Tagged: தீட்டு

நேரு பல்கலைக் கழகத்தில்  தீட்டு கழிக்கும் சடங்காம்!

நேரு பல்கலைக் கழகத்தில் தீட்டு கழிக்கும் சடங்காம்!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் பெண்களும் தடையின்றி நுழைய முடிந்தது. தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார் சிறையிலிருந்து பிணையில் விடுதலை பெற்று திரும்பியபோது நிகழ்த்திய உரையிலும் இதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார். இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம், சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. இப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் மாணவிகளுக்கு 5 புள்ளிகள் மதிப்பெண்ணும், பிற்படுத்தப்பட்டோருக்கு 10 புள்ளிகள் மதிப்பெண்ணும் சலுகைகளாக வழங்கப்பட்டு வந்ததை பல்கலைக் கழக நிர்வாகம் திடீரென இரத்து செய்துவிட்டது. இதற்கிடையே கன்யாகுமாரும், மாணவர்களும் ‘தேச விரோத’ செயலில் ஈடுபட்டார்கள் என்றும், அதனால் பல்கலைக்கழகம் தீட்டாகிவிட்டது என்றும் ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள்,  பார்ப்பன புரோகிதர்களை வைத்து தீட்டு கழிக்கும் சடங்குகளை ‘ராம நவமி’ அன்று நடத்தியுள்ளனர்.   பெரியார் முழக்கம் 21042016 இதழ்

பெண்கள் மீதான தீண்டாமை!

பெண்களை மாதந்தோறும் தீண்டாமைக்கு உள்ளாக்கும் ஒரு நிகழ்வு இன்னும் தொடர்கிறது. பெண்களைக் கீழானவர்கள் என்ற உளவியலைக் கட்டமைக்கும் இந்தத் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது குறித்து தமிழ் ‘இந்து’ நாளேட்டில் (ஜூலை 24) வெளி வந்த கட்டுரையி லிருந்து சில பகுதிகள்: நீந்த, ஓட, நடனம் ஆட, விளையாட, குத்துச்சண்டை போட, சைக்கிள் ஓட்டத் தயார் நிலையில் நிற்கும் பெண்கள். அவர்களின் உடல் உறுப்புகளிலிருந்து இரத்தம் கசிகிறது. இப்படிப் புறச் சூழலால் உண்டான காயங்களால் இரத்தம் வழிந்தாலும் மாதவிடாய் காரணமாக உடலுக்குள்ளிருந்து இரத்தம் கசிந்தாலும் அத்தனை பெண்களும் மீண்டும் எழுகிறார்கள். தன்னைத் தானே உந்தித் தள்ளித் தடைபட்ட பயணத்தை மீண்டும் தொடர்கிறார்கள். ‘நோ பிளட் ஷுட் ஹோல்ட் அஸ் பேக்’ (‘NO blood should  hold us  back’), ‘டோன்ட் லெட் யுவர் பீரியட் ஸ்டாப் யூ’ (Don’t let your period stop you) என்கிற வாசகங்களுடன் சானிட்டரி பேடுக்கான ஒரு பிரிட்டன் விளம்பரப் படம் கம்பீரமாக பறைசாற்றுகிறது. பெண்ணுரிமைப் பார்வையில் இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் தன்னுடைய கனவை, வேட்கையை, இலக்கை நோக்கித் துணிந்து வீறுநடை போட ஒருபோதும்...