Tagged: தூக்கு தண்டனை ரத்து

பிரிட்டிஷ் ஆட்சியின் மனித நேயமும்  பார்ப்பன ஆட்சியின் ‘மனுதர்மமும்’

பிரிட்டிஷ் ஆட்சியின் மனித நேயமும் பார்ப்பன ஆட்சியின் ‘மனுதர்மமும்’

பிரிட்டிஷ் ஆட்சி காட்டிய கவலையைக்கூட இந்திய “சுதந்திர” ஆட்சி தூக்குத் தண்டனைக் கைதிகளிடம் காட்ட முன்வரவில்லை. கிரிமினல் குற்றங்களில் தூக்குத் தண்டனைக்குள்ளாவோர் பெரும்பாலும் பார்ப்பனரல்லாத ‘சூத்திரர்களும்’, ‘பஞ்சமர்களும்’ தான் என்பதால் மனுதர்மப் பார்வை யுடனே  இந்திய பார்ப்பன ஆட்சி செயல்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலமான 1937 ஆம் ஆண்டில் நடந்த ஒரு வழக்கைக் குறிப்பிட வேண்டும். அப்போது கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. ‘அத்தப்பா கவுண்டன்’ என்பவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்துக்கு அப்பீல் விசாரணை வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு தூக்குத் தண்டனை வழங்கலாம் என்று கீழ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்க முடியாது என்று மற்றொரு  நீதிமன்றம், விளக்கம் கூறி, தூக்குத் தண்டனையை நிறுத்தியது. ஒப்புதல் வாக்கு மூலத்தையே சாட்சியமாக ஏற்றுக் கொண்டால், அது, குற்றவாளிக்கு தண்டனையை...

மனித உரிமைக்கு குரல் கொடுத்த நீதிபதிகள்

மனித உரிமைக்கு குரல் கொடுத்த நீதிபதிகள்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கையெழுத்திட்டு தனித்தனியாக கடிதங்கள் எழுதியுள்ள நீதிபதிகள்: பி.பி. சாவந்த் (உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி) எ.பி.ஷா (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) டிபிலால் நஸ்கி (ஒரிசா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) ஆர்.கே. மிஸ்ரா (பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி; கோவா மனித உரிமை ஆணையத்தின் தலைவர்) ஹோஸ்பெட் சுரேஸ் (பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி) பன்சன்த் ஜெயின் (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி) பிரபா சீனிவாசன் (சென்னை உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) கே.பி. சிவசுப்ரமணியன் (சென்னை உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) பி.சி. ஜெயின் (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) எஸ்.என். பார்கவா (சிக்கிம் உயர்நீதிமன்ற முன்னாள்  தலைமை நீதிபதி, அசாம் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர்) பி.ஜி. கோல்சே பட்டீல் (பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) இரன்வீர் சாய் வர்மா (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) பி.ஏ. கான் (ஜம்மு காஷ்மீர்...

தூக்குத் தண்டனை; சில தகவல்கள்

தூக்குத் தண்டனை; சில தகவல்கள்

உலகம் முழுதும் அனைத்து நாடுகளும் மரண தண்டனையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று, 2007, 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் அய்.நா.வின் பொதுச் சபை தீர்மானம் வலியுறுத்தியது. நடப்பு ஆண்டிலும் இதே போன்ற தீர்மானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு அய்.நா. முதலில் இத் தீர்மானத்தைக் கொண்டுவந்தபோது 104 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 54 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 29 நாடுகள் விலகி நின்றன. அடுத்த ஆண்டில் மேலும் 2 நாடுகள் கூடுதலாக வாக்களித்தன. எதிர்க்கும் நாடுகள் எண்ணிக்கை 54லிருந்து 46 ஆக குறைந்தது. விலகி நின்ற நாடுகள் 34 ஆக உயர்ந்தது. மீண்டும் 2010 இல் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வந்தபோது, 109 நாடுகள் ஆதரவாகவும், 41 நாடுகள் எதிர்ப்பாகவும் ஓட்டளித்தன. 36 நாடுகள் வாக்கெடுப்பில் பங்களிக்காமல் விலகி நின்றன. 1945 இல் அய்.நா. சபை உருவானபோது 8 நாடுகள் மட்டுமே தூக்குத் தண்டனையை முழுமையாக ஒழித்திருந்தன....