Tagged: சமஸ்கிருத மயமாக்கம்

சமூகத்தை பார்ப்பனியமாக்கிய சமஸ்கிருதம்

சமூகத்தை பார்ப்பனியமாக்கிய சமஸ்கிருதம்

சமஸ்கிருதத்தை கல்வி நிறுவனங்களில் பா.ஜ.க. ஆட்சி திணிப்பது பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பேயாகும். சமஸ்கிருதத் திணிப்பால் சமூகத்தில் நடந்த பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்புகளை எதிர்த்து போராடிய, போராடி வரும் நாடு தமிழ்நாடு. இது குறித்து முனைவர் பொற்கோ எழுதிய கட்டுரையிலிருந்து… வடமொழிச் செல்வாக்கு சமயங்களையும் அரசர் களையும் தன்னுள் அகப்படுத்திய பிறகு சமுதாய வாழ்விலும் ஊடுருவிப் பரவியது. சங்க காலத் தமிழரசர்களின் பெயர்களையும் பிற்காலச் சோழ பாண்டிய வேந்தர்களின் பெயர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வடமொழிச் செல்வாக்கின் வளர்ச்சி தெளிவாகப் புலப்படும். ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதிராஜன், குலோத்துங்கன், விக்ரமன், ராஜகேசரி, பரகேசரி முதலான பெயர்களில் ஒன்றுகூடத் தமிழ்ப் பெயராக இல்லை. மாறவர்மன், சடையவர்மன், குலசேகரன் முதலான பெயர்களும் வடமொழிச் செல்வாக்கின் உச்சநிலையை நமக்கு உணர்த்துகின்றன. அரசர்களின் பெயர்களே இப்படி மாறிவிட்ட பிறகு அவர்கள் வழங்கும் பட்டங்களும் சிறப்புப் பெயர்களும் எப்படி இருக்கும்? அவையும் வடமொழி மயமாயின. தமிழகத்திலுள்ள ஊர்ப் பெயர்கள், கோயிலின் பெயர்கள், தெய்வத்தின்...