Tagged: பார்ப்பனீயம்

“அன்னையர்களை” நெருப்பில் கொளுத்திய பார்ப்பனியம்

“அன்னையர்களை” நெருப்பில் கொளுத்திய பார்ப்பனியம்

மே 8 – உலக அன்னையர் நாள். 1908ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வெர்ஜினியாவில் உள்ள கிராம்டன் நகரில்தான் இது முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது. இப்போது இந்தியா உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 2ஆவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. சமூக வரலாற்றில் பெண்களே சமூகத்துக்குத் தலைமை தாங்கினார்கள். தனிமனித சொத்துடைமை உருவான பிறகு தாய்வழிச் சமூகம், தந்தை வழிச் சமூகமாகியது. தனது வாரிசுகளுக்கே சொத்துகள் போய்ச் சேர வேண்டும் என்ற சமூக வேட்கை, பெண்களை ஆண்களுக்கு  அடிமைப்படுத்தியது. இந்து பார்ப்பனிய மதம், அன்னையர்களை கொடுமைப் படுத்தியே வந்திருக்கிறது. வர்ணக் கலப்பைத் தடுப்பதற்கு கணவன் இறந்தவுடன் அவனை எரியூட்டும் நெருப்பில் அவனது மனைவியையும் உயிருடன் எரிக்கும் சமூகக் கொடுமைகளை பார்ப்பனர்கள் திணித்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகள், இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராடியதால், பிரிட்டிஷ் ஆட்சி உடன்கட்டை ஏறும் கொடுமைக்கு சட்டப்படி முற்றுப்புள்ளி வைத்தது. தடைச் சட்டத்தையும்...

கன்யாகுமாரின் புரட்சி முழக்கம் பார்ப்பனியத்திலிருந்து விடுதலை கேட்கிறோம்!

“நாங்கள் பார்ப்பனியத் திடமிருந்து ஜாதியிலிருந்து முதலாளித்துவத்திலிருந்து விடுதலை கேட்கிறோம். எங்கள் போராட்ட உணர்வை நசுக்கிட முடியாது” என்று பிரகடனப்படுத்தினார், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார். தேசத் துரோக குற்றச் சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார், இப்போது நாடு முழுதும் கவனிக்கப்படும் போராளி. உச்சநீதிமன்றம், பல நிபந்தனை களோடு அவருக்கு 6 மாதம் பிணை வழங்கியிருக்கிறது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற அவருக்கு, மாணவர்கள் எழுச்சியான வரவேற்பு அளித் தார்கள். சிறை மிரட்டல் அவர் உறுதியை குலைத்துவிடவில்லை. புடம் போட்ட போராளியாக வெளியே வந்திருக்கிறார். சிறை மீண்டு மாணவர்களிடையே அவர் ஆற்றிய உரையை 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வலைதளங்களில் பார்த்திருக் கிறார்கள். அதே நாளில் மோடி நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. மின்சார அதிர்வுகளை உருவாக்கியது போல் அமைந்திருந்தது. அவரது உரை என்று...