Tagged: ஜாதி மறுப்புத் திருமணங்கள்

உறவுக்குள் திருமணம்: ஊனமாகும் குழந்தைகள்: பெண்களை நெகிழ வைத்த பரப்புரை

உறவுக்குள் திருமணம்: ஊனமாகும் குழந்தைகள்: பெண்களை நெகிழ வைத்த பரப்புரை

அகமண முறைக்கு எதிராக கழகம் நடத்திய பரப்புரை இயக்கத்தின் பதிவுகள். கடந்த இதழின் தொடர்ச்சி. பிப்.18 காலை 10 மணிக்கு கருந்திணை இல்லத்தில் பயணக் குழுவில் உள்ள தோழர்களுக்கு பணியிடைப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அகமண முறையின் ஆபத்துகளையும், ஜாதி மறுப்புத் திருமணங்களின் அவசியத்தையும் விரிவாக விளக்கி தோழர் பூங்குழலி வகுப்பு நடத்தினார். இரண்டு நாள்களாக பயணக் குழுவிடம் பொது மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான பதில்களை அறிந்துகொள்ளும் வகையில் வகுப்பு நடந்தது. கேள்வி-பதில் முறையில் பயிற்சிக் கையேடும் வழங்கப்பட்டது. அந்தக் கையேட்டின் செய்திகளை அடிப்படையாக வைத்து பரப்புரைக் குழுவினர் வீதி நாடகங்களையும், சொற்பொழிவுகளையும் திட்ட மிட்டனர். அத்தகைய வீதி நாடகங்களைப் பார்த்து, அதன் உண்மைகளைப் புரிந்த கிராமத்துப் பெண்கள் நமது தோழர்களிடம், ‘எங்கள் ஊரில், எங்கள் வாழ்க்கை யில் நடப்பதை நாடகமாக நடத்துள்ளீர்கள். இனி ஒரு ஜாதிக்குள் திருமணம் செய்யவே மாட்டோம்’ என கண்ணீருடன் உறுதியளித்த நெகிழ்வான நிகழ்வு களோடு...

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணை

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணை

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு ஆட்சி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது. “ஜாதி மறுப்புத் திருமணங்கள் தேசத்தின் நலனைக் காப்பதாகும். காரணம், ஜாதி மறுப்புத் திருமணங்களே. ஜாதி அமைப்பை அழிக்கக் கூடியவை” என்று கூறிய உச்சநீதிமன்றம், உ.பி. மாநில ஆட்சிக்கு நிரந்தரமான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் வெவ்வேறு ஜாதி மதங்களுக்குள் திருமணம் செய்து கொள்வார்களேயானால், அவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தருவதும், அச்சுறுத்தலிலிருந்து தடுப்பதும் ஆட்சியாளர்கள், காவல்துறையின் கடமை என்று உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியிருந்தது. லதாசிங் என்ற பெண், உ.பி. அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஒரு இணையர், மேற்குறிப்பிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினர். கடந்த...