Author: admin

லஞ்சம்

லஞ்சம்

சமீபத்தில் கோயமுத்தூரில் காட்டிலாகா கல்லூரியில் தேறிய மாணவர்களுக்கு நடந்த பரிசளிப்புக் கொண்டாட்டத்தில் காட்டிலாகா தலைமை அதிகாரியான மி°டர் டயர்மன் என்பவர் பின்வரும் புத்திமதியை மாணவர்களுக்குக் கூறினாராம்:- “நான் உங்களுக்குச் சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன். காட்டிலாகாவில் குறைந்த  சம்பளம் வாங்கும் கீழ்த்தர உத்தி யோக°தர்கள் மட்டுமல்லாமல், பெரிய உத்தியோக° தர்களும் யோக்கிய மற்ற செயல்களைப் புரிகின்றனர் என்று சொல்லு வதற்காக வருந்துகிறேன். ஒரு  ரேஞ்சர்  தனது  கீழுள்ளவர்கள் வீட் டில் இலவசமாகப் பல மாதங்கள் உணவு உட்கொண்டதுமன்றி, அவர் களுக்குக் கிடைக்கும் அல்ப சம்பளத் திலிருந்து மாதா  மாதம் சிறு தொகையும் வசூல் செய்தும் வந்தார். உயர்தர உத்தியோக°தர்கள் இவ்விதமான இழிந்த நிலையில் இருக்கையில் குறைந்த சம்பளம் வாங்கும் கீழ்த்தர உத்தியோக°தர்களைக் குறை கூறுவதில் பயன் உண்டா? ஜனங்கள் நம் இலாகாவைப்பற்றி பேசுவதற்குக்கூட வெட்கப்படுகிறார்கள் என்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இப் பொழுது புதிதாகப் பரீட்சை கொடுத்துப்போகும் நீங்களே இம்...

ஒவ்வொரு மாகாணத்திலும் தேவ°தான சட்டம் தேவை   – சித்திரபுத்திரன்

ஒவ்வொரு மாகாணத்திலும் தேவ°தான சட்டம் தேவை  – சித்திரபுத்திரன்

  ஜ°டி° கட்சி மந்திரி பனகால் ராஜா கொண்டுவந்த சென்னை இந்து தேவ°தான மசோதா நிறைவேறாமல் செய்வதற்காக தமிழ்நாட்டில் ஒரு கூட்டத்தார் பொது மேடைகளிலும் பத்திரிகைகள் வாயிலாகவும் பகீரதப் பிரயத்தனங்கள் செய்த போதிலும் சட்டம் அமுலுக்கு வந்து தற்சமயம் திருப்திகரமான வழியில் காரியங்கள் நடந்து வருகின்றன என்பது நேயர்கள் அறிந்த விஷயம். திருப்பதி தேவ°தான நிதியிலிருந்து சந்திரகிரியில் ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்தப் போவதாக பனகால் ராஜா சமீப காலத்தில் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டதைக் கேட்டதும், இச்சட்டத்தின் விரோதிகள் அவர் மேல் சீறி விழ ஆரம்பித்துவிட்டார்கள். 63 -வது சட்டம் இப்படிச் சொல்லுகிறது, 76-வது சட்டம் அப்படிச் சொல்லவில்லை என்றவாறு சிற்சில பத்திரிகைகளின் நிரூபங்கள் நாளுக்கு நாள் குவிந்து கொண்டிருக்கின்றன. சர்வகலாசாலை ஏற்படுத்துவதைக் காட்டிலும், முதலில் திருப்பதி கோயில் கோபுரத்தையும் ஏழுமலைப் படிகளையும் ஏன் பழுது பார்க்கவில்லையென்ற கேள்விகளை இதுசமயத்தில் சிலர் கிளப்பி விடுவது ஆச்சரியமாய் இருக்கிறது. இந்த விதண்டாவாதக்காரர்கள் இவ்வளவு நாள்...

* தமிழர் கூட்டம்

* தமிழர் கூட்டம்

30.4.25 தேதியில் திருச்சிராப்பள்ளி ஜில்லா காங்கிர° கமிட்டி கூட்டத்தில் திருவாளர் மு.கா. வி°வநாதம் செட்டியார் அவர்கள் அக்கிரா சனத்தின் கீழ் சேரன் மாதேவி குருகுலத்தை சீர்திருத்த பிராமணரல்லாதாரின் மகாநாடு நடைபெற்றது.  அடியில் கண்ட தீர்மானங்கள் ஏகமனதாய் நிறைவேறின : ( க ) சேரமாதேவி குருகுலத்துக்குப் பணவுதவி செய்தது ஸ்ரீமான் வ.வே.சு. ஐயரவர்களை நம்பியேயாதலால், ஐயரவர்கள் பணங் கொடுத்தவர்களைக் கூட்டி ராஜினாமாக் கொடுக்க வேண்டியது நியாயமா யிருக்க, அவ்வாறு செய்யாமல் அங்கு வேலை செய்பவரிடம் தமது தலைமை °தான ராஜினாமாவைக் கொடுத்ததை இக்கூட்டம் கண்டிக்கிறது. ( உ ) ஸ்ரீமான் வ.வே.சு. ஐயரவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளவே சிறிதும் அதிகாரமில்லாத சிலர் அதனை ஏற்றுக்கொண்ட தோடும்  அமையாது குருகுலக் கிளர்ச்சிக்கே பெருங் காரணமாயிருந்த ஸ்ரீ மகாதேவய்யரவர்களைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்ததை இக்கூட்டம் பலமாகக் கண்டிக்கிறது. ( ங ) குருகுல நடைமுறையானது நேரான வழியில் நடை பெற வில்லையா தலால், அதனைத்  திறம்பட ...

குருகுலம்

குருகுலம்

  குருகுல விஷயமாய் எனது அபிப்பிராயம் என்ன என்பதைப்பற்றி நான் தெளிவாய்க் கூறவில்லை என்றும், வேண்டுமென்றே அவ்விதம் கூறாமலிருக்கின்றேன் என்றும், முக்கியமான சில கனவான்கள் என்னை, எழுதியும் நேரிலும் கேட்கிறார்கள். இவர்கள் என்னைப்பற்றிச் சரியாய் உணர்ந்து கொள்ளாதவர்கள் என்றுதான் நான் சொல்லக்கூடும். அதோடு தமிழ்நாட்டு நடப்புகளையும் சரிவர கவனித்திருக்க மாட்டார்கள் என்றும் நினைக்கிறேன். குருகுல விஷயமாய் டாக்டர் வரதராஜுலு நாயுடு  பத்திரிகையின் வாயிலாக எழுதுவதற்கு ஒரு வருஷகால முன்னிருந்தே இதைப் பற்றிய சகல விஷயங்களையும் அநேகக் கூட்டங்களில் தெரியப்படுத்தி யிருக்கிறேன். (சென்ற வருஷம் விருதுப்பட்டியில் ரத்தினசாமி நாடார் ஞாபகச்சின்ன வாசகசாலை ஆண்டு விழாவிலும் பேசியிருக்கிறேன்.) குருகுலத்திற்கு தமிழர்கள் பணம் கொடுக்கக் காரணங்களாயிருந்த நவசக்தி, தமிழ்நாடு முதலிய பத்திரிகை ஆசிரியர்களிடமும், அவர்கள் குருகுலத்திற்குப் பணம் கொடுக்கும்படியாயும், பாரத மாதா கோவில் கட்டுவதற்குப் பணம் கொடுக்கும் படியாயும் தங்கள் பத்திரிகைகளில் எழுதி வருவதைப் பலமாய்க் கண்டித்தும் வந்திருக்கிறேன். ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியார் அவர்கள் நான்...

பர்க்கன்ஹெத் பிரபுவின் பரீட்சை

பர்க்கன்ஹெத் பிரபுவின் பரீட்சை

இந்தியா மந்திரி பர்க்கன் ஹெத் பிரபு “உங்களுக்குக் கொடுத்த சீர்திருத்தத்தை ஒழுங்காக நடத்தவில்லை. இனியாவது இரட்டை ஆட்சியை ஒழுங்குடன் நடத்துவீர்களாயின் 1929 ம் வருஷத்திற்கு முன்னர் சீர்திருத்தம் கொடுக்கலாமா என யோசிப்பேன்” என்று கூறிய உரைகளைக் கண்டு இந்திய அரசியல்வாதிகள் என்போரும் இந்திய அரசியல் பத்திரிகைகள் என்பவை களும் கண்ணீர்விட்டுக் கரைகின்றதை நோக்குழி பாஞ்சால வீரர்களான டயர், ஓட்வியர் போன்றார் மனதும் இளகிவிடும். ஆயினும், யாம் அதைப்பற்றிச் சிறிதும் கவலை உறக்  காரணத்தைக் கண்டிலம். பர்க்கன் ஹெத் பிரபு கழறுவது போன்று மாண்ட் – போர்டு சீர்திருத்தம் என்னும் சர்வகலா சாலையில்  யாம் மாணாக்கராய் ஒருபொழுதும் இருந்ததில்லை. மழைக்கும் சற்று நேரம் அக்கலாசாலைக்குச் சென்று ஒண்டியிருந்தோமில்லை. சீர்திருத்தப் பரீட்சை கொடுத்து நற்சாட்சிப்பத்திரம் பெறவும் எமது மனம் ஒருப்படவில்லை. அச்சர்வ கலாச்சாலையில் கற்ற மாணாக்கர்களும் அதன் பரீட்சைக்குச் சென்ற வித்தியார்த்திகளுமே தங்கள் பரீட்சையில் பர்க்கன் ஹெத் பிரபு கழித்து விட்டாரே என அழவேண்டுமே...

ஈரோடு நகரசபை நிர்வாகம்  – பழைய கறுப்பன் 

ஈரோடு நகரசபை நிர்வாகம் – பழைய கறுப்பன் 

  ஈரோடு நகரசபையின் அமைப்பும், நிர்வாகமும் மிகவும் சீர்கேடான நிலைமையில் இருக்கின்றன. தற்போது உள்ள நகரசபையின் நிர்வாகத் திறனைக் காண்போர் ஒவ்வொருவரின் உள்ளத்தினும் நகரமாந்தரின் நலத்திற்காக நகர சபையா? நகர சபைக்காக நகர மாந்தரா? நகரசபை நிர்வாகி களுக்காக நகரசபையும், நகர மாந்தர்களுமா? என்ற எண்ணங்கள் குடி கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. நகரசபையின் அமைப்பைப் பற்றியும், நிர்வாகத்தைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல விரும்பு கின்றேன். அவைகளை நன்கு ஆலோசித்து தக்கது செய்ய வேண்டியது ஈரோடு நகர மாந்தர்களின் கடன். தத்துப்பிள்ளைகள் தலைவரானார்கள் நகரசபையின் தலைவர் ஒரு வக்கீல், உபதலைவர் ஒரு  டாக்டர். இவ்விருவர்களும் சில வருஷங்களுக்கு முன் தங்களுடைய தொழிலை முன்னிட்டு பிறந்த ஊர்களை விட்டு  விட்டு  இவ்வூரில் குடி ஏறினவர்கள். ஆகவே இவர்கள்  ஈரோட்டார் அல்ல. ஆனால், பிற ஊரார் வேறு ஊரில் சில வருஷங்கள் வசித்தால் தாம் அண்டின ஊரின் தத்துப்பிள்ளைகள் ஆய் விடுகின்றனர் என்ற விதி...

தமிழர் கதி

தமிழர் கதி

வைக்கம் சத்தியாக்கிரகமும் சேரன்மாதேவி குருகுலப் போராட்ட மும் தமிழ் மக்களுக்கு தங்கள் நாட்டில் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டா என்பதைப் பற்றியும் இந்து மதத்தில் தங்களுக்கு ஏதாவது இடமுண்டா என்பதைப் பற்றியும் தீர்ப்பளிக்கப் போகின்றது. இது தமிழர்க்கோர் பரீட்சை காலமாகும். வைக்கம்  சத்தியாக்கிரகமோ தமிழரைப் பார்த்து நான்கு வீதியில் மூன்று வீதிகளை உங்களுக்குத் திறந்து விட்டாய்விட்டதே ஓர் வீதியில்தானா உங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது? இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களே இதென்ன பயித்தியமா என்று கேட்கிறது. குருகுலப் போராட்டமோ பதினெட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் பதினேழு பிள்ளைகள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டு  ஓர் பிள்ளை மாத்திரம் தான் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்க்கக் கூடாதென்றால் என்ன குடி முழுகிப் போய் விட்டது?  இதற்காகவா இவ்வளவு பெரிய கிளர்ச்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வதல்லாமல், உட்சண்டைகளையும் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. வைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப் போராட்டமும் அந்த...

கோபுரத்து மீதிருந்து கூவுவேன் -சித்திரபுத்திரன்

கோபுரத்து மீதிருந்து கூவுவேன் -சித்திரபுத்திரன்

லார்டு லிட்டன் அரசாங்கம் சுயராஜ்யக் கட்சியை வெட்டிப் புதைத்துக் கருமாதியும் செய்துவிட்டது. நமது சுயராஜ்யக் கட்சி வீரர்கள் புதைத்த பிணத்தை எடுத்துக் கொண்டு இன்னும் உயிர் இருப்பதாகவே ஜனங்களுக் குக் காட்டி செத்தப் பாம்பை ஆட்டி வருகின்றனர். “இரட்டை ஆட்சியை ஒழித்து விட்டோம் – ஒழித்து விட்டோம்” என்று மாத்திரம் சொல்லிக்கொண்டு பொய் வெற்றிமுரசு அடிக்கிறார்கள். லார்டு லிட்டனோ இவர்களுக்குப் புத்தி வரும் வரை இதுதான் இவர்கள் தலையெழுத்து என்று சொல்லிவிட்டார். இந்த நிலையில் சுயராஜ்யக் கட்சித் தலைவர்களுக்கு இனிமேல் என்ன செய்கின்றதென்கிற விஷயத்தில் தங்களுக்கும் புத்தி இல்லாமல் போய்விட்டது. சொல்புத்தி கேட்பதற்கும் சொல்லுவாரற்றுப் போய்விட்டது. சுயராஜ்யக் கட்சியார் முட்டுக்கட்டை போடுவோம் என்று ஜனங்களிடை வீரப்பிரதாபம் பேசும்பொழுதே எப்படிப் போடப்போகிறீர்களென்று பொது ஜனங்கள் கேட்டார்கள். மந்திரிகளை ஒழித்து அரசாங்கத்தை அழித்துவிடுவோம் என்று சொன்னார்கள். மந்திரி களை ஒழித்துவிட்டால் அரசாங்கத்தாருக்கு லாபமேயன்றி நஷ்டமில்லை. அதற்குமேல் என்ன செய்யப் போகின்றீர்களென்று கேட்டார்கள். செய்வதின் னதென்று...

நிர்மாண திட்டம்

நிர்மாண திட்டம்

அரசியல் வாழ்வில் தற்காலம் நிர்மாண திட்டங்கள் என்று சொல்லப்படுவது கதர், தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு ஆகிய இம் மூன்றையே குறித்துக்கொண்டு நிற்கிறது. இவற்றை ஏறக்குறைய இன்றைக்கு நான்கு ஐந்து வருடங்களாக மகாத்மா விடாமல் வலியுறுத்தி வந்தும் கோரிய அளவு நிறைவேற்றப்பட்டதாக நாம் சொல்ல முடியாது. அரசியல்வாதிகள் பலரால் இத்திட்டங்கள் ஊக்கமளிக்கவல்லதல்ல வென்றும், சுயராஜ்யத்திற்கு அவைகளே போதியவை அல்லவென்றும், இத்திட்டங்கள் அரசியல் துறைக்குச் சம்பந்தப்பட்டவையல்லவென்றும், பலவாறாகப் பழிக்கப்பட்டும், மக்களுக்கு இவற்றில் மனம் செல்லாதவாறு கலக்கப்பட்டு வருகின்றது. மகாத்மா அவர்கள் இத்திட்டங்களில் கதர்த் திட்டம் ஒன்றுக்கே தனது முழு பலத்தையும் உபயோகிக்கின்றார். இரவும் பகலும் அவ்வொரு கருமத்திலேயே கண்ணாயிருக்கின்றார். நாம் அதன் தத்துவம் என்ன என்று பார்க்கின்றோமா? இல்லவே இல்லை. வருஷம் ஒன்றுக்கு 60, 70 கோடி ருபாய் நம் நாட்டிலிருந்து அன்னிய நாட்டிற்குப் போகக்கூடியதும், லட்சக்கணக்கான நமது சகோதரிகளுக்கும், சகோதரர் களுக்கும் உணவளிக்கக்கூடியதான இக் கதரை நாம் ஆதரிக்காவிட்டால் பிறகு நமக்கு என்ன...

இந்தியத் தொழிலாளர் – ஒரு தொழிலாளி

இந்தியத் தொழிலாளர் – ஒரு தொழிலாளி

தொழிலாளர்கள் என்பது யார் என்கிற விஷயத்திலேயே நான் அபிப்பிராய பேதமுடையவனாகவிருக்கிறேன். பொதுவாய் நமது நாட்டில் தொழிலாளர் என்று அழைக்கப்படுவது கூலிக்காரர்களைக் குறிக்கின்ற தேயன்றி, உண்மையில் சுவாதீனத் தொழிலாளரைக் குறிப்பதில்லை. தொழிலா ளன் என்றால் ஒருவன் தானே தன் இஷ்டம்போல் ஒரு தொழிலைச் செய்து அத்தொழிலின் பயன் முழுவதையும் தானே அடைபவனாய் இருக்க வேண்டும். தற்காலம் வழக்கத்தில் குறிப்பிடும் தொழிலாளி யாரெனின் ஒரு முதலாளியிடம் அவரது இயந்திரத் தொழிலுக்கு உப கருவிபோல் அதாவது, ஒரு இயந்திரத்திற்கு நெருப்பு, தண்ணீர், எண்ணெய், துணி, தோல் முதலிய கருவிகள் எப்படி உபகருவிகளோ அதுபோல் அதன் பெருக்கத்திற்கு சில கூலியாள் என்ற உயிர் வ°துவும் அதற்கு உப கருவியாகவிருந்து, அந்த முதலாளி சொல்கிறபடி வேலை செய்பவர்தான் தொழிலாளியென்றும், அவரிடம் கூலிக்குப் போராடுவதைத்தான் தொழிலாளர் இயக்கம் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் எந்த விதத்திலும் தொழிலாளி ஆகமாட் டார்கள். இவர்கள் வேலையும், இவர்கள் நேரமும் இவர்களுக்கு எந்த விதத் திலும்...

சென்னை முனிசிபல் ஓட்டர்களுக்கு எச்சரிக்கை – சித்திரபுத்திரன்

சென்னை முனிசிபல் ஓட்டர்களுக்கு எச்சரிக்கை – சித்திரபுத்திரன்

சென்னை கார்ப்பரேஷனைக் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணத் தின் மேல் மகாத்மா பெயரையும் காங்கிர° பெயரையும் சுயராஜ்ய கட்சியின் பெயரையும் சொல்லிக் கொண்டு சிலர் உங்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். அதோடு மாத்திரம் நில்லாமல் தாங்கள் யோக்கியமான கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களுக்கு எதிரிடையாய் நிற்கும் அபேட்சகர்கள் யோக்கியப் பொருப்பில்லாத கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், கட்சிப் பிரசாரம் செய்து, ஒரு கட்சியார் பேரில் வெறுப்புண்டாக்கவும் பாடுபடுகிறார் கள். முனிசிபாலிட்டிகளுக்கு கட்சிப் பிரதானம் பார்க்க வேண்டியதே இல்லை. அபேட்சகர்கள் யோக்கியர்களா என்று பார்ப்பதுதான் உங்கள் கடமை. இப் பொழுது பெயருக்கு முனிசிபல் விவாதத்தில் பிர°தாபிக்கப்படும் கட்சிகள் இரண்டேதான். ஒன்று பிராமணரல்லாதார் கட்சி என்று சொல்லப்படும் ஜ°டி°கட்சி; மற்றொன்று சுயராஜ்யக் கட்சி. இவ்விரு கட்சிகளும் ஒன்றை யொன்று தூற்றிக்கொண்டு பலமான பிரசாரங்கள் நடத்தி வருகின்றன. இரு கட்சியின் தத்துவங்களும் தேசத்திற்கு விடுதலை உண்டாக்காது. தற்கால நிலையில் கட்சிப் பேர்கள் சொல்லிக் கொள்வதாலேயே ஜனங்கள் ஏமாறக்கூடாது. சென்ற...

அரவிந்தருக்கு அழைப்பு

அரவிந்தருக்கு அழைப்பு

தேசபந்து தாசர் காலஞ் சென்றதும் ஸ்ரீ பாபு அரவிந்தரை, தாசரின் தலைமைப்பதவி யேற்றுக்கொண்டு தேசத்தை நடத்தும்படி பலர் வேண்டு வதாய்த் தெரிகின்றது. அரவிந்த கோஷர் தலைமை வகித்து தேசத்தை நடத்துவதற்கு மிகவும் தகுதியுள்ளவர் என்பதை எவரும் மறுக்கமாட்டார். ஆனால் காந்தியடிகள் உழுது செய்னேத்தி செய்து வைத்திருக்கும் நிலத்தில் அரவிந்தரின் விளை முளைப்பது கடினம். அரவிந்தர் வருவாராயின் இந்தியா முழுவதும் மறுபடியும் ஓர் முறை உழுது அவரது விதைக்கேற்றவாறு பண் படுத்தவேண்டும். காந்தியடிகளின் திட்டம் முற்றிலும் பயனற்றதாகி காந்தி யடிகளே இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஏற்றதல்ல என விலகிவிட்டால் மாத்திரம், அரவிந்தர் முதலியோர் தாராளமாக வரலாம். வந்துதான் ஆக வேண்டும். இப்பொழுது அரவிந்தர், காந்தியடிகள் இருவரும் தேசத்தை நடத்துவார்களாயின், பசுவையும், புலியையும் ஓர் வண்டியில் கட்டி ஓட்டுவது போல் தான் ஆகும். காந்தியடிகளே அரவிந்தரை அழைக்கிறாரெனின் அது ஒரு கோமாளி வேடமன்றி வேறல்ல. குடி அரசு – துணைத் தலையங்கம் – 28.06.1925

சர்மா சாய்ந்தார்

சர்மா சாய்ந்தார்

தமிழ்நாட்டு அருந்தவப்புதல்வர் ஸ்ரீமான் கிருஷ்ணசாமி சர்மா இம்மாதம் 24 – ந் தேதி நள்ளிரவு இரண்டு மணிக்குக் காஞ்சியிலுள்ள தமது இல்லத்தில் காய்ச்சலினால் இறந்துவிட்டாரென்ற செய்தியைக்கேட்க ஆற் றொணாத் துயர்க்கடலில் மூழ்கினோம். தேசம் தற்பொழுதுள்ள நிலைமையில் பாரதத்தாயின் உண்மை மக்கள் ஒவ்வொருவராக மடிந்து வருவது நாட்டின் தீவினையேயன்றி வேறல்ல. நமது சர்மா அவர்கள் ஏனைய தேசபக்தர்களைப் போன்று தனது வாழ்நாளில் வேறு ஒரு தொழிலிலிருந்து தேசசேவைக்குக் குதித்தவரன்று. மாணவராக இருக்கும்பொழுதே தேச சுதந்திரத்தில் நாட்டம் உடையவராய் தமது வாலிபகாலத்திற்கு முன்பே தியாகத்தின் வாயிலாய்ச் சிறைவாசம் ஏற்றார். சிறைச்சாலைக் கைதிகளை இக்காலத்தைப் போலல்லாது கொடுமையாகவும், இழிவாகவும் நடத்திவந்த காலமாகிய 1908 -ம் ஆண்டி லேயே மாதக்கணக்கில்லாமல் வருடக்கணக்காய் தண்டனை அடைந்தார். சிறையினின்றும் வெளிவந்ததும் மீண்டும் தேசத்தொண்டிலேயே ஈடுபட்டு ழைத்ததனால் யுத்த காலமாகிய 1917 – ம் ஆண்டில் ஒருவருட காலம் வாய்ப் பூட்டப்பட்டிருந்தார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டுத் தீவிரமாக உழைத்ததின் பயனாக...

சத்தியாக்கிரகம் ராஜிக்கு உட்படாது

சத்தியாக்கிரகம் ராஜிக்கு உட்படாது

பல்லூழிகளாக நின்று நிலவி வரும் இந்து சமயத்தின் நற்பெயரைக் கெடுப்பான் பிற்காலத்தில் ஒரு சில அறிவிலிகளால் அதனுள் புகுத்தப்பட்ட தீண்டாமை என்னும் கொடிய பேயை நாட்டினின்றும் ஓட்டி, இந்துசமயத்தின் தூய தன்மையையும், மக்களின் உரிமைகளையும், சமத்துவத் தன்மையும், நிலைநாட்ட வேண்டுமென்ற உயரிய எண்ணங்கொண்டு திருவாங்கூர் சமஸ் தானத்திலுள்ள வைக்கம் என்னும் ஊரில் சத்தியாக்கிரகம் தொடங்கப் பெற்று நடைபெற்று வருவது நேயர்கள் நன்கு அறிவார்கள். இவ்வுண்மைப் போர் ஓராண்டாக நடைபெற்று வருகிறது ; இன்னும் வெற்றிபெறவில்லை. ஆனால், விரைவில் வெற்றியுறும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. இச் சத்தியாக்கிரக நிகழ்ச்சியைப் பற்றி இவ்வொரு வாரமாக ஒன்றுக் கொன்று முரண்பட்ட செய்திகள் வெளிப்போந்து ஒருகாலை இன்பமூட்டியும், மற்றொரு காலை துன்பமூட்டியும், இறுதியில் மக்களைப் பெருங் கவலையில் ஆழ்த்தி விட்டன என்பதே எமது கருத்து. மக்களுக்குள் பிறப்பினால் உயர்வு, தாழ்வு எவ்வாற்றானும் இல்லையென்ற உயரிய சிறந்த உண்மையை உலகினர்க்கு அறிவுறுத்தும் பெரும் பேறு – ஒரு பெண்ணரசிக்கு...

காரைக்குடி ஜில்லா                      முதலாவது அரசியல் மகாநாடு  தீண்டாமை

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு தீண்டாமை

ஆகவே, நம்மில் யாரும் நமக்கு இவ்வித இழிவுப்பெயர்கள் இருப் பதை லட்சியம் செய்யாமல் சுயநலமே பிரதானமாகக் கருதி அலட்சிய மாயிருக்கிறோம். யாராவது இவற்றைக் கவனித்து இவ்விதக் கொடுமையும் இழிவும் நமக்கு ஒழிய வேண்டுமென்று முயற்சித்தால் அது சுயநலக்காரரால் துவேஷமென்று சொல்லப்பட்டுவிடுகிறது. பறையன், சக்கிலி முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக் கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக்கிறான்; அழுக்குடை தரிக்கிறான்; அவன் மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆகாரத்திற்கு மாட்டு மாம்சம் சாப்பிடுகிறான்; மாடு அறுக்கிறான்; மற்றும் சிலர் ‘கள்’ உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங் கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இவர்கள் பார்வைக்கு அசிங்கமாகவும், அழுக்கான துணிகளு டனும், துர்வாடை யுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும் இதற்கு யார் பொறுப் பாளி என்றும் யோசியுங்கள். அவர்களை நாம் தாகத்திற்கே தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ வேஷ்டி துவைக் கவோ வழி...

காரைக்குடி ஜில்லா                           முதலாவது  அரசியல்  மகாநாடு  தீண்டாமை

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு தீண்டாமை

தீண்டாமையைப் பற்றி ஓர் தீர்மானம் செய்திருக்கிறீர்கள். அதைப் பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். தீண்டாமை என்பது என்ன? தீண்டாமை காங்கிரஸில் ஒரு திட்டமாய் வருவானேன்? என இவ்விரண்டு விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். தேசத்தில் நமது இந்து மதத்தில் மாத்திரம்தான் தீண்டாமை அனுஷ்டிப்பதாக நாம் காண்கிறோம். மனிதனுக்கு மனிதன் பார்ப்பது, பேசுவது, பக்கத்தில் வருவது, தொடுவது முதலானவைகள் தீண்டாமையின் தத்துவங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு ஆதாரம் என்னவென்றால் வேதமென்று சொல்லுவதும், சிலர் சா°திரம் என்று சொல்லு வதும். சிலர் °மிருதி என்று சொல்லுவதும், சிலர் புராணங்கள் என்று சொல்லு வதும், சிலர் பழக்கவழக்கங்கள் என்று சொல்லுவதும் இப்படிப் பலவிதமாக ஆதாரங்கள் கற்பிக்கப்படுகின்றன. பழக்கத்தில் தீண்டாமையானது வரு ணாச்சிரம தர்மத்தில் பட்டதென்றும், வரிசைக் கிரமத்தில் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரென்றும், வருணாச்சிரமமானது பிராமணன், க்ஷத்திரியன், வைசி யன். சூத்திரன், பஞ்சமன் என ஐந்து வகை ஜாதியாய் பிரிக்கப்பட்டிருக் கின்றனவென்றும், இவற்றிற்கு ஆதாரம் மனு°மிருதி என்றும்...

வைக்கம்

வைக்கம்

வைக்கம் நிலைமையைப்பற்றி முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கோவில் வீதிகளில் எல்லாச் சாதியாரும் தடையின்றிச் செல்லலாமென்று மகாராணியார் கட்டளைப் பிறப்பித்துவிட்டதாக முதலில் செய்தி கிடைத்தது. ஆனால், அதற்குள் மகிழ்ந்து விடுவதற்கிடமில்லை யென்றும், இன்னும் பேச்சளவில்தான் இருந்து வருகிறதென்றும், மூன்று வீதிகளில் “தீண்டாதார்” செல்வதற்கு மட்டுமே கட்டளைப் பிறப்பிக்க சமஸ் தான அரசாங்கத்தார் முடிவு செய்திருக்கிறார்களென்றும் கடைசியாக வைக்கத்திலிருந்து வந்த செய்தியால் தெரியவருகின்றன. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும், மற்ற சமஸ்தானங்களுக்கும் வழிகாட்டியாயிருக்கும் பெருமை திருவாங்கூர் சமஸ்தானத்துக்குக் கிடைக்காமலே போய்விடு மோவென ஐயுறுகிறோம். சத்தியாக்கிரஹிகளின் கடமை என்னவோ தெளி வாய் இருக்கிறது. பூரண வெற்றி கிடைக்கும் வரையில் அவர்கள் சத்தியத் தையும், அஹிம்சையையும் உறுதுணைகளாகக் கொண்டு போராட்டத்தை நடத்திவரவேண்டும். குடி அரசு – குறிப்புரை – 21.06.1925

தாசர் தினம்

தாசர் தினம்

தேசபந்துவினிடம் இத்தேசத்தார் வைத்திருந்த பேரன்பையும், அவருடைய மரணத்தினால் அடைந்துள்ள துக்கத்தையும் காட்டும்பொருட்டு ஜுலை µ முதல் தேதி மாலை 5 மணிக்குத் தேசமெங்கும் பொதுக்கூட்டங் கள் கூட்டித் தீர்மானங்கள் செய்யவேண்டுமென்று மகாத்மா காந்தி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தேசபந்து காலஞ்சென்று அன்றுடன் பதினாறுநாள் ஆகின்றமையால் அன்று அவரது சிரார்த்த தினமும் ஆகும். தமிழ்நாட்டார் இத்தினத்தைத் தகுந்தவண்ணம் நடத்திவைக்க வேண்டுமென நாம் சொல்ல வேண்டுவதில்லை. எல்லாக் கட்சியினரும், எல்லாச் சமூகத் தினரும் அன்று ஒன்றுபட்டு விண்ணுற்ற பெரியாரின் ஆன்மா சாந்திய டையுமாறு இறைவனை வழுத்துவார்களென நம்புகிறோம். தேசபந்துவின் ஞாபக தினத்தில், தேசத்திற்குத் தற்போது இன்றியமையாததாயிருக்கும் ஒற்றுமை விதை விதைக்கப்படுமாக. கைம்மாறு யாது ? இமயம் முதல் கன்னியாகுமரிவரையில் இந்நாட்டு மக்கள் தேச பந்துவின் எதிர்பாரா மரணத்தினால் துயரக்கடலில் மூழ்கியிருக்கின்றனர் என்று கூறுதல் மிகையாகாது. நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் வந்து கொண்டிருக்கும் செய்திகள் இதற்குச் சான்றாகும். லோகமான்ய திலகரின் மரணத்திற்குப் பிறகு இந்தியர்...

தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் மதவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் சென்னை 28112014 விடுதலை இராசேந்திரன் உரை

தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் மதவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் சென்னை 28112014 விடுதலை இராசேந்திரன் உரை

மாநில கழகப் பொறுப்பாளர்கள்

மாநில கழகப் பொறுப்பாளர்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு கீழ்க்கண்ட மாநிலப் பொறுப்பாளர்களை தர்மபுரியில் நடந்த செயலவைக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களின் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். ஈரோடு இரத்தினசாமி – அமைப்புச் செயலாளர் திருப்பூர் துரைசாமி – பொருளாளர் பால். பிரபாகரன் – பரப்புரை செயலாளர் கோபி. இராம. இளங்கோவன் – வெளியீட்டுச் செயலாளர் தபசி. குமரன் – தலைமைக் கழகச் செயலாளர் பெரியார் முழக்கம் 23072015 இதழ்

தோழர் அம்பிகா வாழ்க்கைத்துணை ஏற்பு விழா – சென்னை 18102015

சென்னை மாவட்ட தோழர் க .அம்பிகா, செ.வினோத்குமார் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா இன்று 18.10.15 ஞாயிறு காலை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை ஏற்று நடத்தி வைத்தார்கள். கழக வழக்கறிஞர் தோழர் திருமூர்த்தி, பேராசிரியர் சரஸ்வதி , வழக்கறிஞர் சாரநாத் விசிக மற்றும் பலர் வாழ்த்தினர்.

ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் 0

ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார்

ஸ்ரீமான். இராஜகோபாலாச்சாரியார் வெளியிட்ட அறிக்கைகளில், முதலில் காங்கிரஸ் தற்காலம் பொது ஜனங்களுக்குச் சேவை செய்ய எவ்விதத் திட்டத்தையும் உடைத்தாயிருக்கவில்லை என்றும், காங்கிரசிற்கு இப்போ திருக்கும் மதிப்பெல்லாம், அது சென்ற நான்கு, ஐந்து வருடங்களாக தேசத் துக்கு அநுகூலமான திட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு அதற்காகப் பல தலைவர்களும், தொண்டர்களும் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் ஏற்றுக்கொண்டு பெரிய தியாகங்களையும் செய்து திட்டங்களை நிறைவேற் றப் பிரயத்தனப்பட்டதன் பலனாய் காங்கிரசுக்கு ஏற்பட்ட மதிப்பை வைத்துக் கொண்டு, காங்கிரசின் மூலமாய் பொது ஜனங்களுக்கு நன்மை உண்டாகும் படியான எவ்விதத் திட்டமும் அதில் இல்லாமல், பழைய நிலையின் வாசனை யையே ஆதாரமாக வைத்துக் கொண்டு, காங்கிரஸ், காங்கிரசென்று சிலர் சொல்லி வருகிறார்கள். இப்படியே காங்கிரஸ் இருக்குமேயானால், இனிக் கொஞ்சக் காலத்தில் காங்கிரஸ் மதிப்பே போய்விடும் என்றும் எழுதிவிட்டு, காங்கிரஸிற்கு பூரண மது விலக்கையாவது திட்டமாய் வைத்து அதை ஓட்டர்களுக்கு எடுத்துச் சொல்லி ஓட்டுப் பெற்று சட்டசபைக்குப் போய் ஒரே வருடத்தில்...

வருணாசிரம மகாநாடு 0

வருணாசிரம மகாநாடு

காங்கிரசின்போது காங்கிரசுப் பந்தலில் வருணாசிரம மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு நடக்கப்போவதாய் பல பத்திரிகைகளில் தெரிய வருகின்றது. வருணாசிரம மகாநாடு என்பது என்ன என்று நாம் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. ஆனாலும் சிறிது குறிப்பிடுவோம். என்னவெனில் உலகத்திலுள்ள மக்கள் எல்லாம் 6 வருணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதாவது:- 1. பிராமணன் 2. க்ஷத்திரியன் 3. வைசியன் 4. சூத்திரன் 5. பஞ்சமன் 6. மிலேச்சன் என்பதாக பிரிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அதில் பிராமணன் உயர்ந்தவன் குருவாயிருக்கத்தக்கவன், க்ஷத்திரியன் அதைவிடத் தாழ்ந்தவன் அரசனாயிருக்கத்தக்கவன், வைசியன் அதைவிடத் தாழ்ந்தவன் வியாபாரியாய் இருக்கத்தகுந்தவன், சூத்திரன் அதைவிடத் தாழ்ந்தவன் மேல்கண்ட மூவருக்கும் அடிமையாய் இருக்க வேண்டியதோடு சிறப்பாக பிராமணர்களுக்கு அடிமையாகவும் இருப்பதுடன் சூத்திரனது பெண்களும் பொருள்களும் பிராமணர்களுக்கே உரியது என்றும், கொடுக்காவிட்டால் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்றும், அவர் படிக்கவும் கடவுளை நெருங்கி வணங்கவும் உரிமையற்றவன் என்கின்றதுமான கொள் கையை கொண்டது. ஆதிதிராவிடர், ஆதிசூத்திரர், அவர்ணஸ்தர் நாம் சூத்திரர்...

ஐந்துக்கு இரண்டு பழுதில்லை – சித்திரபுத்திரன் 0

ஐந்துக்கு இரண்டு பழுதில்லை – சித்திரபுத்திரன்

நான் கொஞ்ச காலமாக மறைந்திருந்தேன். இனி அடிக்கடி தோன்று வேன். அன்பர்கள் வரவேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றேன். ஏதாவது விஷயத்தைப் பற்றி பேசுகிற போது முழுதும் உண்மையா யிருக் காது என்று சந்தேகப்படுகிற காலத்தில் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்கிற பழமொழி சொல்வதுண்டு. அது எப்பொழுது ஏற்பட்டது, எதற்காக ஏற்பட்டது என்கிற விபரம் அநேகமாய் நமது தமிழ் மக்களுக்குத் தெரியா தென்றே நினைக்கிறேன். தெரியாதென்று நினைப்பதால் அதைப்பற்றி நான் கண்டு பிடித்த முடிவை சொல்லுகிறேன். “ஐந்துக்கிரண்டு பழுதில்லை” யென்பதானது ஐந்து விஷயம் சொன்னால் அதில் இரண்டாவது பொருத்தமாயிருக்கும். அப்படி இருந்தாலே போதும் என்கிற கருத்துக்கொண்டே இப்பழமொழி வழங்கப்பட்டிருக்கிறது. அது எப்பொழுது என்று பார்ப்போமானால் ஆரியர்கள் நமது நாட்டில் வந்து பொய்யும் புரட்டும் புளுக ஆரம்பித்த காலத்தில் அப்புரட்டுகளை யாராவது கண்டுபிடித்து கேழ்க்க ஆரம்பித்தால் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்” அதாவது முன் சொன்னது போல் ஐந்தில் இரண்டு விஷயங்கள் நிஜமா யிருந்தாலே போதுமென்று...

20 தமிழர் படுகொலை வழக்கு: தமிழக அரசுக்கு கோரிக்கை 0

20 தமிழர் படுகொலை வழக்கு: தமிழக அரசுக்கு கோரிக்கை

தர்மபுரி செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: செம்மரக் கடத்தல் தொடர்பாக -ஆந்திர காவல்துறை 20 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து சுட்டுக் கொன்ற வழக்கை, மத்திய புலனாய்வு நிறுவனம் (சி.பி.அய்.) விசாரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் செய்த பரிந்துரைக்கு ஆந்திர காவல்துறை அம் மாநில உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டது. வழக்கு விசாரணை முடங்கிப் போய் நிற்கும் நிலையில், தடையை நீக்கு வதற்கும், படுகொலை செய்யப்பட்ட தமிழர் களுக்கும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2000 அப்பாவித் தமிழர்களுக்கும் நீதி கிடைப்பதற்கும் தமிழக அரசு, அலட்சியம் காட்டாமல், இந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பினராக இணைத்துக் கொண்டு கடமையாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது. கையெழுத்து இயக்கம் தீவிரமாகட்டும் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு இழைத்த இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் உள்ளிட்டு உலகம் முழுதும் வாழும் தமிழர்களால், மனித உரிமை அமைப்புகளால் வலியுறுத்தப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம், அய்.நா. மனித உரிமை அவையில் இது குறித்த விவாதம் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அண்மையில் நீண்ட நெடுங்காலமாக போர்க்குற்றத்துக்கு உள்ளாகி வரம் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது...

திருவல்லிக்கேணியில் யதீந்திரதாஸ்  வாசக சாலை திறப்பு விழா 0

திருவல்லிக்கேணியில் யதீந்திரதாஸ் வாசக சாலை திறப்பு விழா

தலைவரவர்களே! அன்புள்ள நண்பர் அவர்களே! இன்று திறப்பு விழா கொண்டாடும்படி இந்த பல பாஷை சொல்லிக் கொடுக்கும் முதலிய காரியங்கள் செய்யும் வாசக சாலையை நான் திறந்து வைக்கவேண்டும் என்று எனது பழைய நண்பர்கள் பலர் கேட்டுக் கொண்டதை நான் ஒரு பெருமையாய்க் கருதி அத் தொண்டாற்றவே இங்கு வந்துள்ளேன். எனினும் இத்திறப்புக் கொண்டாட் டத்தை நான் நடத்துவதின் மூலம் எனக்குக் கிடைத்த பெருமையைவிட நான் இங்கு வந்து எனது பழைய நண்பர்களை சந்தித்து அளவளாவ சந்தர்ப்பம் கிடைத்ததே எனக்கு மிகுதியும் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கத்தக்கதாகும். இந்த விழாவிற்கு இன்னார் வந்து சொற்பொழிவாற்றுவார்கள் என்று சொன்னவுடன், யான் எவ்வித யோசனையும் செய்யாமல் உடனே வருவதாக ஒப்புக் கொண்டேன். இந்தப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமே என்கின்ற ஆசை எனக்கு வெகு நாளாகவே இருந்து வந்தது. என்னுடைய ஆசையும் அக்கிராசனர் ஆசையும் இவ்விழாவுக்கு முக்கியஸ்தர்களான திருவாளர்கள் ராமச்சந்திர சர்மா, மதுரை சுப்பிரமணிய அய்யர் ஆகியவர்கள்...

குக்கிராமங்களை குலுக்கிய பெரியார் பிறந்தநாள் வாகனப் பேரணி 0

குக்கிராமங்களை குலுக்கிய பெரியார் பிறந்தநாள் வாகனப் பேரணி

தந்தை பெரியாரின் 137 -வது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அழங்கரித்துக்கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகணப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் (மாவட்ட கழக ஏற்பாட்டில்) கலந்துகொண்டு, நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, கொல்லப்பட்டி...

திருப்பூர் காங்கிரஸ் பிரசாரமும் பணமுடிப்பின் யோக்கியதையும் 0

திருப்பூர் காங்கிரஸ் பிரசாரமும் பணமுடிப்பின் யோக்கியதையும்

சென்ற வாரத்தில் இவ்வூருக்கு திரு. இராஜகோபாலாச்சாரியுள்பட சில காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தார்கள். உடனே பத்திரிகை நிரூபருக்கு ஆள் அனுப்பினார்கள். நிரூபரும் உடனே வந்து சேர்ந்தார். திரு. இராஜ கோபாலாச்சாரியாரின் திக்விஜயங்களையும் அவருடைய பிரசாரத்தின் முக்கிய கொள்கைகளையும் பத்திரிகைக்கு தந்தி கொடுக்கப்பட்டது. பின்னர் பணமுடிப்புக்கு ஒரு புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டது. சிறை சென்ற திருமதி. பத்மாவதி ஆஷருக்கு திருப்பூர் பொதுஜனங்களின் பெயரால் அவர் செய்த தியாகத்தை பாராட்டி ஒரு பண முடிப்பு கொடுப்பதென்றும் ³ யாரின் தலைமையில் கிராம பிரசாரத்துக்கு ³ பணம் செலவழிக்கப்படுமென்றும், ஆனால்  ³ பணமுடிப்பை திரு. இராஜகோபாலாச்சாரியரிடம் கொடுத்து விடவேண்டியதென்றும் முடிவு செய்யப்பட்டது. உடனே, திரு. ஆஷர் கம்பெனியார் ரூ. 501 பிரபல பஞ்சு வியாபாரியும் காங்கிரஸ் தலைவரான வருமான ஒரு கனவான் ரூ. 101 பட்டியல் போட்டு விட்டார்கள். பிறகு சர்க்கா சங்கத்தின் சர்டிபிகேட் பெற்ற கதர் வியாபாரிகளுக்கு உடனே இந்த நிதிக்கு துகை போடும்படி...

தோழர் காந்தி

தோழர் காந்தி

  தோழர் காந்தி அவர்கள் இப்போது இருந்துவரும் பட்டினி விரதத்தில் தீண்டப்படாத கிறிஸ்தவர்கள் விஷயமாயும் பாடுபடுவாராம், “போகட்டும் பாவம்”.  இத்தனை நாளைக்குப் பிறகாவது கிறிஸ்தவ தீண்டாதார் விஷயம் அவருடைய ஞாபகத்துக்கு வந்தது பற்றி ஒரு விதத்தில் மகிழ்ச்சியே. ஆனால் இவையெல்லாம் சுயமரியாதை இயக்கத்துடன் போட்டி போடத் தென்னிந் தியப் பார்ப்பனர்களின் சூத்திரக்கயரின் சக்தியேயாகும் என்பதில் மாத்திரம் சிறிதும் ஐயமில்லை. குடி அரசு – செய்திக் குறிப்பு – 07.05.1933