Tagged: முரசொலி மாறன்

அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதம் ஆளுநர்கள் மய்ய அரசின் கங்காணிகள்

தமிழ்நாட்டில் இப்போது ஆளுநராக இருப்பவர் செயல்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அரசியல் நிர்ணய சபையில் ஆளுநர் பதவி குறித்து கடும் விவாதங்கள் நடந்துள்ளன. முரசொலி மாறன் எழுதிய ‘மாநில சுயாட்சி’ நூலிலிருந்து சில பகுதிகள்: கவர்னரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். குடியரசுத் தலைவர் நியமிக்கிறார் என்றால் பிரதமர் நியமிக்கிறார் என்று பொருள். பிரதமர் நியமிக்கிறார் என்றால் மத்திய அரசை ஆளுகின்ற கட்சி அப்படி முடிவு எடுக்கிறது என்று பொருள். அரசியல் நிர்ணய சபை எடுத்த எடுப்பிலேயே இந்த முடிவுக்கு வந்து விடவில்லை. பலவித முடிவுகளை அலசி ஆராய்ந்து, இறுதியில் இப்படி நியமனம் செய்யும் முடிவுக்கு வந்தது. அவற்றையெல்லாம் ஆராய்ந்தால், கவர்னர் பதவியை நியமனப் பதவி யாக்கியதன் உள்நோக்கம் நன்கு புலப்படும். அரசியல் நிர்ணய சபையின் துவக்கக் காலத்தில், வயது வந்தோருக்கு வாக்குரிமை என்கிற அடிப்படையில் மாநிலத்து வாக்காளர்கள் அனை வரும் பெரும்பான்மை வாக்குகளால் அந்த மாநிலத்து கவர்னரைத் தேர்ந் தெடுக்கலாம்...

திருச்சியில் கழகம் நடத்திய பெரியார் பயிலரங்கம்: பார்ப்பனியம்-உலகமயமாக்கல் உறவுகள்

திருச்சியில் கழகம் நடத்திய பெரியார் பயிலரங்கம்: பார்ப்பனியம்-உலகமயமாக்கல் உறவுகள்

திருச்சி மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக திருவெறும்பூர் தி.மு.க. தொழிற்சங்கக் கட்டிடத்தில் 29.12.2013 அன்று ஒரு நாள் பெரியார் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன் வரவேற்புரையாற்ற, மாவட்ட கழக அமைப்பாளர் குணாராஜ் அறிமுக உரை யாற்றினார். திருச்சி, பெரம்பலூர் பகுதியிலிருந்து 75 இளைஞர்கள் பயிற்சியில் பங்கேற்று, கேள்விகளை எழுப்பி, உரிய விளக்கங்களைப் பெற்றனர். முனைவர் ஜீவா, ‘உலக மயமாக்கல்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் மதிமாறன், ‘பெரியார்-அம்பேத்கர்’ என்ற தலைப்பிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘பெரியார் இயக்கம் எதிர்நோக்கும் சவால்கள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர். முனைவர் ஜீவா உரையின் சுருக்கம்: உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று உலகமெங்கும் பரவிவரும் கொள்கை, இந்தியாவில் சமஸ்கிருதமயமாக்கலையும் சேர்த்துக் கொண்டு மக்களை சுரண்டி வருகிறது. 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, இந்தியா ‘உலகமயமாக்கல்’  என்ற வலைக்குள் சிக்கியது. டங்கல் திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அதன்படி, அன்னிய நாட்டு உற்பத்திகளை...