Tagged: குலக்கல்வி

குலக்கல்வியை மீண்டும் திணிக்கும், ”புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு”

இந்திய அரசின் துணையுடன் காவி பயங்கரவாத அரசியல் நமது கல்வி, உணவு, பண்பாட்டின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இயக்கங்களின் ஒன்றிணைந்த முயற்சிகளை முன்னெடுக்க கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ ) மக்கள் விடுதலை(தமிழ்நாடு) ஒருங்கிணைப்பில் ஆலோசனைக் கூட்டம் 15.08.16 அன்று பிற்பகல் கோவை மாவட்டம் சூலூரில் தோழர் ஆனைமுத்து அவைக்கூடத்தில் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் – தோழர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் – தோழர் தியாகு, சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை – தோழர் பாலன், தமிழ்த் தேச மக்கள் கட்சி – தோழர் தமிழ்நேயன், பி.யூ.சி.எல் – தோழர்கள் குறிஞ்சி, பொன்.சந்திரன், தனலட்சுமி, சி.பி.ஐ ( எம்-எல் ) ரெட்ஸ்டார் – தோழர் குசேலர், தியாகி இம்மானுவேல் பேரவை – தோழர் புலிப் பாண்டியன், தமிழக மக்கள் முன்னணி – தோழர் அரங்க.குணசேகரன், தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (7) குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி. தமிழருக்கு தலைவரா? வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (7) குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி. தமிழருக்கு தலைவரா? வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி) இராஜாஜி தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தையும் வர விடவில்லை. ஆ.கசபதி நாயகர் தமிழ் ஆட்சி மொழி மசோதாவைச் சென்னை சட்ட மேலவை யில் 5-1-1954இல் தாக்கல் செய்தார். அதை விவாதத்துக்கே வர விடாமல் முதல் அமைச்சர் இராஜாஜி தடுத்து விட்டார். இராஜாஜியின் பச்சை அடிமை ம.பொ.சியும் அன்று மேல் அவையில் தான் இருந்தார். அவர் வாய் மூடி மவுனியாவே இருந்தார். கசபதி நாயகரின் ஆட்சி மொழி மசோதாவை வரவேற்று ‘நம்நாடு’ நாளேடு 16.1.54 இல் தலையங்கம் எழுதியது. 20.12.54 அன்று சென்னையில் அனைத்து கட்சிகளை யும் அழைத்துக் கசபதியார் தமிழ் ஆட்சி மொழி மாநாட்டை நடத்தினார். அங்கு பேசியவர் களின் உரைகள் ‘நம்நாடு’ நாளிதழில் தொடராக...