Tagged: குறிஞ்சி நில மக்கள்

குறவர் இனமக்கள் போராட்டம் 09092016 சென்னை

9-9-2016 அன்று குறிஞ்சி நிலக் குறவர் இன மக்களின் மனித உரிமை மாண்பைப் பாதுகாக்கவும், தேசிய பட்டியல் சாதியினருக்கான ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு ஏற்று உடனடியாக நடைமுறைப் படுத்தக் கோரியும், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் பங்கேற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காளை 10-00 மணி முதல் மாலை 5-00 மணீவரை நடை பெற்றது. அவ்வார்ப்பட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு கோரிக்கைகளை ஆதரித்தும், எண்ணிக்கை பலமும், பொருளாதார பலமும் இன்றியும், இன்னமும் அமைப்பாக்கப் படாமல் உள்ள அம்மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தும், குரலற்ற அம்மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம்  எப்போதும் குரலாக இருக்கும் என்றும் உறுதி கூறியும் உரையாற்றினார்.. பெரியார் முழக்கம் 13102016 இதழ்