‘வந்தேமாதரம்’-வரலாறு

ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க. பரிவாரங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இப்போது தேசிய கீதம் பாடப்படுவது இல்லை. அதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுகிறார்கள். ‘வந்தே மாதரம்’ பாடலின் கருத்தும் -வரலாறும் என்ன?

பக்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 1880 -ல் ஆனந்த மடம் என்று ஒரு நாவலை வங்காள மொழியில்எழுதினார். அந்தநாவலில் வரும் வங்காள மொழிப் பாடல் தான் ‘வந்தே மாதரம்’

அந்த நாவல் உருவான காலக்கட்டத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டிருந்த முஸ்லிம் மன்னர் அநுமன். ஆங்கி லேயக் கிழக்கிந்திய கம்பெனியினர் சில சமாதான ஒப்பந்தங்களை செய்து கொண்டு சென்னை -பம்பாய் -கல்கத்தா போன்ற நகரங்களில் காலூன்ற முயன்று கொண்டிருந்தனர். அப்போது -இந்த‘ஆனந்தமடம்’நாவலில் சொல்லப்பட்ட செய்தி, ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்பது அல்ல; மாறாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி யை- ஆயுதப் போர் நடத்தி ஒழித்துவிட்டு இந்து-ஆங்கிலேயர்களின் கூட்டணிஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே இந்த நாவலின் மய்யக் கருத்து. வைணவ இந்து இளைஞர்கள் -ஆயுதம் தாங்கிப் போராட வேண்டும் என்பதே கதையின் கரு. இந்த வைணவர்களின் தலைவராக சுவாமி சத்யானந்தா என்று ஒரு துறவியும் -அவரது சீடராக குருபவானந்தா என்ற வீரமிக்க இளைஞரும் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த பவானந்தா – இந்து இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு முஸ்லிம்களை எதிர்த்துப் போராட ஆயுதப் பயிற்சி அளிக்கிறான். (இவைகள் வரலாறு அல்ல; கதையில் வரும் கற்பனை)

பவானந்தா -அப்படி திரட்டும் இளைஞர் களிடம் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’: இதன் பொருள் இதுதான் -“நம்முடைய நோக்கம் நமது தாய் நாட்டை விடுவிப்பதேயாகும். நம்முடைய இனம், மதம், பண்பாடு, பெருமை ஆகிய அனைத்துமே முஸ்லிம்கள் ஆட்சியில் பேராபத்துக்கு உள்ளாகிவிட்டது. நாம் முஸ்லிம் களை ஒழிக்காவிட்டல், நமது தர்மத்துக்கு எதிர் காலமே இல்லை. ஏழுகோடி இந்துக்களாகிய நாம் வாளேந்திகளத்தில் குதித்தால்அதுஒன்றே போதும் நமதுமண்ணின் பெருமையை மீட்க” -இதுதான் ‘வந்தே மாதரம்’ பாடலின் பொருள். ஆனந்த மடத்துக்குள் ‘விஷ்ணு’ வின் மடியில் பலவீனமாக இந்திய மாதா படுத்திருக்கும் படத்தைப் பார்த்து -வைணவ இளைஞர்கள் ‘வந்தே மாதர’ த்தை முழங்கி -முஸ்லிம்கள் மீது ஆயுதமேந்தி போரிடுகிறார்கள். பல முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். முஸ்லிம் பெண்கள் பலர் கற்பழிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு காளி தேவியின் முன் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

 

“நாம்தான் முஸ்லிம்களை ஒழித்து விட்டோமே, ஆனாலும் இந்து ராச்சியம் வரவில்லையே! ஆங்கிலேயர்கள் அல்லவா தொடர்ந்து நம்மை ஆளுகிறார்கள்?” என்று இளைஞர்கள் சத்யான்ந்தாவிடம் கேட்க -அவர் கூறுகிறார்: “இப்போது நமக்கு எதிரிகள் யாருமில்லை. ஆங்கிலேயர்கள் நம்முடைய நண்பர்கள். அவர்கள் தங்கள் அதிகாரங்கள் அனைத்தையும் விஷ்ணு கடவுளுக்கே காணிக்கையாக்கியிருக்கிறார்கள்” என்கிறார். சத்யானந்தாவின் இந்தப் பேச்சோடு கதை முடிகிறது. காங்கிரசில் உள்ள இந்து வெறி பார்ப்பன சக்திகள் -காங்கிரஸ் கூட்டங்களில் இந்தப் பாடலைப் பாடிவந்தார்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1939 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் தீர்மானம் நிறைவேற்றியது. 1905ல்-வங்காளம் பிரிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இந்தப் பாடல் முக்கியத்துவம் பெற்றது. அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தப் பாடலுக்கு தடைவித்தது.

முஸ்லீம்களைப் புண்படுத்தும் பாடலாக இருந்த்தால், காந்தியாரும் இந்தப் பாடல்களைப் பாட அனுமதிக்க மறுத்து வந்தார். 1946 -47ல் ‘வந்தே மாதரத்தை’ தேசிய கீதமாக்க முயற்சி நடந்தும், முஸ்லிம்கள் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. கவிஞர் இக்பாலுடைய ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற -இந்தியா முழுவதும் உணர்ச்சிகரமாகப் பாடப்பட்ட பாடலை,தேசிய கீதமாக வைப்பதற்கு ‘இந்து’க்கள் எதிர்த்தார்கள் , காரணம் – எழுதிய கவிஞர் ஒரு முஸ்லிம் என்பதால், பிறகுதான் ‘ஜனகனமண’ பாடல் தேசிய கீதமானது.

முஸ்லிம்களை எதிர்த்து ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து இந்து ஆட்சியை உருவாக்கும் நோக்கத் துடன் எழுதப்பட்டதுதான் ‘வந்தே மாதரம்’, அது ஆங்கிலேயரை எதிர்த்த தேச பக்திப் பாடல் அல்ல; அதன்காரணமாகத்தான்,‘ஆனந்தமடம்’ஏனைய மொழிகளில் மொழி பெயர்க்கப்படவில்லை; பாடத்திட்டங்களில் இடம் பெறவில்லை. திரைப்படமாகவில்லை; தொலைக்காட்சித் தொடராகவும் உருவாகவில்லை.

விடுதலை ராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூலிலிருந்து…

 

நிமிர்வோம் ஆகஸ்ட் 2017 இதழ்

You may also like...