Tagged: பெரியாரின் செயல்வடிவம்

பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம்  (2) கொளத்தூர் மணி

பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (2) கொளத்தூர் மணி

‘இளந்தமிழகம் இயக்கம்’ பெரியார் பிறந்த நாளையொட்டி ‘பெரியாரும் தமிழ் தேசியமும்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) மொழித் தூய்மைவாதம் என்பது தன் மொழி மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தை எதிர்ப்பது. சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் என்று நம் மீது செலுத்தப்படும் எல்லா ஆதிக்கத்தையும் எதிர்க்கும் நாம், நம் மொழி மீது வேற்று மொழி ஆதிக்கம் செலுத்துவதை எதிர்ப்பது நியாயம் தான். பெரியாரும் பேசியிருக்கிறார் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மொழி பெயர்க்கும்போது னுளைiகேநஉவயவே என்ற சொல்லுக்கு பூத நாசினி என்று சொல்லுகிறார்கள். நச்சு நீக்கி என்று சொன்னால் என்ன? நுடநஉவசடிடலளளை என்ற சொல்லை ஏன் விக்தியோஜனம் என்று மொழிபெயர்க்கிறீர்கள்? மின் பருக்கை என்று ஏன் கூற மறுக்கிறீர்கள்? பெரியார் கேட்கிறார். நம் மொழி மீது இன்னொரு மொழியின் ஆதிக்கம் வேண்டாம் என்பது சரி; ஆனால் இனத் தூய்மை வாதம் பேசுகிறபோதுதான் சிக்கலே வருகிறது. இனத் தூய்மைவாதம் பேசுகிறவர்களிடம்...