Tagged: நெல்சன் மண்டேலா

இன விடுதலைப் போராளி மண்டேலா – விடை பெற்றார்!

இன விடுதலைப் போராளி மண்டேலா – விடை பெற்றார்!

கறுப்பினப் போராளி, இன விடுதலை இயக்கங்களின் நாயகர், சிறைப் பறவை மண்டேலா, அம்பேத்கர் முடிவெய்திய அதே டிசம்பர் 6 ஆம் நாளில் விடைபெற்றுக் கொண்டுவிட்டார். “வன்முறைக்கு இடம் கொடுக்காமல் அமைதியான வழியில்தான் எங்கள் போராட்டங்களை தொடங்கினோம். ஆனால், அரசு வன்முறையை ஏவியது. வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்பதால் நாங்களும் எங்கள் வழிமுறைகளை மாற்றிக் கொண்டோம். நாங்கள் தேர்ந் தெடுத்தது வன்முறையைத் தானே தவிர, பயங்கரவாதத்தை யல்ல” என்று கூறிய மண்டேலா, பிறகு அந்த வன்முறைப் போராட்டத்தையும் கைவிட் டார். வரலாறாகிப் போன அந்த விடுதலை வீரர் பற்றிய சுருக்கமான வரலாறு இதுதான்: (நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்) 18 ஜூலை 1918 அன்று தென்னாப்பிரிக்காவின் வெஸோ என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் ரோலிலாலா மண்டேலா. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் காட்லா. பள்ளி ஆசிரியருக்கு ரோலிலாலா வாயில் நுழையவில்லை போல. “இனி உன் பெயர் நெல்சன்” என்று சொல்லி விட்டார். கருப்பின மக்களை...

சென்னை கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு : மண்டேலா-பெரியார் சந்தித்த போராட்டக் களங்கள்

சென்னை கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு : மண்டேலா-பெரியார் சந்தித்த போராட்டக் களங்கள்

கறுப்பினப் போராளி நெல்சன் மண்டேலா, பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம், மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மந்தைவெளியில் 27.12.2013 அன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜான், மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகர், வழக்கறிஞர் துரை, அருண், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். கறுப்பர் இனத்தின் மீதான நிற ஒதுக்கல் என்ற அடிமைத்தனத்துக்கு எதிராக போராடி, 27 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு, உலக நாடுகள் தந்த அழுத்தத்தின் காரணமாக, விடுதலைப் பெற்று, வெள்ளை நிறவெறி அரசின் இனஒதுக்கல் கொள்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த மண்டேலா வின் போராட்ட வாழ்க்கையை விடுதலை இராசேந்திரன் சுட்டிக் காட்டினார் ரிவோலியா. நீதிமன்றத்தில் மண்டேலாவின் பிரகடனம், எந்த இனமும் மற்றொரு இனத்துக்கு அடிமையாவதை எதிர்த்தது. கறுப்பர், வெள்ளையர் என்ற இரு பிரிவினரும் சம உரிமைகளோடு வாழக்கூடிய ஒரு ஜனநாயக தாராள சுதந்திரக் கொள்கையையே அவர் வலியுறுத்தினார். வெள்ளை நிறவெறி ஆட்சி திணித்த இன ஒதுக்கல்...