Tagged: செயின்ட் மேரீஸ்

மயிலாப்பூர் செயின்ட் மேரீஸ் டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம்

மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் செயின்ட் மேரீஸ் பாலத்திலுள்ள டாஸ்மார்க் கடையை அகற்றக் கோரி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அந்த பகுதி பொது மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தியது. தோழர்களுடன் பொது மக்களையும் காவல்துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. தொடர்ந்து ஐந்தாண்டுகளில் நான்காவது முறையாக பெரும் முற்றுகை போராட்டத்தை மயிலை பகுதி தோழர்களுடன் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியுள்ளது. அரசு செவிசாய்த்து கடையை நீக்கும் வரை போராட்டங்கள் ஓயாது. மாவட்ட செயலாளர் தோழர் இரா.உமாபதி பத்திரிகையாளர்களை சந்தித்து கோரிக்கையை செய்தியாக வைத்தார். பகுதி பொதுமக்களும் தன் மனக்குமுறல்களை பத்திரிகையாளர்களிடம் கொட்டித் தீர்த்தனர். பெண்களும் கைதாகியது தோழர்க ளை மேலும் இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வழிசெய்தது… தற்போது கைதாகி மண்டபத்தில் … திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்