Tagged: பார்ப்பனர்களின் தீண்டாமை

காஞ்சி கோயிலில் ‘பார்ப்பனர்’ திணிக்கும் தீண்டாமை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் என்றாலே சங்கர்ராமன் என்ற அர்ச்சகர் வெட்டிக் கொலை செய்யப் பட்டது நினைவுக்கு வரும். சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி ஜெயேந்திரன் உள்ளிட்ட அனைவரும் விடுதலையாகிவிட்டார்கள். ஆனால், சங்கர்ராமனை கொலை செய்தது யார் என்பதற்கு விடை கிடைக்கவில்லை. தன் கண் முன்னே தனது பக்தன் வெட்டி வீழ்த்தி இரத்த வெள்ளத்தில் சாய்ந்ததை நேரில் பார்த்துக் கொண்டிருந்த “வரதராஜப் பெருமாளும்” அப்படியே “கல்லு”போலவே இருக்கிறார். அதே வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள் இப்போது பார்ப்பனர் நடத்தும் ‘தீண்டாமை’ வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்குள் ‘மாமுனிவர்’ வைணவ கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்குள் உள்பிரகாரத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அய்யங்கார் பார்ப்பனர்களை மட்டுமே அங்கே உட்கார வைத்து, அவர்களை வழிபடுவதுபோல் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ பாட அனுமதிக்கப்படுகிறது. பார்ப்பனரல்லாத வைணவர்கள் கோயில் உள்புற வளாகத் துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவது இல்லை. கோயில் வளாகத்துக்குள்ளேயே பார்ப்பனரல்லாதவர்கள் அனுமதிக்கப் படாததை எதிர்த்து சில...

பிரிட்டனில் பார்ப்பனர்கள் திணிக்கும் தீண்டாமைக்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டனில் பார்ப்பனர்கள் திணிக்கும் தீண்டாமைக்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டனில் குடியேறிய பார்ப்பன உயர் ஜாதி இந்துக்கள், அங்கும் ஜாதியையும் தீண்டாமையையும் பின்பற்றி வரும் அவலம் நீடிக்கிறது. கடந்த மார்ச் 2 ஆம் தேதி இலண்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் களிடையே நிலவும் ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. தெற்காசிய ஒற்றுமைக் குழு ‘ஜாதிய கண்காணிப்பு மய்யம்’ தெற்காசிய புலம் பெயர் சமூகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த கருத்தரங்கினை நடத்தின. பிரிட்டனில் ‘ஜாதிய கண்காணிப்பகம்’ என்ற ஜாதிக்கு எதிரான அமைப்பு அங்கே இப்போதும் ‘இந்து’, ‘சீக்கியர்’ சமூகங்களில் பின்பற்றப்பட்டு வரும் ஜாதி தீண்டாமை பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. 2010ஆம் ஆண்டில் பிரிட்டனில் நிறவெறி பாகுபாடு களுக்கு எதிராக ‘சமத்துவ சட்டம்’ ஒன்றை அந்நாடு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தில் ஜாதிய பாகுபாட்டுக்கு எதிரான பிரிவையும் இணைக்க வேண்டும் என்று பிரிட் டனில் இந்தியாவிலிருந்து குடியேறிய ஜாதி எதிர்ப்பாளர்கள் – தொடர் போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தினர்....

ஆசிரியருக்குக் கடிதம்: “டேவிட் ‘பஸ்ல’ இருக்கான்டா!”

ஆசிரியருக்குக் கடிதம்: “டேவிட் ‘பஸ்ல’ இருக்கான்டா!”

7.5.14 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழில் “உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை” கட்டுரை கண்டேன். இது சம்பந்தமான கடந்தகால நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1961-1962 ஆண்டுகளில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசுப் பணியாற்றி வந்தேன். பட்டுக்கோட்டை சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை. ஒருமுறை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தஞ்சை செல்ல பஸ் ஏறினேன். பஸ் புறப்பட்ட அடுத்த நிறுத்தத்தில் பேருந்தில் இருந்த மூன்று பார்ப்பனர்கள், கண்டக்டரிடம் பேருந்தை நிறுத்திச் சொல்லி தமது பூணூலையும் மேலாடையை யும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘டேவிட் பஸ்சுல இருக்காண்டா’ என்று சத்தம் போட்டு சொல்லிக் கெண்டு பேருந்தைவிட்டு இறங்கி தலைதெறிக்க ஓடியதைப் பார்த்தேன். அணைக்காடு சுயமரியாதை வீரர் டேவிட் கண்ணில் பட்டால் பார்ப்பனர்களின் பூணூல் தப்பாது என்பதை உணர்ந்தேன். பார்ப்பனர்கள் நம் மீது குதிரை சவாரி செய்யலாம் என்ற மதவாத திமிர் போக்கை மாற்றிக் கொண்டு மனிதனாக மாறவேண்டும். இப்போது ஆட்சி அதிகாரத்தை நம்பி ஆட்டம் போட்டால்...