Tagged: தோழர் இந்துமதி

தோழர் முனியாண்டி படத்திறப்பு விழாவில் அவரின் இணையர் உருக்கமான பேச்சு

“இனி யார்கிட்ட சண்ட போடப்பேறன்னு தெரியலையே…” “எங்களுக்கு சுயமரியாதை திருமணம்தான் நடந்திச்சி. இதுநாள் வரைக்கும் எங்களுக்குள்ள சண்ட வந்ததே இல்ல. இங்க பேசின எல்லோரும் சொன்னா மதிரி எங்க வீட்டுக்காரருக்கு கோவம் வரவே வராது. நான் வேணும்னே சண்டக்கி போவேன். அப்ப கூட அவரு சிரிச்சிகிட்டே போயிடுவாரு. இனி நான் சண்ட போடறதுக்கூட ஆள் இல்லையே. இங்க எல்லா தோழர்களும் சேர்ந்து கொடுத்த பணத்தை வாங்கியத நினச்சா எனக்கு ஒடம்பே கூசுது. யாரும் தப்பா நினைச்சிக்க வேணாம். எனக்கு சுயமரியாதையையும், தன்னம்பிக்கையும் பெரியார் கத்துக்கொடுத்ததாலதான் அந்த பணம் வாங்குவதற்கு எனக்கு ஒரு மாதிரியா இருக்குது. உடனே என் பையன்கிட்ட அத கொடுத்தா அவனும் பெரியாரையும், அம்பேத்கரையும் படிச்சதால வேணாம்னு சொல்லிட்டான். திலீபன் தோழர் கிட்ட சொல்லி இந்த பணத்தை இயக்க செலவுக்கு வெச்சிக்கோங்கனு சொன்னேன். அவரும் வாங்காததால எனக்கு இதுவரைக்கும் ஒரு மாதிரியா இருக்குது. என்னுடைய கணவர் இறந்த பிறகு ஊர் ஆளுங்ககிட்ட...