்கள் சமுதாய சீர்த்திருத்தம் என்பது என்ன என்பதாக சரிவர உணராத வர்கள் என்று நினைத்துவிட்டு நம் பாட்டுக்கு நாம் மேலே செல்லக் கூடிய நிலையிலேயே இருக்கின்றோம். ஏனெனில் சமுதாய சீர்த்திருத்தம் என்றால் ஏதோ  அங்கும் இங்கும் இடிந்துபோன – சுவண்டு போன – ஆடிப்போன பாகங்களுக்கு சுரண்டி கூறுகுத்தி, மண்ணைக் குழைத்து சந்து பொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அநேகர் கருதி இருக்கின்றார்கள்.  ஆனால் நம்மைப் பொருத்த வரை நாம் அம்மாதிரி துறையில் உழைக்கும் ஒரு சமுதாய சீர்திருத்தக்காரரல்ல என்பதை முதலில் தெரித்துக் கொள்ளுகின்றோம்.  மற்ற படி...

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

1. “கண்ணுக்கும், மனதிற்கும், அறிவிற்கும் எட்டாததும், வாயினால் விவரிக்க முடியாததுமாக ஒன்று உண்டு. அது தான் கடவுள்” என்று சொல்லு வார்களானால் அவர்கள் தான் பகுத்தறிவற்றவர்கள் ஆவார்கள், ஏனெனில் அவர்கள் தாங்கள் சொல்லுவதிலிருந்தே முன்னுக்குப் பின் முரணாயிருப் பதை அறிகிறார்களில்லை. 2. தான் செய்யும் அக்கிரமங்களுக்கு பரிகாரமும் மன்னிப்பும் கிடைப் பதற்காகவும், அடுத்த ஜன்மத்தில் சுகமடைவதற்காகவும் என்று நினைத்துக் கொண்டு கடவுள் பக்தி செலுத்துகின்றவர்களும் சமயச் சின்னங்கள் அணிபவர்களும் திருடர்கள் அல்லது மூடர்களே ஆவார்கள். 3. “மோட்சத்திற்காக நாமம், விபூதி தரித்து தாரகம், பஞ்சாட்சரம் ஜெபிப்பவர்களும், சுயேச்சையாக கதர் உடுத்தி, கதர்க் குல்லாய் போட்டுக் கொண்டு இராட்டினம், தக்ளி, நூல் நூற்பவர்களும் ஒரேவிதமான மூட நம்பிக்கையின் பாற்பட்டவர்களும், சுய அறிவற்ற செம்மறியாட்டுக் கூட்டத் தில் சேர்ந்தவர்களுமேயாவார்கள்”. 4. “கடவுள் தங்களுக்கு “நன்மை” செய்ததற்காக நன்றி செலுத்த வேண்டுமென்று சிலர் சொல்லுவதனால் கடவுள் பலருக்குத் “தீமை” செய்ததற்காக தீமையை அனுபவிப்பவர்கள் கடவுளை என்ன...

சுயமரியாதையும் சுய ஆட்சியையும் பற்றி ஒரு சுய ஆட்சிப் பார்ப்பானுக்கும் சுயமரியாதை பார்ப்பனரல்லாதாருக்கும் சம்பாஷணை 0

சுயமரியாதையும் சுய ஆட்சியையும் பற்றி ஒரு சுய ஆட்சிப் பார்ப்பானுக்கும் சுயமரியாதை பார்ப்பனரல்லாதாருக்கும் சம்பாஷணை

– சித்திரபுத்திரன் சுய ஆட்சி:- என்ன சுயமரியாதை! உன்னை ஒரு வாரமாகக் கண்ணி லேயே காண முடியவில்லை. எங்கு போய் விட்டாய்? சுயமரியாதை:- ஓ! சுய ஆட்சியே! நான் ஈரோட்டுக்குப் போயிருந் தேன். சு. ஆ:- ஈரோட்டில் ஒரு வாரமாக என்ன வேலை உனக்கு? சு. ம:- ஈரோட்டில் சுயமரியாதை மகாநாடு நடந்ததல்லவா? அதற்காக ஒரு வாரம் முன்னேயே போய் மகாநாட்டு வேலையில் கலந்து கொண்டு என்னால் கூடியதைச் செய்து கொண்டிருந்தேன். சு. ஆ:- ஆமா! ஆமா!! நான் கூட கேள்விப் பட்டேன். சுயமரியாதை மகாநாடு நிரம்ப நன்றாய் நடந்ததாகவும் மூன்று நான்கு ஆயிரம் பேருக்கு மேலாகவே வந்திருந்ததாகவும், பெண்களும், ஆண்களும், ஆதி திராவிடர்களும் கூட ஏராளமாய் வந்திருந்ததாகவும் கேள்விப் பட்டேன். சு. ம:- ஆதி திராவிடர்கள் வந்திருந்தது மாத்திரம்தானா நீ கண்டாய்? சமையல் பரிமாறினதில் கூட ஆதி திராவிடர்கள் கலந்திருந்தார்கள். மற்றொரு சமையல் இடத்தில் 2, 3 ஆதி திராவிடர்களும்...

சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி  அய்யர் – அய்யங்கார் சம்பாஷணை  – சித்திரபுத்திரன் 0

சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி அய்யர் – அய்யங்கார் சம்பாஷணை – சித்திரபுத்திரன்

  அய்யர் :- என்ன அய்யங்கார்வாள் சுயமரியாதை இயக்கம் ஆரம்ப மான காலத்திலேயே நான் பிராமணாளுக்கு ஆபத்து வந்துவிட்டதே என்றும்  இதற்கு ஏதாவது வழிசெய்யக் கூடாதா என்றும் கேட்டதற்கு “அது இந்தியாவில் மாத்திரம் நடக்காது சீக்கிரம் ஒழிந்துவிடும்” என்று சொன்னீர். இப்பொழுது நாளுக்கு நாள் அது வளர்ந்து கொண்டே வருகிறதே. எல்லோரும் அதை ஆதரிக்கவும் துணிந்துவிட்டார்களே:  அதாவது சைவர் கள் ஒன்று கூடி“ 3000 வருஷத்திற்கு முன் இருந்த கொள்கைகள் எல்லாம் சுயமரியாதை இயக்க கொள்கைகள்தான்” என்கிறார்கள். வைணவர்கள் ஒன்று கூடி  தங்கள் கொள்கையும் அதாவது “ராமாநுஜர் கொள்கையே சுயமரியாதை இயக்க கொள்கை” என்கிறார்கள்.  ஸ்மார்த்தர்கள் “சங்கரர் மதமே வேதாந்த மதம். ஆகையால் ஸ்மார்த்த மதமே சுயமரியாதை  இயக்க கொள்கைதான்” என்கின்றார்கள். மகமதியர்கள் ஒன்றுகூடி “1,300 வருஷத்திற்கு முன்னேயே சுயமரியாதை இயக்க கொள்கையைத்தான் நபிகள் நாயகம் உபதேசித் திருக்கிறார்கள்” என்கின்றார்கள்.  பௌத்தர்கள் “2,000 வருஷத்திற்கு முன்னா லேயே  பகவான் புத்தர் சுயமரியாதை...

சுயமரியாதை இயக்க அபிமானிகளுக்கு ஒரு வேண்டுகோள் 0

சுயமரியாதை இயக்க அபிமானிகளுக்கு ஒரு வேண்டுகோள்

நமது இயக்கம் மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உயர்வு தாழ்வை வெறுக்கிறது. ஆலய உருவ வழிபாட்டை வெறுக்கிறது; மனிதனை மனிதன் மதத்தின்பேராலும், கடவுளின் பேராலும், சமயத்தின் பேராலும், சடங்குகளின் பேராலும் அடிமைப்படுத்துவதையும் ஏமாற்றிப் பிழைப்பதையும் வெறுக் கிறது. இவ்வளவும் இந்து மதத்தால் நேரிட்ட தீமை என்று கருதி மதத்திலும் சாஸ்திரங்களிலும் உள்ள ஊழல்களை வெளிப்படுத்தி வருகிறது. மனிதனை மனிதன் எவ்வழியிலும் ஏமாற்றி பிழைக்கக்கூடாது. இதுவே நமது இயக்கத் தின் முக்கிய கொள்கை. இவைகளை வருணாசிரம தருமிகள் ஒப்புக் கொள்ளா விட்டாலும் நன்கு படித்தவர்களும் உலக ஞானம் உள்ளவர்களும் ஒருவாறு ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். ஆயினும் இவர்களும் காரியத்தில் காட்ட அஞ்சுகிறார்கள், மனிதனுக்கு பிறப்பு, இறப்பு, கலியாணம் முதலியவைகளில் சடங்கு அவசியமா என்பதை நாம் சிந்திப்பதே கிடையாது. சடங்கு செய்ய வேண்டியது அவசியமானால் யார் செய்தாலும் நமக்கு ஒன்று தான். பிராமணன் நம்மால் பிழைப்பதுமன்றி நம்மை இழிவாகக்கருதி நடத்துகிறான் என்று நாம் சொல்லலாம். இதே மாதிரி...

ஏழாவதாண்டு 0

ஏழாவதாண்டு

நமது “குடி அரசு” தோன்றி ஆறாண்டு நிறைவு பெற்று ஏழாவதாண் டின் முதல் மலராய் இவ்வாரப்பதிப்பு வெளியாகின்றது. இந்த சென்ற ஆறாண்டுகளாய் “குடி அரசு”  நாட்டிற்கு செய்து வந்த தொண்டைப்பற்றி இதன் வாசகர்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்த நாட்டின் சமுதாய உலகத்திலும், மத உலகத்திலும், அரசியல் உலகத்திலும் இந்த வீசம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாறுதல்களுக்கு ஒரு சிறு அளவாவது “குடி அரசு” தன்னை பொருப்பாளியாக்கிக் கொள்ளுவதில் யாரும் ஆnக்ஷபணையோ பொறாமையோ படமாட்டார்கள் என்றே கருதுகின்றோம். “குடி அரசி”ன் கொள்கைகளை ஆதிமுதற்கொண்டு இதுவரையில் கவனித்துவந்த எவரும் சற்று மேல்நிலையில் உள்ளவர்கள் அவற்றை “மிகவும் அதிதீவிரக்கொள்கை” யென்றும்,  “சாத்திய மற்றது” என்றும் . “இது எந்தக்காலத்தில் நடக்கப்போகின்றது” என்றும், “கொள்கை சரி, போக்கு சரியல்ல” என்றும், “மிக வேகமாய் போகின்றது” என்றும், மற்றும் இது போன்ற பல மாதிரியாகவே சொல்லிவந்ததும், சற்று கீழ் நிலையில் உள்ளவர் கள் குடி அரசு கொள்கை “கடவுள்...

இந்து மத தர்ம பரிபாலன சட்டம் 0

இந்து மத தர்ம பரிபாலன சட்டம்

இந்து மத பரிபாலன சட்டம் ஒன்று சென்னை சட்ட சபையில் சுமார் 6, 7 வருஷத்திற்கு முன் கொண்டுவரப்பட்ட காலத்தில் பார்ப்பனர் எல்லோரும் ஏகோபித்தும் பார்ப்பனரல்லாதார்களில் பலர் பார்ப்பனருடன் சேர்ந்து கொண்டும் அச்சட்டத்தை “மதத்தில் சர்க்கார் பிரவேசித்து விட்டார்கள்” என்று ஆnக்ஷபித்ததுடன் இச்சட்டம் கொண்டு வரப்பட்டவர் கள் மீதும் கெட்ட எண்ணம் கற்பித்து எவ்வளவோ எதிர்பிரசாரம் செய்தும் வந்தது யாவரும் அறிந்ததேயாகும். அதுமாத்திரமல்லாமல் காங்கிரஸ் முதலிய அரசியல் ஸ்தாபனங் களின் பேராலும் பல பார்ப்பனர்கள் அச்சட்டத்தை எதிர்த்ததும் இந்தக் காரணத்தைவைத்தே தேர்தல்களில் எதிர்பிரசாரம் செய்ததும் பொது ஜனங் களுக்கு ஞாபகமிருக்கலாம். ‘இந்து’ ‘சுதேசமித்திரன்’ முதலிய “தேசீய” பத்திரிகைகளும் அச்சட்டத்தைக் கண்டித்து எழுதி பார்ப்பன சந்தாதாரர் களைக் கொண்டு மகஜர்கள் வாங்கி சர்க்காருக்கு அனுப்பியதும் ஞாபக மிருக்கலாம். அப்படிப்பட்ட நெருக்கடியான காலத்தில் நாமும் நமது நண்பர் கள் பலரும் பொது ஜன அபிப்பிராயம் என்பதற்கு எதிராய் நின்று பார்ப்பனர் களின் எதிர்ப்புகளை யெல்லாம்...

கருங்கல் பாளையம் முனிசிபல்   பெண் பாடசாலை 0

கருங்கல் பாளையம் முனிசிபல் பெண் பாடசாலை

பெண்கள் யாவரும்படிக்கவேண்டும். தங்களுடைய சீர்திருத்தத்தின் படி அரசாங்க உத்தியோகங்கள் பெரும்பாலும் இனி பெண்களுக்கே வழங்கப்படுமாதலால் அவர்கள் படித்து தயாராயிருக்க வேண்டும். இனி மேல் சுயமரியாதை உள்ள எந்த ஆண்களும் படித்த பெண்ணைத்தான் கலியாணம் செய்துகொள்வார்கள். ஆதலால் பெண்கள் படித்திராவிட்டால் அவர்கள் “கன்னியா ஸ்திரிகள்” மடத்திற்குதான் இனி அனுப்பப்படுவார்கள். அனேக ஆண்கள் தாங்கள் கல்யாணம் செய்து கொண்ட பிறகுகூட இப்போது யோசித்துப்பார்த்து தங்களது சுயமரியாதையை உத்தேசித்து தாங்கள் முன்கலியானம்செய்து கொண்ட படிக்காத பெண்களை தள்ளிவிட்டு படித்த பெண்களாகப் பார்த்து மறு விவாகம் செய்துகொள்ளப் பார்க்கின்றார் கள். ஆதலால் பெரிய பெண்கள் கூட தங்களுக்கு ‘எப்படியோ ஒருவிதத்தில் கல்யாணமாகிவிட்டது. இனி பயமில்லை’ என்று குருட்டு நம்பிக்கையில் இருந்துவிடாமல் அவர்களும் கஷ்டப்பட்டு படித்து தங்கள் தங்கள் புருஷன் மார்களை வேறு கல்யாணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படா மல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் படித்தால் கள்ளப் புருஷர் களுக்குக் கடிதம் எழுதுவார்கள் என்று மூடப்...

காந்தியும் நாகரீகமும் 0

காந்தியும் நாகரீகமும்

உயர்திரு. காந்தியவர்கள் தற்கால முற்போக்குக்கும், சீர்திருத்தத்திற்கும், நாகரீகத்திற்கும் பொருத்தமற்றவர் என்பதோடு அவர் பழைய கால நிலை மைக்கே மக்கள் போகவேண்டும் என்கின்ற அறிவு உள்ளவர் என்றும் மூட நம்பிக்கையிலும் மூடப்பழக்க வழக்கங்களிலும் மிகுதியும் ஈடுபட வேண்டு மென்றும் ஆகவே இந்தியா விடுதலைபெறவோ முற்போக்கடையவோ நாகரீகம் பெறவோ திரு.காந்தியிடத்தில் நம்பிக்கை வைக்க முடியா தென்றும் கொஞ்சகாலமாக எழுதிவருகின்றோம். அதுமாத்திரமல்லாமல் அவர் இந்தியர்களின் பிரதிநிதியாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கூட எழுதியிருந்தோம். இவைகளையெல்லாம் அனுசரித்தே திருநெல்வேலி ஜில்லா தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டிலும் பல காரணங்கள் காட்டி திரு. காந்தி இடம் நம்பிக்கை இல்லை என்று ஒரு தீர்மானமும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானமானது சிலருக்கு அதிருப்தியைக் கொடுத்ததாகவும் தெரியவருகின்றது. காங்கிரசிலும் காந்தீயத்திலும் புதிதாக ஞானஸ்நானம் பெற்று மதம் மாறின சில பக்தர்களுக்கு மேல் கண்ட நம்பிக்கையில்லாத தீர்மானத்தால் மிக்க மனவருத்தமேற்பட்டதாகவும் கேட்டு மிக வருந்தி னோம். பலர் துக்கம் விசாரித்ததாகவும் தெரிந்தோம். ஆனால் இவை...

கலைகள் 0

கலைகள்

சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ளு வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்துகொண்டு “சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள்” என்று பழிசுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள். ஆகவே இது அவர்களுடைய நியாயமற்ற தன்மையையும் பயங்காளித்தன்மையையும் வேறு வழியில் சமாதானம் சொல்ல சக்தியற்ற தன்மையுமே காட்டுவதாகின்றது. கோவில்களைக் குற்றம்சொல்லி அதில் உள்ள விக்கிரகங்களின் ஆபாசங்களை எடுத்துக்காட்டி இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும் இந்த ஆபாசத்திற்காக இவ்வளவு பணச்செலவும் நேரச்செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்துகொண்டு “அவைகள் அவசியம் இருக்க வேண்டும்” என்றும் “அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்” என்றும் “சாமி பக்திக்காக தாங்கள் கோவில்களைக் காப்பாற்றுவதில்லை” என்றும் “ஓவியக்கலை அறிவுக்காக கோவில்கள்...

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!! 0

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

காங்கிரஸ் தீர்மானங்களும் சட்டமறுப்பு சத்தியாக்கிரகங்களும் தென்னாட்டில் தேர்தலையே குறிக்கோளாகக் கொண்டது என்பதாக நாம் பலமுறை சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றோம். அதுமாத்திரமல்லாமல் சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டவுடன் இனி “தலைவர்களுக்கும்” (பார்ப்பனர்களுக்கும்) “தொண்டர்களுக்கும்” (பார்ப்பனரல்லாதார்க்கும்) தேர்தல் பிரசாரத்தைவிட வேறு பிரசாரம் இருக் காது என்றும் தேர்தலை உத்தேசித்தே ஆங்காங்கு கள்ளுக்கடை மறியல், ஜவுளிக்கடை மறியல் ஆகியவைகள் நடத்தப்படும் என்றும் எழுதியும் இருந்தோம் . இந்த விஷயங்கள் வாசகர்களுக்கு அப்போழுது சற்று அலட் சியமாகக் கருதப்படக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் இப்போது நாம் எழுதியதுபோலவே தேர்தல் பிரசாரங்கள் “தலைவர்களால்” (பார்ப்பனர் களால்) தமிழ் நாட்டில் தொடங்கப்பட்டு விட்டது. அதற்கு அனுகூலமாகத் தொண்டர்கள் (பார்ப்பனரல்லாதவர்கள்) ஆங்காங்கு இந்தத் தலைவர் களுக்கு வரவேற்பு அளித்து கூட்டம் கூட்டி ஜே போட்டு ஓட்டர்களை அறிமுகப்படுத்தி அத்தலைவர்களின் உத்திரவுக்குக் கீழ்ப்படியும்படி செய்யும்படியான வேலையில் மும்மரமாய் ஈடுபட்டு இருக்கிறார்கள். சில இடங்களில் பார்ப்பனரல்லாதார் பணமுடிப்பும் அளிக்கின்றார்கள். சமீபத்தில் புதிய சட்டத்தின் படி ஸ்தல ஸ்தாபன...

தீண்டாமை 0

தீண்டாமை

இந்தியாவில் இந்து முஸ்லீம் ஒற்றுமையைவிட சுயராஜியத்தை விட – பூரண சுயேச்சையை விட – காந்தி – இர்வின் ஒப்பந்தத்தைவிட – தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டியது முக்கியமானது என்கின்ற விஷயம் கடுகளவு அறிவும் மனிதத் தன்மையும் உடையவர்களாகிய எவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதாகும். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் இப்போது அழுவாரற்ற பிணமாய், கேள்வி கேட்பாடு அற்று அலக்ஷியப் படுத்தப்பட்டு கிடக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் அவர்கள் அதாவது தீண்டப்படாதார் என்பவர்கள் தாங்களாகவே ஏதாவது ஒரு முயற்சி செய்து தங்கள் இழிவுகளையும் கஷ்டங்களையும் போக்கிக்கொள்ள முயற்சிப்ப தையும் இந்தப்பாழும் சுயராஜியமும் பூரண சுயேச்சையும் என்கின்ற வெறும் வாய் வார்த்தைகள் தோன்றி பழையவைகளையே புலப்படுத்திக் கொள்ள வும் புதியவைகளை தலைகாட்டாமல் இருக்கவும் முயற்சி செய்வதன் மூலம் தடுத்து அழுத்தி வைக்கப்பட்டும் வருகின்றது. இந்த நெறுக்கடியான சமயத் தில் இந்தமுக்கியமான விஷயம் (தீண்டாமைக் கொடுமை விஷயம்) இக் கதியானால் இனி எப்போது தலையெடுக்க முடியும் என்பது நமக்கு விளங்க வில்லை....

தென் இந்திய ரயில்வே கம்பெனி லிமிடெட் 0

தென் இந்திய ரயில்வே கம்பெனி லிமிடெட்

தென் இந்திய ரயில்வேயின் நிர்வாகம் முழுவதும் பிராமணமயமாக இருப்பது யாவரும் நன்கறிந்த விஷயம். பிராமணரல்லாதாருக்கு ஒரு வித சுதந்திரமுமில்லாமல், பிராமணர்களாலேயே கொள்ளையிடப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றது. பிராமண ரல்லாதாருக்கு ஏஜண்டு ஆபீசிலும், இன்னும் இதர நிர்வாக ஸ்தாபனங்களிலும் இடம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கின்றது. இந்த ரயில்வேயின் நிர்வாகத்தை ஓர் பிராமண அக்கிரகாரமென்று கூறுவது மிகையாகாது. இந்நிலைமைக்கு ரயில்வேக் கம்பெனியின் நிர்வாகஸ்தர்களும் இது வரையிலும் உடந்தையாகவேத்தான் இருந்துகொண்டு வந்திருக்கின்றார்கள். ஜனத்தொகையின் வீதாசாரப்படி ரயில்வேக்களில் உத்தியோகம் வழங்கப்பட வேண்டுமென சட்ட சபைகளில் போராடியதற்கு “அது கம்பெனிகாரர்களின் ஆதிக்கத்துள்ளடங்கியிருப்ப தால், அவர்களுடைய பிரியத்தைப் பொருத்தது” என இதுவரை கூறப்பட்டு வந்ததையும் சகலரும் அறிவார்கள். ஆனால், இப்பொழுது தென் இந்திய ரயில்வேயின் ஏஜண்டின் மனம் முற்றிலும் மாறுதலடைந்து, பிராமண ரல்லாதாருக்கும், அவர்களுடைய தொகையின் வீதாசாரம் உரிமைகளும், உத்தியோகங்களும் வழங்கப்படவேண்டுமென உறுதி கொண்டு, அதற்கேற்ற வாறு “ஸ்டாப் செலக்ஷன் போர்டு” என்னும் ஒரு போர்டை நியமித்திருப்பது மிகவும் போற்றக்கூடியதோர்...

திருடர் அல்லாவிட்டால் மூடர் 0

திருடர் அல்லாவிட்டால் மூடர்

திருநெல்வேலி ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இம்மாதம் 7, 8, 9, 10 தேதிகளில் திருநெல்வேலியில் வெகுசிறப்பாய் நடந்தேறியது. அம்மகாநாடு அங்கு கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டவுடன் திருநெல் வேலி நெல்லையப்பர் சாமி கோவிலில் மாஜி தாசில்தார் திருவாளர் எம். வி. நெல்லையப்ப பிள்ளை அவர்கள் தலைமையில் ஆஸ்திக மகாநாடு என்ப தாக ஒன்றைக் கூட்டி “சுயமரியாதைக்காரர்கள் தங்கள் பத்திரிகையில் ‘திரு டர்க்கழகு திருநீரடித்தல்’ என்று எழுதியிருப்பதால் இது சைவ உலகத்தை அவமானப்படுத்தினதாகும். ஆகவே சுயமரியாதை மகாநாட்டுக்கு சகோதரர் கள் யாரும் போகக்கூடாது” என்று முடிவு செய்து பல கனவான்கள் கையொப் பமுமிட்டுத் துண்டு பிரசுரமும் வழங்கி இருந்தார்கள். அப்படி யிருந்தும் மகாநாட்டுக்கு ஏராளமான சைவர்கள் வந்திருந்ததோடு மகா நாட்டை ஒரு சைவப் பெரியாரும் தேவஸ்தான டிரஸ்டியும் போலீஸ் டிப்டி சூப்ரண் டெண்டெண்டாகயிருந்து பென்ஷன் பெற்றவருமான உயர்திரு. ராவ்சாகிப் கற்பக விநாயகம் பிள்ளை அவர்களே மகாநாட்டை திறந்து வைத்து திரு.ஈ. வெ....

திருவாரூரில் ஈ. வெ. இராமசாமி  சுயமரியாதை இயக்கம் 0

திருவாரூரில் ஈ. வெ. இராமசாமி சுயமரியாதை இயக்கம்

தலைவர் அவர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! முதலாவதாக இக்கூட்டத்திற்கு ஒரு மணிநேரம் தாமதப்பட்டு வந்ததற்கு வருந்துகிறேன். காரணம் நமது சிதம்பரனார் அவர்களுக்கு சற்று உடல் நலிவு ஏற்பட்டு அவருக்குக் காயலா 103 டிகிரி இருந்தபடியினால் கொஞ்சநேரம் அவருக்காக காத்திருக்கும்படி நேரிட்டது. அதனாலேயே தான் நீங்கள் மாலையில் ஏற்பாடு செய்திருந்த மற்றொரு ஊர்வலத்தைக் கூட நான் ஒப்புக் கொள்ள முடியாமற் போய் விட்டது. ஆகையால் அதற்காகவும் எனது வருத்தத்தைத் தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன். அன்றியும் திரு. சிதம் பரனார் அவர்களுக்கும் – திருமதி சிவகாமி அம்மாள் அவர்கட்கும் ஈரோட் டில் சுயமரியாதை கலப்பு “விதவை” திருமணம் நடைபெற்றதை முன்னிட் டும் அவர் இந்த ஊர் பாடசாலைக்கு மாற்றப்பட்டதை முன்னிட்டும், அவர்கள் இருவரும் இந்த ஊருக்கு வரும் போது நானும் எனது மனைவியாரும் கூடவே வரவேண்டுமென்று இவ்வூர் நண்பர்கள் பலர் கேட்டுக் கொண்ட திற்கிணங்க இங்கு வந்தோம். ஆயினும் வந்த சமயத்தில் திரு. சிதம்பரனா ருக்குக் காயலா...

இந்து முஸ்லீம் 0

இந்து முஸ்லீம்

இந்தியாவின் உண்மை விடுதலைக்கு இந்து முஸ்லீம் ஒற்றுமை அவசிய மென்று அடிக்கடி கூறப்படுவதோடு சுமார் 20,30 வருஷகாலமாக அதற்காக பல பெரியார்களும் பாடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்போது திரு. காந்தியவர்களே இவ்வேலையில் முனைந்திருக்கிறார். இதே காந்தியவர்களால் கொஞ்ச காலத்திற்குமுன் இந்தியாவின் விடுதலைக்கு தீண்டாமை ஒழிய வேண்டியது முதன்மையானகாரியம் என்றும் தீண்டாமை ஒழியாவிட்டால் சுயராஜ்யமே வராது என்றும் சொல் லப்பட்டது. ஆனால் இப்போது அந்த பிரச்சினை வெகு சுலபத்தில் தீர்ந்து போய் விட்டது. அதாவது “சுயராஜ்யம் வந்தால் தீண்டாமை தானாகவே ஒழிந்து போகும்” என்று அவராலேயே சொல்லப்பட்டாய் விட்டது. ஏனெனில் சுயராஜ்யம் வந்தால் மதத்தில் யாரும் பிரவேசிக்கக்கூடாது என்கின்ற நிபந்தனை காந்தி சுயராஜ்யத்தில் முக்கியமான நிபந்தனை யாதலால் “மதத்தில் தீண்டாமை இருப்பதால் அதைப்பற்றி பேசுவது மத விரோதம்” என்று ஒரு உத்திரவு போட்டு விட்டால் தீண்டாமை விஷயம் ஒரே பேச்சில் தானாகவே முடிந்துவிடும் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆகை யால் இப்போது தீண்டாமையைப் பற்றி...

* செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மகாநாடு – தீர்மானங்கள் 0

* செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மகாநாடு – தீர்மானங்கள்

1. புதிதாக கோயில்களும், சத்திரங்களும், வேதபாடசாலைகளும், பசு மடங்களும் அமைக்கக் கூடாது. இதுவரை ஏற்பட்டுள்ளவைகளை பொதுப் பள்ளிக்கூடங்களாகவும், மாணவர்களின் விடுதிகளாகவும், குழந்தைகளுக்கு பாலுதவும் ஸ்தாபனங்களாகவும், எல்லா மக்களுக்கும் சமமாய் பயன்படும்படி மாற்றிவிடவேண்டும். 2. கலப்பு மணம் செய்யப்பட வேண்டும். 3. விதவைகள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும். 4. சாரதா சட்டம் அமுலுக்கு வர வேண்டும். 5. பெண்களுக்கு சொத்துரிமை ஏற்படுத்த ஒரு கமிட்டியை ஏற்படுத்த வேண்டும். அதற்காக சட்டசபையில் ஒரு மசோதா சீக்கிரத்தில் கொண்டு வரப்பட வேண்டும். 6. பெண்களுக்கு விலை கொடுக்கும் பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும். 7. கலியாணம் ஒரே நாளில் புரோகிதரின்றி சுறுக்கமாக நடைபெற வேண்டும். 8. பல்லாவரத்து தீர்மானங்கள் பண்டிதர்களின் மனமாறுதலை காண்பிப்பதால் அவைகளைப் போற்றுகின்றது. 9. ஜாதி வித்தியாசம், தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக, ஆர்.கே.ஷண்முகம் அவர்களால் இந்திய சட்டசபையில் கொண்டு வந்திருக் கும் மசோதாவை பாராட்டுவதுடன், கராச்சியில் எல்லா பொதுஸ்தலங்களிலும் எல்லா வகுப்பாருக்கும்...

செட்டிநாடு மகாநாடு 0

செட்டிநாடு மகாநாடு

செட்டிமார் நாட்டு மகாநாடு காரைக்குடியில் இம்மாதம் 7,8 தேதிகளில் இந்திய சட்டசபை அங்கத்தினரும் உபதலைவருமான கோவை உயர்திரு. ஆர்.கே.­ஷண்முகம் அவர்கள் தலைமையில் நடந்தது. மகாநாட்டின் நடவடிக் கைகள் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. மகாநாட்டின் தீர்மானங்கள் பெரிதும் மிகவும் சாதாரணமான தீர்மானங்களேயாகும். ஏனெனில் செட்டிநாடு என்பது மிகுதியும் செல்வவான்கள் ஆதிக்கத்திலிருப் பதாகும். மேலும் அவர்கள் புராண மரியாதையில்மிகுதியும் ஈடுபட்ட வைதீகச் செல்வவான்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்களாவார்கள். அதுமாத்திர மேயல்லாமல் சமூக வாழ்வில் தங்களை வைசிய குலத்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதின் மூலம் வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்து ஜாதிப் பெருமை அடைகின்றவர்களுமாவார்கள். இந்த நிலையில் அதாவது பணத்திமிர், மதத்திமிர், ஜாதித்திமிர் ஆகிய மூன்றிலும் சூழ்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் ஆதிக்கத்தில் உள்ள அந்த நாட்டில் இந்த அளவுக்காவது தீர்மானங்கள் ஏகமனதாய் நிறைவேற்ற முடிந்ததே என்கின்ற மகிழ்ச்சியின் மீதே பலர் திருப்தி அடைகின்றார்கள். ஆனாலும் பொதுமக்கள் முன்னிலையில் இந்த மகாநாட்டை ஒரு சுய மரியாதை மகாநாடு என்று...

0

கன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 06.09.2015 அன்று காலை 09.30 மணிக்கு தக்கலை,ஜோஸ் அரங்கில் நடைபெற்றது. தோழர் நீதிஅரசர் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட தலைவர் தோழர் ஜா.சூசையப்பா தலைமை உரை நிகழ்த்த,மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சதா வாழ்த்திப் பேசினார். மாநில அமைப்புசெயலாலர் தோழர் ரத்தினசாமி அவர்கள் பெரியாரியல் எனும் தலைப்பில் 2 மணிநேரம் உரையாற்றினார்.பிறகு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பிற்பகல் நிகழ்வாக மாநில பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் ”கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதீயம்,நாத்தீகம்’ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார். புதிய பொறுப்பாளர்களாக, மாவட்ட தலைவர் : தோழர் சதா, மாவட்ட செயலாளர் : தோழர் தமிழ்மதி, மாவட்ட பொருளாளர் : தோழர் மஞ்சு குமார், பெரியார் தொழிலாளர்கழக மாவட்ட தலைவர் தோழர் நீதிஅரசர், குழித்துறை நகர தலைவர் கே.எஸ்.தாமஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இக்கலந்துயாடல் கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் பெரியார் படம் அச்சிட்ட குறிப்பேடும் வழங்கப்பட்டது.

செட்டிமார் நாட்டு முதலாவது             சுயமரியாதை மகாநாடு 0

செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மகாநாடு

சகோதரிகளே! சகோதரர்களே!! நான் திரு. சண்முகம் அவர்களைப் பற்றிப் பேசுவது எனக்கே கொஞ்சம் சங்கடமாகத்தானிருக்கின்றது. ஏனெனில், அவர் எனது ஜில்லாக் காரர். அத்தோடு, இவ்வியக்கத்தில் ஈடுபட்டு, ஒத்துழைக்கும் எனது நண்பரும் ஆவார். அப்படிப்பட்ட ஒருவருடைய பெருமையைப்பற்றி எடுத்துச் சொல்ல ஏற்பட்டது எனக்கும் சங்கடமான நிலைமை, எனது நண்பருக்கும் சங்கடமான நிலைமை ஏற்பட்டது தானென்று சொல்ல வேண்டும். ஆனபோதிலும், கடமை யைச் செலுத்தவேண்டிய அவசியம் நேர்ந்த காலத்தில் சொந்த அசௌகரி யத்தை உத்தேசித்து நழுவிக்கொள்ளப் பார்ப்பது நியாயமாகாது. ஆகவே, சில வார்த்தைகள் சொல்லவேண்டியவனாகயிருக்கின்றேன். ஏனெனில் இந்த நாட்டில், சுயமரியாதை பிரசாரம் நடை பெறக்கூடாதென்றும், இந்த மகாநாடு இங்கு நடத்தப்படக் கூடாதென்றும், பல சிவநேயர்களும், பண நேயர்களும் பெரிய முயற்சிகள் எடுத்து, எவ்வளவோ சூழ்ச்சிகளும் கஷ்டங்களும் செய்து பார்த்தார்களாம். ஒன்றும் பயன்படாமல்போய், பிரசாரமும் தாராளமாய் நடைபெற்று, மகாநாடும் இவ்வளவு ஆடம்பரத்தோடு இத்தனை ஆயிர ஜனங்களுடைய ஆதர வோடு ஆண் -பெண், மேல் ஜாதி –...

ஸ்ரீவில்லிப்புத்தூர் 0

ஸ்ரீவில்லிப்புத்தூர்

சகோதரர்களே! நாங்கள் இங்கு சுயமரியாதை இயக்கசம்மந்தமான பிரசாரம் செய்யவே அழைக்கப்பட்டோம். இங்குள்ள முனிசிபல் தகராறுகளைப்பற்றி எங்களுக் குக் கவலை இல்லை. யாருக்கும் ஓட்டுவாங்கிக் கொடுக்க நாங்கள் இங்கு வரவில்லை. உங்களில் சிலர் நாங்கள் யாரோசிலருக்கு ஜஸ்டிஸ் கக்ஷி பேரால் ஓட்டுவாங்கிக் கொடுக்க வந்திருப்பதாய்க் கருதிக்கொண்டு ஆத்திரப் பட்டதாய் தெரிகின்றது. நாங்கள் பணம் வசூல் செய்யவும் இங்கு வரவில்லை. சுயமரியாதை இயக்கத்தில் என்னைப் பொருத்தமட்டில் இரண்டு காரியங்கள் உறுதி. அதாவது இயக்கத்தின் பேரால் யாரையும் போய் நான் எனக்கு ஓட்டு கேட்பதில்லை. இயக்கத்தின் பெயரால் வயிரு வளர்க்கவோ அல்லது யாரையும் போய் பணம் கேட்கவோ போவதில்லை. இந்த இரண்டு காரியங் களைப் பொருத்தவரை நான் உறுதியாக இருக்கின்ற தாய் நான் என்னைக் கருதிக்கொண்டிருக்கும்வரை எப்படிப்பட்டவர்களுக்கும் பயப்பட வேண்டிய அவசியம் வராது என்றும் எனதுகொள்கை எதுவானாலும் அதை வெளியி லெடுத்துச் சொல்ல பயப்படவேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் கருதி இருக்கின்றேன். இந்த உறுதிதான் இந்த...

திருநெல்வேலி ஜில்லா                                              4-வது சுயமரியாதை மகாநாடு 0

திருநெல்வேலி ஜில்லா 4-வது சுயமரியாதை மகாநாடு

சகோதரர்களே! இன்று இந்த மகாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் திரு. எஸ். இராமநாதன் அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டியதில்லை. அவர் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு மிராசுதார் குமாரர். அவர் எம்.ஏ, பி.எல், படித்துப் பட்டமும் சன்னதும் பெற்று, சென்னையில் ஹைகோர்ட்டு வக்கீலாயிருந்தவர். ஒத்துழையாமையின் போது வக்கீல் வேலையையும், தனது சம்பாதனையையும் விட்டுவெளியேரி சிறை சென்ற வர். இவர் சிறைசென்ற காலம் எது என்றால் இப்போதைப்போல் சிறைக்குப் போகின்றவர்களுக்கு மாமியார் வீட்டுக்கு முதல் தவணை செல்லும் மரு மகனைப் போல் அளவுக்கும் தகுதிக்கும் மீறின உரிமைகளும், சுக போகங் களும் சிறையில் கிடைத்துக் கொண்டிருக்கும் காலம் அல்ல அது. திரு. இராம நாதன் அவர்கள் தலையில் கூடையும் கையில் மண்வெட்டியும் கொடுக்கப் பட்டு தெருவில் ரோட்டுபோடும் வேலைசெய்தவர். சிறை அதிகாரிகளால் பல நிர்பந்த தண்டனைகள் செய்யப்பட்டதல்லாமல் தனி அரையில் அதாவது “கூனு கொட்டடியில்” போட்டு மக்களைப் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் இல்லாமல்...

* தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள் பகத்சிங்

* தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள் பகத்சிங்

1. (ய) பொது உடைமை, சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக தனது உயிரை மனப்பூர்த்தியாக தியாகம் செய்த உண்மை வீரர் பகத்சிங்கை இம் மகாநாடு மனமாரப்பாராட்டுகின்றது. (b) பகத்சிங் தூக்கிலிடப்பட்டதின் மூலம் உண்மையும் வீரமும் பொருந்திய வாலிபர்களின் உள்ளத்தை சமதர்ம தத்துவமும், பொது உடைமைக்கொள்கையும் கவர்ந்து கொள்ளும்படி ஏற்பட்டு விட்டதால் அச்சம்பவத்தை இம்மகாநாடு ஆர்வத்தோடு வரவேற்கின்றது. (உ) இந்திய வாலிபர்கள் இது காரணமாய் தங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆர்வத்தை அறிவும், சாந்தமும் பொருந்திய வழிகளில் தேச சேவைக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றது. விடுதலை சுதந்திரம் 2. இந்திய நாடு உண்மையான விடுதலை பெறுவற்கு வர்ணாசிரம மதவித்தியாசங்களை அடியோடுஅழித்து, கடவுள், மோட்சம், நரகம், கர்ம பலன், மறுபிறப்பு, தலைவிதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கைகளை ஒழித்து, தன்னம்பிக்கையும் தன் முயற்சியும் உண்டாக்கும் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி, பூமிக்குடையவன்- உழுகின்றவன், முதலாளி – தொழிலாளி, ஆண் – பெண், மேல்ஜாதி – கீழ்ஜாதி...

மறுபடியும் பார்ப்பனர் மகாநாடு 0

மறுபடியும் பார்ப்பனர் மகாநாடு

“குடி அரசு” ம் சுயமரியாதை இயக்கமும் ஏற்பட்டது முதல் தமிழ் நாட்டில், பார்ப்பனர்கள் பிராமண மகாநாடு என்றும் வருணாச்சிரம தரும மகாநாடு என்றும், ஆரிய தர்ம பரிபாலன மகாநாடு என்றும், சநாதந தர்ம மகாநாடு என்றும், ஆஸ்திக மகாநாடு என்றும் இந்து மத தர்மமகாநாடு என்றும் இப்படி பல்வேறு பெயர்களால் அடிக்கடி மகாநாடுகளைக் கூட்டுவதும் இந்து மதம், வேதம், சாஸ்திரம், புராணம், ஸ்மிருதி, இதிகாசம், மோட்சம், நரகம் என்பவைகளைப் பற்றிப் பேசி நிலைநிறுத்தித் தங்களை மிக்க உயர்ந்த ஜாதிக் காரர்கள் என்று தாங்களே நினைத்துக்கொண்டு, தங்களுக்கு தனி மரியா தையும் தனி சுதந்திரமும் கொடுக்க வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டு, பார்ப்பனர்கள் தவிர மற்றவர்களையெல்லாம் குறை கூறிக் கொண்டும், அவர்கள் முன்னேற்றத்தைப் பற்றி ஆத்திரமும் பொறாமையுங் கொண்டு அதற்குத் தடைகளைக் கற்பிப்பதும் ஆகிய காரியங்கள் செய்து வருவதோடு, ஸர்க்காரையும் தங்களிஷ்டப்படி நடக்க வேண்டுமென்றும், அதற்கு விரோதமாய் நடந்தால் ஸர்க்காருக்கு விரோதிகளாய் உள்ளவர்க...

தூத்துக்குடி மகாநாடு 0

தூத்துக்குடி மகாநாடு

சுயமரியாதை இயக்க சம்மந்தமான மகாநாடுகளும், பிரசாரக் கூட்டங் களும் தமிழ் நாட்டில் எவ்வளவு மும்மரமாக நடைபெற்று வருகின்றது என்பதோடு அதன் கொள்கைகள் நடைமுறையில் நடந்து எவ்வளவு பயன் அளித்து வருகின்றதென்பதைப்பற்றி நாம் யாருக்கும் எடுத்துக் காட்டவேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம். இவ்வியக்கப் பிரசாரத்தில் ஒரு பாகம் காங்கிரசையும், காந்தீயத் தையும், தாக்கியும், உப்புச் சத்தியாக்கிரகத்தை எதிர்த்தும் வந்ததாகும் என்பதை நாம் யாரும் எடுத்துக்காட்டவேண்டிய அவசியமில்லாமலே ஒப்புக் கொள்ளுகிறோம். அதோடு மாத்திரமல்லாமல் ( நாம் சென்ற வருஷ­ ஆரம்பத்தில் தெரிவித்தது போலவே ) இதன் பயனாய் நம்மீது பலருக்கு அதிருப்தியும், துவேஷமும், கோபமும் ஏற்பட்டு நமக்கும், நமது பத்திரிகைக் கும் விரோதமாகப் பலவித எதிர்ப் பிரசாரங்கள் செய்ய நேர்ந்ததும், அதனால் பல சில்லரைச் சங்கடங்கள் விளைந்ததும் பலர் அறிந்ததேயாகும். எப்படி யிருந்தபோதிலும் ஆரம்பத்தில் நாம் வெளிப்படுத்திய கொள்கைகளில் சிறிதும் விட்டுக் கொடுக்காமலும், அவை சம்மந்தமான நமது அபிப்பி ராயத்தை நாம் ஒண்டியாய் இருந்தபோதிலும்...

கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா 0

கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா

சகோதரர்களே! சகோதரிகளே! இந்தக் கண்ணனூரிலுள்ள பழமையானதும் மிக்க பொதுஜன சேவை செய்து வருவதுமான உங்களுடைய செவ்வாய் தரும சமாஜத்தின் தலைமை வகிக்கும் பெருமையை எனக்குக் கொடுத்ததற்காக முதலில் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சமாஜத்தின் மூலமாக நீங்கள் செய்திருக்கும் பொது நல சேவைக்கும் உங்களை மிகவும் பாராட்டு வதோடு இங்குள்ள பொது ஜனங்களையும் இன்னும் அதிகமாக ஒத்துழைத்து உங்கட்கு வேண்டிய சகாயஞ் செய்து இச்சமாஜத்தால் மக்களுக்கு இன்னும் அதிகமான நன்மை ஏற்படும் படியாய் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள் கிறேன். இவ்வாண்டு விழாவுக்கு நான் தலைமை வகித்ததன் மூலம் எனது சொந்த அபிப்பிராயமாக நான் ஏதாவது சொல்ல வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பதோடு நானும் சொல்ல வேண்டியதும் எனது கடமையாக இருக்கிறது. அப்படிச் சொல்லுவதில் உங்களுடைய சமாஜத்தின் பெயராகிய தர்மம் என்பது பற்றியும் இரண்டு பெரியார்கள் உபன்யாசம் செய்த விஷயங் களாகிய பெண்கள் சுதந்தரம், தர்மம், கடவுள் என்பது பற்றியும் முறையே...

இந்தியாவின் ஜனத்தொகை 0

இந்தியாவின் ஜனத்தொகை

இந்தியாவின் மொத்த ஜனத்தொகை 1931ம் வருஷத்திய கணக்குப்படி 351500000 முப்பத்தைந்து கோடியே பதினைந்து லக்ஷம் 1921ம் வருஷத்தில் 320900000 முப்பத்திரண்டு கோடியே ஒன்பது லக்ஷம். ஆகவே இந்த பத்து வருஷத்தில் 3கோடிக்குமேல்பட்ட ஜனங்கள் பெருகி இருக்கிறார்கள். சராசரி நூற்றுக்குப் பத்துப் பேர்களுக்கு மேலாகவே அதிகரித்திருக்கின் றார்கள். ஒரு தேசம் அதிலும் கைத்தொழில் வளப்பமில்லாத தேசமாகிய அதாவது கைராட்டினத்தைக்கொண்டு பிழைக்கவேண்டிய நமது இந்தியா வானது, தனது ஜனத்தொகையை இப்படி ஏற்றிக்கொண்டே போனால் பிறகு வேலையில்லாத் திண்டாட்டமும், பஞ்சமும், நோயும் ஏற்படாமல் வேறு என்ன செய்யமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. அன்னிய ஆட்சி யை நம் நாட்டைவிட்டுத் துரத்தி விட்டதினாலேயே ஜன விருத்தி குறைந்து விடும் என்று சொல்லமுடியாது. ஆகையால் பஞ்சத்தை ஒழிக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும், அன்னியநாட்டுச் சாமான் களை பஹிஷ்கரிப்பது என்பதைவிட மக்கள் அதிகமான பிள்ளைகளைப் பெறாமல் தடுப்பதற்கு ஆதாரமான கர்ப்பத்தடை முறையை கையாள வேண்டியதே முக்கியமான வேலையாகும். ஆகையால் உண்மையான...

ருஷியா விடுதலை அடைந்த விதம் 0

ருஷியா விடுதலை அடைந்த விதம்

ருஷியா தேசம் விடுதலை அடைந்த விதத்தைப் பற்றி அமெரிக்கா விலுள்ள திரு. சுசீந்திர போஸ் என்னும் இந்திய கனவான் ஒருவர் எழுதி “ருஷிய மதப்புரட்சி” என்னும் வியாசத்தின் சுருக்கத்தை மற்றொரு புறம் பிரசுரித்திருக்கின்றோம். அதை வாசகர்கள் சற்று ஊன்றிப் படித்தால் மத சம்பந்தமாகவும், மதக்குருக்கள், மடாதிபதிகள், புரோகிதர்கள் ஆகியவர்கள் சம்மந்தமாகவும் நாம் 4, 5 வருஷ காலங்களாய் குடி அரசில் எழுதி வரும் விஷயங்களில் அநேகங்களை ஒத்து இருப்பதைக் காணலாம். பழய ருஷியாவில் உள்ள மத நிலைமை மத ஆச்சாரியார்கள் மடாதிபதிகள் ஆகியவர்கள் நிலைமையே தான் இன்றைய நமது இந்தியா விலும் இருந்து வருகின்றது. ஆகவே ருஷியாவின் அந்த பழய நிலை நீங்கிய பிறகு தான் எப்படி ருஷியா சுவாதீன நாடு ஆவதற்கு இடம் ஏற்பட்டதோ அது போலவே இந்தியாவும் மதக் கட்டுப் பாட்டிலிருந்தும் மத ஆச்சாரியர் கள் மடாதிபதிகள் ஆதிக்கத்தில் இருந்தும் புரோகிதர்கள் புரட்டில் இருந்தும் அடியோடு விடுபட்டால் ஒழிய...

ஓர் சம்பாஷணை எதார்த்த வாதியும், கிறிஸ்துமத போதகரும் பேசியது 0

ஓர் சம்பாஷணை எதார்த்த வாதியும், கிறிஸ்துமத போதகரும் பேசியது

எதார்த்தவாதி : ஐயா! தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால், எப்பொழுது எழுதப்பட்டது. போதகர் : பழய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீஷர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது. எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சில விடங்களில் தெய்வத்துக்குப் பயப்படாதவர்கள் தானே? போதகர் : இல்லை சார்; எப்பொழுதும் தெய்வத்துக்குப் பயப்படு கிறவர்கள்தான். எதா : நல்லது, அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே ? போத : ஆம், வாஸ்தவந்தான். ஆனால் அவனை (ரை) சில ஆராட் சியாளர் தன் தகப்பனின் மறுமனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்த தாகக் குறை கூறுவார்கள். எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகியிருக் கலாம். போத : அப்படியானால் (ஆபிராம்) ஆப்பிரகாமைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய தென்ன? எதா : உண்மையாக...

சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர் 0

சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்

சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த ஒரு “nக்ஷத்திர” ஸ்தலமாகும். அது திருநெல்வேலிக்கு 40-வது மயிலில் உள்ள நாகர்கோயி லுக்கு 2, 3 மயில் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னி யாக்குமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர் கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது. அந்த ரோட்டுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொது ஜனங்களின் வரிப்பணத் திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோட்டுகளுள்ள திருவாங் கூர் ராஜியமானது ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவுளாகிய பத்மநாபஸ்வாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோட்டில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங் கள் யாரென்றால் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களும் அந்த பத்பநாப சாமியின் பக்தர்களுமேயாவார்கள். மற்றபடி அந்த சாமியின் பக்தர்களல் லாதவர்களும் இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருஸ்தவர்களுக்கோ, மகமதியர்களுக்கோ, அவ்வழியில் நடப்பதற்கு...

சுயமரியாதை மகாநாடு முடிவு 0

சுயமரியாதை மகாநாடு முடிவு

சகோதரி சகோதரர்களே! நான் மகாநாட்டில் அதிகமாக பேசக் கூடாது என்று கருதியிருந்தேன். ஆகிலும் இந்தக் காரியத்தை நானே செய்ய வேண்டுமென்று நண்பர் சு.மு. ஷண்முகம் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தியதால் சில வார்த்தைகள் சொல்லி எனது கடமையைச் செய்கிறேன். இந்த மகாநாட்டை பிப்ரவரி மாதத்திலேயே நடத்தியிருக்க வேண்டி யது. நானும் என் நண்பர்களும் மலேயா நாடு சுற்றுப் பிராயணஞ் சென்று இருந்ததால் அங்கிருந்து வந்த பிறகு போதிய சாவகாசத்தோடு இப்போது தான் நடத்த முடிந்தது. மலேயா நாட்டிலிருந்து வந்ததும், மகாநாடு நடத்த எண்ணி மகா நாட்டுக்கு யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என்று நண்பர்களோடு கலந்து பேசுகிற போதே முதலில் திரு. ஜயக்கர் அவர்கள் பெயர்தான் மனதுக்குப்பட்டது. உடனே திரு. ஜயக்கர் அவர்களைக் கேட்டு சம்மதிக்கும் படிச் செய்யும் படியாக திரு. ஷண்முகம் அவர்கட்கு டில்லிக்கு தந்தி கொடுத்தேன். அதற்கு திரு. ஜயக்கர் அவர்கள் ஊருக்குப் போய் விட்டார். எழுதியிருக்கிறேன் என்று பதில் வந்தது....

பாராட்டுதலும் வாழ்த்தும் 0

பாராட்டுதலும் வாழ்த்தும்

சென்ற வாரம் நாம் திருச்சி முனிசிபல் சபையார் மக்களுக்குப் புதிதாக சில லைசென்சு வரிகள் விதிக்கப்பட்டதில் பொது ஜனங்களுக்குள் இருந்த அதிருப்தியைக் குறிப்பிட்டு விட்டு, எதிரிகள் பரிகாசம் செய்வார்களே என்று சிறிதும் பயப்படாமல் முனிசிபல் சபையார் தைரியமாய் முன்வந்துப் புதிய வரிகளை குறைத்துவிடவேண்டும் என்று தெரிவித்துக்கொண்டோம். அதுபோலவே திருச்சி முனிசிபல் கவுன்சிலர் அவர்களும், சேர்மென் அவர்களும் தைரியமாய் முன்வந்து அதிகமாகப் போட்ட வரிகளைக் குறைத்து விட்டதாக சேதி எட்டி இருக்கின்றது. இது அவர்களுக்கு மிக்க பெருமையும் கௌரவமுமான காரியமாகும். இதற்காகத் திருச்சி பொது ஜனங் களைப் பாராட்டுவதுடன் கவுன்சிலர்களையும், சேர்மென் அவர்களை யும் நாம் மனமார வாழ்த்துகின்றோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 05.04.1931

கராச்சி 0

கராச்சி

கராச்சி நகரில் இவ்வாரம் நடந்த நடவடிக்கைகள் இந்திய மக்களை திடுக்கிடச் செய்திருக்கும் என்று சொல்லுவது மிகையாகாது. அன்றியும், சாதாரணமாகவே இந்த நான்கு, ஐந்து வருஷங்களாக குடி அரசுப் பத்திரி கையைத் தொடர்ந்து வாசித்து வந்த வாசகர்களுக்கும், சுயமரியாதை இயக்க பிரசாரங்களையும் அம்மகாநாட்டு தீர்மானங்களையும் தொடர்ந்து கேட்டு வந்த பொது ஐனங்களுக்கும், ஒரு பெரிய ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சி யையும் உண்டாக்கி இருக்குமென்பதில் சிறிது சந்தேகமில்லை. ஏனெனில், ‘குடி அரசு’ப் பத்திரிகை சென்ற நான்கு, ஐந்து வருஷங் களாய் எந்தெந்தக் கொள்கைகளை சுமந்து தமிழ்நாடெங்கும் முழக்கி வந்ததோ அந்தக் கொள்கைகளேதான் பெரிதும் இவ்வாரம் முழுவதும் கராச்சியில் உண்மை உணர்ச்சியுள்ள பதினாயிரக்கணக்கான- வாலிபர் களா லும், பெரியவர்களாலும் முழங்கச் செய்யப்பட்டதோடு பெரும் பெரும் தலை வர்கள் என்பவர்களையும் அம்முழக்கங்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு பின்பாட்டு பாடும் படியாக செய்துவிட்டது. அதுமாத்திரம் அல்லா மல் நாம் எந்த எந்தக் கொள்கைகளையும், ஸ்தாபனங்களையும், அதன் தலை வர்களையும் குறிப்பிட்டு...

சேலம் வன்னியகுலக்ஷத்திரியர் மகாநாடு 0

சேலம் வன்னியகுலக்ஷத்திரியர் மகாநாடு

உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள் சகோதரர்களே! உங்கள் சமூகமானது தென்னிந்தியாவில் ஒரு பெரிய சமூகமாக இருக் கிறது. உங்கள் சமூகம் பொதுவாக நாட்டிற்கு பெரிதும் பிரயோஜனமுள்ள விவசாயத்தொழில் முதலிய வேலைகளைச் செய்யக் கூடியதாகவும் இருக் கிறது. உங்கள் சமூகத்தில் அனேக பெரியார்களும் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரிய சமூக மகாநாட்டைத் திறந்து வைக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு ஒரு பெருமையாகவும் கருதிக் கொள்ளுகிறேன். ஆனால் இதைத் திறந்து வைக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் நான் சில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன். அதாவது புராணக் குப்பைகளிலிருந்து ஆதாரம் தேடி நான் உங்கள் குலப் பெருமையைப் புகழ்ந்து கூறி ஆகாயமளாவ உங்களை மகிழ்வித்து ஏமாற்றிவிட்டுப்போக நான் இங்கு வரவில்லை. மற்றபடி நான் எந்தத் துறையில் ஈடுபட்டு வேலை செய்து கொண்டு இருக்கிறேனோ எந்தக் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்குச் சாதகம் ஆனவைகள் எனக் கருதி தொண்டாற்றுகின்றேனோ அதைப்பற்றியேதான் இப்பொழுதும் இந்த...

5  ரூபாய் இனாம் 0

5 ரூபாய் இனாம்

திருவாளர்கள் எஸ். சீனிவாச அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி சாஸ் திரிகள் இவர்கள் விலாசம் முதலில் தெரிவிப்பவர்கட்கு ஐந்து ரூபாய் இனாம் பரிசு அளிக்கப்பெறும். – சித்திரன் குடி அரசு – அறிவிப்பு – 25.05.1930

அறிவிப்பு 0

அறிவிப்பு

இரண்டு ஆண்டுகட்கு முன்னர் திருநெல்வேலி திரு. கே. சுப்ரமண் யம் என்பவர் இந்தியாவில் நமது இயக்கத்தின் பெயரையும் நம்முடைய பெயரையும் உபயோகப்படுத்தி அதன் பயனாய் அநேக தவருதல் செய்த தாக தெரியவந்து, அதை பத்திரிகையில் வெளிப்படுத்தி இருந்தோம். பின்னர் திரு. சுப்ரமண்யம் அவர்கள் இந்தியாவிலிருந்து மலாய் நாடு சென்று அங்கி ருந்து நமக்குதான் ஏதோ தவருதலாய் சில காரியம் செய்து விட்டதற்கு வருந்துவதாகவும், அதை மன்னிக்க வேண்டுமெனவும் இனி இந்த மாதிரி யான எந்த குற்றங்களும் செய்வதில்லை என்றும் நீண்டதொரு மன்னிப்புக் கடிதம் எழுதியிருந்தார். நாமும் அவர் இனிமேல் திருந்திவிடுவாரென நம்பியே இருந்தோம். ஆனால் நாம் மலாய் நாடு சென்று திரும்பிய பின் நமக்கு பினாங்கிலிருந்து ஒரு முக்கிய நண்பரிடமிருந்து வந்திருக்கும் கடித வாயிலாக திரு. சுப்ரமண்யம் அவர்கள் மீண்டும் மலாய் நாட்டில் தவறுத லானவும் மோசடியானதுவுமான குற்றங்கள் பல செய்துவிட்டு வேறு எங்கேயோ சென்று விட்டதாகத் தெரிய வருகிறது. ஆதலால்...

தேவஸ்தான போர்டும் துணிகர மந்திரியும் 0

தேவஸ்தான போர்டும் துணிகர மந்திரியும்

தேவஸ்தான போர்டு நிர்வாக கமிஷனர்கள் நியமனமும் சர்க்கிள் கமிட்டி அங்கத்தினர் நியமனமும் ஒருவாறு முடிவு பெற்றது. இந்த நியமனங் களை பொறுத்தமட்டில் ஏற்பட்ட விசேஷம் என்ன வென்றால் தேவஸ்தான போர்டு தலைவர்கள் ஐந்து பேரும் பார்ப்பனரல்லாதவராக நியமிக்கப்பட்டி ருக்கின்றனர். அதோடு நீலகிரி ஜில்லா தேவஸ்தான கமிட்டிக்கு ஒரு ஆதி திராவிட கனவானும் அங்கத்தினராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நியமனங்கள் உறுதியாகி சர்க்கார் கெஜட்டிலும் பிரசுரமாகிவிட்டது. “தேவஸ்தானம்” என்னும் பதம் பார்ப்பனருக்கும் அவரைச் சுற்றித் திரியும் சில ஆஸ்தீகக் கூலிகளுக்குமே உரியது, மற்றையோர் குறிப்பாக ஆதிதிராவிடர் போன்ற தாழ்த்தப்பட்ட மக்கள் அப்பதத்தை நினைக்கவும் உச்சரிக்கவும் கூடாதென்ற கட்டுப்பாட்டைக் கொண்டு இருந்த காலத்தையும் ஒரு கூட்டத்தாரின் மனப்பான்மையும் விரட்டி அடித்து அவ்வித சுயநல துர் எண்ண ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடித்து மக்களில் உயர்வு தாழ்வு பேதம் ஒழிய வேண்டும் என்னும் சுயமரியாதைக்கு வழி காட்டியாக முன்வந்து ³ நியமனங்களைத் துணிகரமாகச் செய்துள்ள மந்திரி கனம்...

ஈரோடு மகாநாடு -II 0

ஈரோடு மகாநாடு -II

ஈரோடு மகாநாடு விஷயமாய் சென்ற வாரம் எழுதி இருந்த தலையங் கத்தில் அரசியல் விஷயமாய் நம்மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு அடுத்த வாரம் சமாதானம் சொல்லுவோம் என்று எழுதி இருந்தோம். அதைப் பற்றிய நமது அபிப்பிராயத்தை பல தடவைகள் சொல்லியும் எழுதியும் இருந்தாலும் மகாநாட்டின் நடவடிக்கை விஷயமாய் பொறாமை கொண்டவர்களுக்கும் வேறு மார்க்கம் இல்லாமல் இந்த சமயத்தில் அதாவது. “வெள்ளைக்காரர்கள் இந்திய ராஜ்ய பாரத்தை மகாத்மாவிடம் ஒப்பு வித்துவிட்டு மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு பெண்டு பிள்ளை களைக் கூட்டிக் கொண்டு கப்பல் ஏறுகின்ற சமயத்தில் சுய மரியாதைக் காரர்கள் அவர்களை (வெள்ளைக்காரர்களைப்) போகாதீர் கள்! போகாதீர்கள்!! என்று கையைப் பிடித்து இழுத்து தேசத் துரோகம் செய்கிறார்கள்”. என்று சுமத்தப்படும் குற்றத்திற்கு சமாதானம் சொல்ல வேண்டி இருக்கிறதால், சிலவற்றை அதாவது முன் சொல்லி வந்தவைகளையே திரும்பவும் சொல்லுகின்றோம். அதாவது இந்த சத்தியாக்கிரகமாகிய உப்புச் சட்டத்தை மீறுவது என்பதே அர்த்தமற்றதும் மூடத்தனமானதுமாகும் என்பது நமது...

ஒரு யோசனை 0

ஒரு யோசனை

ஈ.வெ.ரா. “குடி அரசி”ன் ஆறாவது வருஷ வேலை முறைகளைப் பற்றி வாசகர்களையும் அபிமானிகளையும் ஒரு யோசனை கேட்க விரும்பு கின்றேன். அது விஷயத்தில் வாசகர்களும் அபிமானிகளும் தயவு செய்து ஆர அமர நிதானமாய் யோசனை செய்து தங்கள் அபிப்பிராயங்களை தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றேன். “குடி அரசு” ஆரம் பித்த இந்த ஐந்து வருஷ காலத்தில் அது இந்தியாவிற்கும் சிறப்பாக தென் இந்தியாவிற்கும் செய்திருக்கும் வேலை யைப் பற்றி பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல நான் விரும்பவில்லை., சரியோ, தப்போ அது தனக்குத் தோன்றியதைத் துணிவுடன் வெளி யிட்டு வந்திருக்கின்றது என்பதையும், அதன் கொள்கைகள் ஒவ்வொன்றும் பொது ஜனங்களிடையில் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிப் படித்தவர்கள் என்பவர்கள் முதல் பாமரர்கள் என்பவர் வரையிலும் அவர்களது உணர்ச்சி களைத் தட்டி எழுப்பி இருப்பதுடன், பொது மக்களிடையில் பெரிய மன மாறுதலையும் ஏற்படுத்தி இருக்கிறது. “குடி அரசி”ன் கொள்கைகளால் பாதிக்கப்படும் சுயநலக்காரர்கள் கூடத் தைரியமாய் மறுக்கவோ...

உதிர்ந்த மலர்கள் 0

உதிர்ந்த மலர்கள்

1. கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிக் கொண்டு தொட்டதற் கெல்லாம் கடவுள் மீது பழி போட்டுக் கொண்டு திரிகின்றவன் ஒரு மூடன். 2. கடவுள் ஒருவர் உண்டு அவர் உலகத்தையும் அதிலுள்ள வஸ்த்துக் களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமா யிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தான் இச்சையால் புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிரரைத் தூஷித்துக் கொண்டு திரிபவன் அயோக்கியன். பார்ப்பன பிரசாரம் 3. ஆழ்வார்கள் கதைகளும் நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பன பிரசாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு பார்ப்பன அடிமைகளை கொண்டு பரப்பப்பட்டதாகும். 4. புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளா மல் அவைகளையெல்லாம் உண்மையென்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள். 5. வயிறு வளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால் அவர்கள் படித்தது எல்லாம் மத ஆபாசமும் புராணக் குப்பை யுமேயாகும். ஆகவே பார்ப்பனர்களைவிட...

ஈரோடு மகாநாடு – I 0

ஈரோடு மகாநாடு – I

இம்மாதம் 10, 11, 12, 13 தேதிகளில் ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மகாநாடும் அதை அனுசரித்து வாலிபர் மகாநாடு, பெண்கள் மகாநாடு, மதுவிலக்கு மகாநாடு, சங்கீத மகாநாடு ஆகிய ஐந்து மகாநாடுகள் முறையே திருவாளர்கள் பம்பாய் எம். ஆர். ஜயகர், நாகர்கோயில் பி. சிதம்பரம், டாக்டர் முத்துலட்சுமி அம்மாள், சிவகங்கை எஸ். ராமச்சந்திரன், தஞ்சை பொன்னையா ஆகியவர்கள் தலைமையில் நடைபெற்றன. இம் மகாநாடுகளுக்கு வரவேற்புக் கழக அக்கிராசனர்களாக முறையே திருவாளர் கள் ஆர். கே. ஷண்முகம், ஜே. எஸ். கண்ணப்பர், லட்சுமி அம்மாள், கார்குடி சின்னையா, காரைக்குடி சொ. முருகப்பர் ஆகியவர்கள் இருந்து வரவேற்புக் கழக சார்பாய் வரவேற்று இருக்கின்றார்கள். இவை தவிர மேற்படி 4 நாட்களிலும் இரவு 9 மணி முதல் நடு ஜாமம் 2 மணி 3 மணி வரையில் கொட்ட கையில் சொற்பொழிவுகளும் நடைபெற்று வந்தன. மகாநாட்டு காரியங்களை நிர்வகிக்க திருவாளர்கள் ஈரோடு சேர்மென் கே. ஏ....

ஸ்தல ஸ்தாபன அரசாங்கம் கவனிக்குமா? 0

ஸ்தல ஸ்தாபன அரசாங்கம் கவனிக்குமா?

ஸ்தல ஸ்தாபன புதிய சட்டப்படிக்கு தீண்டாதார், பெண்கள், சிறு வகுப்பார் முதலியவர்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டிருந்தும் அநேக ஸ்தலஸ்தாபனத் தலைவர்கள் அச்சட்டத்திற்கு சரியானபடி மரியாதை கொடுக்காமல் தாங்கள் ஏகபோக ஆதிக்கத்தின் மனப்பான்மையையே காட்டி இருக்கின்றார்கள் என்பதாக தெரியவருகின்றது. ஆகையால் அரசாங்கத்தார் இதுவிஷயத்தில் சற்று கவலை எடுத்து ஒவ்வொரு ஸ்தல ஸ்தாபனங்களிலும் சரியானபடி பெண்களுக்கும், தீண்டப்படாதார் என்பவர்களுக்கும் சரியான படி ஸ்தானங்கள் ஒதுக்கியிருக்கின்றதா என்று பார்த்தே முடிவு செய்ய வேண்டுமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மற்றொரு விஷயம் லோக்கல் போர்டுகளில், தாலூக்கா போர்டுகள் பிரிக்கப்படுவதிலும் ஒவ்வொரு தாலூக்காவுக்கு ஒவ்வொரு போர்டு இருக்க வேண்டுமென்று சட்டத்தில் தெளிவாய் இருந்தும் சில இடங்களில் 2, 3 தாலூக்காக்கள் ஒரே போர்டாக இருந்து வருகின்றதாகத் தெரியவருகின்றது. ஆதலால் ஆங்காங் குள்ள பொதுஜனங்கள் இதைக் கவனித்துத் திருத்துப்பாடு செய்யாத வரை யில், கவர்ன்மெண்டாராவது கண்டிப்பாய் கவனித்து ஒவ்வொரு தாலூக்கா வுக்கு ஒவ்வொரு போர்டாக ஏற்படுத்துவதில் சற்று கண்டிப்பாய் இருக்க வேண்டுமென்பதைத் தெரிவித்துக்...

ஆதிதிராவிடர்கள் என்பவர் யார்? இந்திய அரசியலில் தொழிலாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் எங்கே? 0

ஆதிதிராவிடர்கள் என்பவர் யார்? இந்திய அரசியலில் தொழிலாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் எங்கே?

தேர்தல் சம்மந்தப்பட்ட காரியங்களில் ஆதிதிராவிடர்கள் என்பவர் களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதில் ஆதிதிராவிடர்கள் என்பதாக எந்தெந்த வகுப்பார்களை ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது என்பது இப்போது பொது ஜனங்களுக்குள் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. லோக்கல் போர்ட் சட்டப்படியும், முனிசிபல் சட்டப்படியும் ஆதி திராவிடர்கள் என்பதற்கு வியாக்கியானம் சொல்லி இருப்பதில் “இந்து மதத்தைத்தழுவிக்கொண்டிருக்கும் பறையர், பள்ளர், வள்ளுவர், சக்கிலியர், தோட்டிகள், மாலா (தெலுங்கு பாஷையில் பறையர்) மாதிகர் (தெலுங்கு, கன்னட பாஷையில் சக்கிலி) ஹொலையர் (கன்னட பாஷையில் பறையர்) செருமர்கள் (மலையாள பாஷையில் பறையர்) ஆகிய இந்த வகுப்பார்கள் மாத்திரமே ஆதிதிராவிடர்கள் என்கின்ற வகுப்பில் அடங்கி இருக்கின் றார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்திய அரசியல் பிரதிநிதித்துவத்திலோ, அல்லது ஸ்தல ஸ்தாபன பிரதிநிதித்துவத்திலோ மேற்கண்ட வகுப்பார்களாகிய பள்ளர், பறையர், சக்கிலியர் ஆகிய மூன்று வகுப்பாருக்கு மாத்திரமே பிரதிநிதித்துவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இதனால் இந்தியாவில் தீண்டா தார் என்கின்ற வகுப்பில் நடைமுறையில் சேர்க்கப்பட்டிருக்கின்ற வகுப்பார் களில் அரைவாசிப்...

புரட்டு 0

புரட்டு

பாமர மக்களை ஏமாற்றப் படித்த மக்கள் பல புரட்டுகள் செய்வதுண்டு. அவ்வக் காலங்களில் மக்கள் மனதைப் பற்றி நிற்கும் வார்த்தைகளை வாயால் சொல்லி மக்கள் நன்மதிப்பைப் பெற முயல்வது வழக்கமாகி விட்டது. கதர் எப்படியிருக்குமென்று அறியாதவர்களும் பல கூட்டங்களில் கதர் உடுத்த வேண்டுமென்று சொல்வதுண்டு நாட்டில் செய்யப்படும் வஸ்துக்களில் ஒன்றையேனும் பார்த்தறியாதவர்கள் சுதேசியத்தைப் பற்றி வானளாவப் பேசுவதுண்டு. அவ்வாறாகவே “பஞ்சமர்கள்” என்போர் யார்? அவர்கள் துயரென்ன? அவற்றைப் போக்கும் வழியென்னவென்று ஒரு நாளேனும் சிந்தித்துப் பார்த்து ஒரு சிறிய காரியத்தையேனும் அவர்களுக்காகச் செய்தறி யாத தலைவர்களும் கூட்டங்களும் தீண்டாமை விலக்குத் தீர்மானத்தை நிறைவேற்றி வருகின்றன. இத்தகைய புரட்டுத் தீர்மானமொன்று கடந்த வாரம் திருப்பூரில் நடைபெற்ற அரசியல் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானப் புரட்டை ஆண்மையோடு எதிர்த்த வீரர் திரு. அய்யாமுத்து அவர்களை நாம் மனமாரப் போற்றுகிறோம். தீர்மானத்தை சபையின் முன் வற்புறுத்திய தலைவர் திரு. ராஜன், அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர் தீண்டாமை...

பகத்சிங் 0

பகத்சிங்

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டாதார் கள் யாருமே இல்லை. அவரை தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்து விட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேச பக்தர் கள் என்பவர்களும், தேசீய வீரர்கள் என்பவர்களும் இப்போது வைகின்ற தையும் பார்க்கின்றோம். இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொரு புறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜப்பிரதிநிதி திரு. இர்வின் பிரபுவைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு. காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனை இல்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல் அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறு கின்றன. இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும் படியாக தேச மகாஜனங்களுக்கும்...

சிவகாமி – சிதம்பரனார் 0

சிவகாமி – சிதம்பரனார்

புனர் விவாஹம் தாலிகட்டுதல் என்னும் சடங்கு ஒழிந்தது.திருமதி ஈ.வெ.ரா நாகம்மையார் அவர்கள் நடத்திவைத்தனர். இத்திருமணமானது மணமக்கள் மனமொத்து மெய்க் காதல் கொண்டு தாங்களாகவே தைரியமாய் முன்வந்து சீர்திருத்த முறையில் ஆண் பெண் இருவரும் சம உரிமையோடு வாழ்க்கையை நடத்துவதற்கேற்றதோர் சுயமரியாதைத் திருமணமாகும். இதைப் பலர் அதிசயமாக நினைக்கலாம். இதில் ஒன்றும் அதிசயமில்லை. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் திருமணம்தான் இது. ஆனால் நம் நாட்டில் வெகு காலமாக வேரூன்றி கிடக்கும் அர்த்தமற்ற சடங்குகள் இல்லாமலும் பெண்ணை ஆண் அடிமையாக்குதற் கறிகுறியாகிய தாலிகட்டுதல் என்னும் சடங்கு இல்லாம லும் சீர்திருத்த உலகத்துக்கேற்ற முறையில் இத்திருமணம் நடந்திருக்கிறது. பெண்கள் விடுதலையடைந்து ஆண்களோடு சம சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையான கொள்கையுடைய சுயமரியாதை இயக்கம் தோன்றி யிற்றைக்கு 4, 5 வருஷங்களேயாயினும் இதுவரை இம்மாதிரி பல சுயமரியாதைத் திருமணங்கள் நடந்தேறியிருப்பது உங்களுக் குத் தெரியும். இம்மாதிரி புதுமுறைத் திருமணத்தில் கர்னாடகப்...

புத்த மதமும் சுயமரியாதையும் 0

புத்த மதமும் சுயமரியாதையும்

சகோதரர்களே! சுயமரியாதையும், புத்தமதமும் என்ற விஷயத்தைப்பற்றி பேசும் இந்தக் கூட்டத்தில் நான் பேசவேண்டியிருக்கும் என்று இதற்கு முன் நினைக்கவேயில்லை. இன்று நான் ரயிலுக்குப் போக சற்று நேரமிருப்பதாலும், தங்கள் சங்க செக்கரட்டரி என்னை இங்கு அழைத்ததாலும், இவ்விடம் நடக்கும் உபன்யாசத்தைக் கேட்டுப் போக வந்தேன். இப்போது திடீரென்று என்னையே பேசும்படி கட்டளையிட்டு விட்டீர்கள். ஆனபோதிலும் தங்கள் கட்டளையை மறுக்காமல் சிறிது நேரம் சில வார்த்தைகள் சொல்லுகின்றேன். அவை தங்கள் அபிப்பிராயத்திற்கு ஒத்ததாக இல்லையே என்று யாரும் மனவருத்த மடையக்கூடாது என்று முதலில் தங்களைக் கேட்டுக்கொள்ளு கிறேன். ஏனெனில் இன்று பேசும் விஷயத்திற்கு, ‘சுயமரியாதையும், புத்தமதமும்’ என்று பெயரிட்டு இருப்பதால் அதைப்பற்றி பேசுகையில் என் மனதில் உள்ளதைப் பேசவேண்டியிருக்கும். பச்சை உண்மையானது எப்போதும் மக்களுக்கு கலப்பு உண்மையைவிட அதிகமான அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். உண்மையை மறைத்துப் பேசுவது என்பது எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சுக் கேட்பவர்களுக்கும் திருப்தியைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும்; திருப்தி...