Tagged: குருவரெட்டியூர்

ஆணவ கொலைகளும்,அண்மைகால பெண்கள் கொலைகளும் தீர்வை நோக்கி.. குருவரெட்டியூர் பொதுக்கூட்டம் 19032017

ஆணவ கொலைகளும்,அண்மைகால பெண்கள் கொலைகளும் தீர்வை நோக்கி.. குருவரெட்டியூர் பொதுக்கூட்டம் 19032017

ஈரோடு வடக்கு மாவட்டம் குருவரெட்டியூர் கிளை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆணவ கொலைகளும்,அண்மைகால பெண்கள் கொலைகளும் தீர்வை நோக்கி எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் 19.03.2017 ஞாயிறு அன்று குருவை பெரியார் திடலில் உள்ள அரங்கநாதன் நினைவரங்கத்தில் நடைப்பெற்றது. பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி கேஆர்  பகுத்தறிவு இசைக்குழுவின் சார்பாக பறையாட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக சோதி அவர்கள் தலைமையேற்க தோழர் வேல்முருகன் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.தோழர் வேணுகோபால், தோழர் இராம .இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்ற,தலைமைக்கழக பேச்சாளர் தோழர் சாக்கோட்டை.மு.இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்புரையாற்றினார்.  அனைவருக்கும் தோழர் திலிபன் அவர்கள் நன்றி கூறினார்.தோழர்கள் அனைவருக்கும் கிளை கழகத்தின் சார்பில் இரவு அசைவ உணவு ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. நிகழ்வில் மாநில, மாவட்ட கழகத்தோழர்கள் பெரும்பாலோனர் கலந்து கொண்டணர்.      பொதுக்கூட்டம் தொடங்கும் முன்பு இஸ்லாமிய மத வெறியர்களால்...

கட்டைமைப்பு நிதி வழங்கும் விழா ! 30112016 குருவரெட்டியூர்

ஈரோடு வடக்கு மாவட்டத்தின் சார்பில் முதல் தவணையாக கழக தலைவர் அவர்களிடம் ரூ.1,10,000.00 (ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் மட்டும்) வழங்கப்பட்டது. கழக தலைமையினால் அறிவிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் கழக கட்டமைப்பிற்கு கழக தோழர்களால் நிதி சேகரிப்பு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அதன் ஒரு பகுதியாக ஈரோடு வடக்குமாவட்டத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் தோழர் நாத்திக ஜோதி அவர்கள் தலைமையில் 30.11.2016 அன்று குருவரெட்டியூரில் ”கட்டமைப்பு நிதி பெரும் விழா” நடைபெற்றது. கழக ஆதரவாளர்களிடம் நிதி திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஆதரவாளர்கள் ஏராளமாக கலந்து கொண்டு கழகத்திற்கு நிதி உதவி அளித்து ஆதரவளித்தனர். அந்நிகழ்வில் மட்டும் திரட்டப்பட்ட நிதியான ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை முதல் தவணை நிதியாக கழக தலைவர் அவர்களிடம் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் நாத்திகஜோதி அளித்தார். இந்நிதி வழங்கும் நிகழ்வில் அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி,பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,தோழர் காவலாண்டியூர் ஈஸ்வரன்,தோழர் செட்டியூர்...