Tagged: பார்ப்பன சூழ்ச்சி

வஞ்சகம் – பார்ப்பன சூழ்ச்சிக்கு பலியானவர்! அப்சல்குருவை நினைவு கூர்வது தேசத் துரோகமா?

தொலைக்காட்சி விவாதங்களில் சங்பரிவாரங் களின் பிரச்சார பீரங்கிகள் செவிப் பறைகளைக் கிழிக்கிறார்கள். “அப்சல் குருக்களாக மாறுவோம்; ஓராயிரம் அப்சல்குருக்கள் உருவாகுவார்கள்” என்று முழக்கமிட்டவர்கள் தேச துரோகிகளா? இல்லையா? இதை எப்படி ஒரு தேசம் அனுமதிக்க முடியும்? மீண்டும் மீண்டும் இதே கேள்விதான். அப்சல் குரு உண்மையிலே தேசத் துரோகி தானா? நாடாளுமன்றத் தாக்குதலில் அவர் பங்கு பெற்றவரா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை; கையில் சிக்கிய ஒரு அப்பாவியை வஞ்சகமாக பொய்யாகக் காவு கொடுத்தக் கயவர்கள் இவர்கள் என்பதை இந்த வழக்கின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் தெரிய வரும். இந்த வழக்கில் நடந்த முறைகேடுகளை – மோசடிகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறோம். • 2001, டிசம்பர் 3 ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் முன் தாக்குதல் நடந்தது. இந்த கொடும் குற்றத்தில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளும் அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 7 பேரும் இதில் கொல்லப்பட்டனர்....

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (2)

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (2)

பவுத்தத் துறவிகளின் மாநாட்டுப் பந்தலுக்கு தீயிட்ட பார்ப்பனர்கள் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: (10.12.2015 இதழ் தொடர்ச்சி) 8) அபிமன்யூ என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன் பவுத்தர்களை இனப் படுகொலை செய்துவிட்டு கடும் பனிப் பொழிவினால் இறந்தார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தான். (ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்ததுபோல) இந்தப் படுகொலைகளை குளிர்காலங்களில் நடத்தினான். அந்த 6 மாதங்களிலும் தனது நாட்டை விட்டு வெளியேறி, ஒரு பள்ளத்தாக்குப் பகுதிக்குப் போய்விடுவான். திட்டமிட்டபடி பவுத்தர்கள் படுகொலைகள் நடக்கும். கேட்டால் பனியில் உறைந்து இறந்தார்கள் என்று பொய் சொல்வான். பனிப் பொழிவில் பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை என்று கேட்டதற்கு, “அவர்களிடம் உள்ள ஆன்மீக சக்தியால் மரணத்தைத் தடுக்கிறார்கள்; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய் கிறார்கள்” என்று பதில் கூறினான். (ஆதாரம்: கல்கணன்) 9) பவுத்த மதத்தினர் ஒரு பெண்ணைக் கடத்தியதாகக் கூறி ஆயிரக்கணக்கான...