Tagged: வந்தே மாதரம்

‘வந்தேமாதரம்’-வரலாறு

‘வந்தேமாதரம்’-வரலாறு

ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க. பரிவாரங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இப்போது தேசிய கீதம் பாடப்படுவது இல்லை. அதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுகிறார்கள். ‘வந்தே மாதரம்’ பாடலின் கருத்தும் -வரலாறும் என்ன? பக்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 1880 -ல் ஆனந்த மடம் என்று ஒரு நாவலை வங்காள மொழியில்எழுதினார். அந்தநாவலில் வரும் வங்காள மொழிப் பாடல் தான் ‘வந்தே மாதரம்’ அந்த நாவல் உருவான காலக்கட்டத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டிருந்த முஸ்லிம் மன்னர் அநுமன். ஆங்கி லேயக் கிழக்கிந்திய கம்பெனியினர் சில சமாதான ஒப்பந்தங்களை செய்து கொண்டு சென்னை -பம்பாய் -கல்கத்தா போன்ற நகரங்களில் காலூன்ற முயன்று கொண்டிருந்தனர். அப்போது -இந்த‘ஆனந்தமடம்’நாவலில் சொல்லப்பட்ட செய்தி, ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்பது அல்ல; மாறாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி யை- ஆயுதப் போர் நடத்தி ஒழித்துவிட்டு இந்து-ஆங்கிலேயர்களின் கூட்டணிஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே இந்த நாவலின் மய்யக்...

பிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’

பிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’

இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கனமன’ பாடலுக்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோஷி பேசிய செய்தி ஏடுகளில் வெளி வந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. இப்போது பய்யாஜி அப்படி கூறவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மறுத்திருக்கிறார். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சார செயலாளராக உள்ள (இந்தப் பொறுப்புக்கு ஆர்.எஸ்.எஸ்.சில் ‘பிரச்சார் பிரமுக்’ என்று சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது) எம்.ஜி.வைத்யா, பய்யாஜி ஜோஷியின் கருத்துக்கு தனது வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார். “மூவர்ண தேசியக் கொடியை அரசியல் சட்டம் ஏற்றுள்ளது. இதை மதிக்க வேண்டும்; அதே நேரத்தல், நமது ‘பாரதத்தின்’ பூர்வீக கலாச்சாரத்தின் சின்னமாக காவிக் கொடி ‘தேசியக் கொடி’ உருவாவதற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. அதேபோல் ‘ஜனகணமன’ பாடல் நமது ‘இராஜ்யம்’ பற்றி கூறுகிறது. ஆனால், ‘வந்தே மாதரம்’, நமது கலாச்சாரத்தின் அடையாளம். எனவே நாம் காவிக் கொடி,...