Tagged: சுப.உதயகுமாரன்

உலகையே கூறுபோடும் அக்ரகாரங்கள் – சுப. உதயகுமாரன்

இன ஒதுக்கல் என்ற மனித விரோதக் கொள்கையின் குறியீடுகளே ‘அக்கிரகாரங்கள்’.  அந்த ‘அக்கிரகார’ சிந்தனை உலக நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. நாம் வாழும் உலகின் புறத்தோற்றத்தை மனக் கண்ணால் காண்பதும், அதன் உள்கட்டமைப்புக்கள், செயல்பாடுகள் பற்றி யெல்லாம் ஓர் அனுமானம் கொண்டிருப்பதும் ஒவ்வொரு சிந்திக்கும், செயல்படும் மனிதனுக்கும் அத்தியாவசியமானத் தேவையாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் கடைபிடிக்கப்பட்ட “அபார்தைட்” எனும் இனவெறிக் கொள்கையை பயன்படுத்தி கெர்னாட் கோலர் என்கிற ஜெர்மானிய அறிஞர் 1978-ஆம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதினார். “அபார்தைட்” என்பது தென் ஆப்பிரிக்காவின் பெரும்பான்மை கறுப்பின மக்களை., சிறுபான்மை வெள்ளையர்கள் அடக்கி ஆண்ட ஆட்சி முறை. உலக அளவிலும் வெறும் 22 விழுக்காடு மக்களாக இருக்கும் வெள்ளையர்கள் 78 விழுக்காடு பிற இனங்களைச் சார்ந்த  பெரும்பான்மையினரை கட்டுக்குள் வைத்து, கசக்கிப் பிழிவதை “உலக அபார்தைட்” என்று அவர் விவரித்தார். வெள்ளையினத்தவரின் அடக்குமுறையையும், கறுப்பினத்தவரின் அடிமைத்தனத்தையும் உருவகப்படுத்தும் “உலக அபார்தைட்” உவமை இனவெறி...