Tagged: பத்ரி

தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை 30042017

“கழக செயல் வீரர் ” தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று…. காலை தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், சென்னை மாவட்ட நிர்வாகிகள், இயக்க தோழர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்த தோழர்கள் வந்திருந்தனர்….. தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்தில் தோழர்.அன்பு தனசேகரன் அவர்கள் வீரவணக்கம் முழக்கம் எழுப்பி, தோழர்.பத்ரி நாராயணன் அவர்களுடன் தன்னுடைய வாழ்நாள் அனுபவங்கள் அவரின் பெரியாரின் கொள்கையும் பற்றியும் பேசி தனது ஆழ்ந்த இரங்கலோடு மரியாதை செலுத்தினார்கள்… நினைவிடத்தில் வந்திருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி , திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளின் தோழர்கள், தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் பழகிய நாட்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு வீரவணக்கத்தை செலுத்தினார்கள்… தமிழ்நாடு அறிவியல் மன்றத்திலிருந்து வந்திருந்த தோழர்.வீ.சிவகாமி அவர்கள் தோழர்.பத்ரி நாராயணன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்…....

பத்ரிநாராயணன் 13ஆவது நினைவு நாள்

திராவிடர் விடுதலை கழகத்தின் கழக செயல் வீரர் பத்ரி நாராயணன் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் 30.4.17 அன்று  மிகுந்த எழுச்சியுடன் நடந்தது. அவரது நினைவிடத்தில் கழகத் தோழர்கள், காலை 9 மணி யளவில் மலர்வளையம் வைத்து உறுதி மொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தினர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர், ஆசிரியர் திருப்பூர் சிவகாமி நிகழ்வில் பங்கேற்றார். தலைமைக் குழு  உறுப்பினர் அன்பு தனசேகரன்  வீரவணக்க முழக்கங் களை எழுப்பி உரையாற்றினார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் அண்ணா மலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ரூதர். கார்த்திக், குமரப்பா , தி.மு.க. ஆர்.என். துரை ஆகியோர் பத்ரியின் கொள்கை உறுதியை நினைவுகூர்ந்து உரையாற்றினர். இராயப்பேட்டை  பெரியார் படிப்பகத்தில் பத்ரி நாராயணன் புகைப்படத்திற்கு தலைமை கழகச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார்.  பகுதி முழுதும் ஏராளமான கழகக் கொடிகளை தோழர்கள் கட்டி யிருந்தனர். மாவட்ட செயலாளர் உமாபதி நிகழ்வுகளை...