Tagged: பெரியார் முழக்கம் 12062014 இதழ்

ஆசிரியருக்குக் கடிதம்: “டேவிட் ‘பஸ்ல’ இருக்கான்டா!”

ஆசிரியருக்குக் கடிதம்: “டேவிட் ‘பஸ்ல’ இருக்கான்டா!”

7.5.14 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழில் “உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை” கட்டுரை கண்டேன். இது சம்பந்தமான கடந்தகால நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1961-1962 ஆண்டுகளில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசுப் பணியாற்றி வந்தேன். பட்டுக்கோட்டை சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை. ஒருமுறை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தஞ்சை செல்ல பஸ் ஏறினேன். பஸ் புறப்பட்ட அடுத்த நிறுத்தத்தில் பேருந்தில் இருந்த மூன்று பார்ப்பனர்கள், கண்டக்டரிடம் பேருந்தை நிறுத்திச் சொல்லி தமது பூணூலையும் மேலாடையை யும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘டேவிட் பஸ்சுல இருக்காண்டா’ என்று சத்தம் போட்டு சொல்லிக் கெண்டு பேருந்தைவிட்டு இறங்கி தலைதெறிக்க ஓடியதைப் பார்த்தேன். அணைக்காடு சுயமரியாதை வீரர் டேவிட் கண்ணில் பட்டால் பார்ப்பனர்களின் பூணூல் தப்பாது என்பதை உணர்ந்தேன். பார்ப்பனர்கள் நம் மீது குதிரை சவாரி செய்யலாம் என்ற மதவாத திமிர் போக்கை மாற்றிக் கொண்டு மனிதனாக மாறவேண்டும். இப்போது ஆட்சி அதிகாரத்தை நம்பி ஆட்டம் போட்டால்...

தலையங்கம்: பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்!

தலையங்கம்: பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்!

மறைந்த பெரியார் சாக்ரடீஸ் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடந்தபோது (30.5.2014) கவிஞர் அறிவுமதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். பெரியார் கொள்கைகளுக்கு நெருக்கடி உருவாகியுள்ள அரசியல் சூழலில், பெரியார் இயக்கங்கள், தங்களுக்குள் இணைந்து செயல்படவேண்டும் என்றும், அதற்கான முன்முயற்சியை திராவிடர் கழகத் தலைவரே எடுக்க வேண்டும் என்பதே கவிஞர் அறிவுமதியின் கோரிக்கை. தொடர்ந்து பேசிய நடிகர் சத்தியராஜ் அவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமது உரையில் பேசியதை ‘விடுதலை’ நாளேடு கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருக்கிறது. “இங்கே கவிஞர் அறிவுமதி அவர்களும் நமது இனமுரசு சத்யராஜ் அவர்களும் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். அது பற்றி நான் கருத்து சொல்லவில்லை என்றால், என்ன நாம் எடுத்து வைத்த கோரிக்கைக்கு ஆசிரியர் (கி.வீரமணி) பதில் சொல்லாமல் போய்விட்டாரே என்று கருதிட இடம் கொடுக்கக் கூடாதல்லவா? பெரியார்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

பொற் கோயிலுக்குள் இராணுவம் நுழைந்து 700 பேர் வரைக் கொன்றுக் குவித்த 30 ஆம் நினைவு நாளன்று பொற்கோயிலில் இரு சீக்கிய பிரிவினர், வாள், ஈட்டியுடன் மோதிக் கொண்டனர்.              – செய்தி இப்படித்தான் அன்றைக்கு இராணுவம் நுழைந்த போதும் நடந்தது என்பதை செயல்முறையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் போல! கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம்; 4 அமைச்சர்களிடம் மோடி ஒப்படைத்தார்.  – செய்தி முதலில் ‘பாவம்’ செய்த பக்தர்கள் ‘பாவத்தை’ கங்கையில் தொலைப்பதற்கு தடை போடுங்க! அதுவரை கங்கை “பாவங்களின்” நதியாகத்தான் இருக்கும்; தூய்மையாகாது. போரில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த ராஜபக்சே நியமித்துள்ள விசாரணைக் குழுவிடம், 18,590 புகார் மனுக்கள் வந்துள்ளன.      – செய்தி அப்புறம், இந்த மனுக்களும் காணாமல் போகும்; அதைக் கண்டுபிடிக்க ராஜபக்சே மற்றொரு குழு போடுவார். இந்திய வெளியுறவுத் துறை அதையும் வரவேற்று அறிக்கை விடும். அட, போங்கப்பா! “கற்பழிப்பு” குற்றவாளிகளை கடவுளால் மட்டுமே தடுக்க...

கரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை

கரூர்-திருச்சிப் பகுதிகளில் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றி நடை

ஊர்தோறும் சென்று மக்களை சந்தித்து கழகத்தின் செயல்பாடுகளை விளக்கிடும் துண்டறிக்கைகளை வழங்கி பெரியார் கொள்கைகளை விளக்கிடும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. கழகத்தின் பரப்புரைக்காக வாங்கப்பட்டுள்ள ‘வேனில்’ தோழர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். வாகனத்திலேயே உணவுப் பொருள்களை எடுத்துப்போய் ஆங்காங்கே உணவு தயாரித்து சாப்பிட்டு, வாகனத்திலேயே தங்கி, தொடர்ந்து தோழர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகிறார்கள். கழகப் பொருளாளர் இரத்தின சாமி, இந்த இயக்கத்துக்கு தலைமை யேற்று திட்டமிட்டு வழி நடத்தி வருகிறார். சந்திக்கும் மக்களிடம் ரூ.10 மட்டுமே நன்கொடையாக வாங்கும் இந்தத் திட்டத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் நன்கொடை வழங்குவதோடு கழக வெளியீடுகளையும் வாங்கி வருகிறார்கள். வெற்றி நடைபோடும் மக்க சந்திப்பு திட்டம் பற்றிய செய்தி தொகுப்பு: மே 22, 2014 : திராவிடர் விடுதலைக் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கத்தை, கரூரில் 22.5.2014 காலை 11 மணிக்கு மூத்த பெரியார் தொண்டர்...