Tagged: குஜராத் தலித் புரட்சி

குஜராத்தில் தலித் மக்களின் புரட்சிக் குரல்! பார்ப்பனப் பிடியில் சிக்கி நிற்கும் ஜாதியமைப்பை தகர்ப்போம்!

சட்டம் ஒழுங்கை தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டு தலித் மக்களை தாக்கத் தொடங்கிவிட்டது. ‘பசு கண்காணிப்பு’ என்ற பெயரில் மதவெறி வன்முறை கூட்டம், அதிகார அமைப்பிலும் காவல் துறையிலும் ஊடுருவி நிற்கும் மதவெறி சக்திகள் இந்த வன்முறைக்கு துணை நிற்கின்றன. குஜராத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி செத்துப் போன பசுமாட்டின் தோலை விற்பனை செய்வதற்கு உரித்தார்கள் சில தலித் இளைஞர்கள். அதுவே அவர்களின் வாழ்க்கைக்கான தொழில். ‘பசு கண்காணிப்பு’ என்ற போர்வைக்குள் பதுங்கி நிற்கும் மனித மிருகங்கள் நான்கு தலித் இளைஞர்களை மூர்க்கத்தனமாக தாக்கினர். இது நடந்தது சவுராஷ்டிரா அருகே உள்ள ‘உனா’ எனும் கிராமத்தில். சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் பதிவேற்றப்பட்டன. பிரச்சினை பற்றி எரியத் தொடங்கிவிட்டது. இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய மாநிலம் குஜராத் என்று பார்ப்பன ஊடகங்கள் எழுதிக் குவித்தது. அத்தனையும் அப்பட்டமான பொய். இப்போது உண்மைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. குஜராத் மக்கள் தொகையில் 8...

குஜராத், தலித் மக்களின் புரட்சி

செத்த மாட்டைப் புதைக்க மாட்டோம்; சாக்கடைக் குழியில் இறங்க மாட்டோம்! குஜராத், தலித் மக்களின் புரட்சி “செத்த மாடுகளைப் புதைப்பது உள்ளிட்ட இழிவான வேலைகளை செய்ய மாட்டோம்” என்று, தலித்  மக்கள் போர்க்கொடி உயர்த்திய மகிழ்ச்சியான செய்திகள்  வந்து கொண்டிருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் செத்த பசுமாட்டுத் தோலை  உரித்தார்கள் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ள ‘பசு பாதுகாப்பு’ அமைப்பைச் சார்ந்த வன்முறையாளர்கள், தலித் இளைஞர்களை ஆடைகளைக் களைந்து  மூர்க்கத்தனமாக தாக்கினர். இந்த செய்தி குஜராத் தலித்  மக்களை கொதித்தெழச் செய்துவிட்டது. மாட்டுத் தோலை விற்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள் தலித் மக்கள். செத்த மாடுகளின் தோலை உரிக்கக் கூடாது என்று  ஆர்.எஸ்.எஸ். கும்பல் வன்முறையில் ஈடுபடுவது அவர்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கிறது. இனி  செத்த மாடுகளை புதைக்க மாட்டோம் என்று குஜராத்தில்  தலித் மக்கள் அறிவித்து விட்டதால், 200 செத்த மாடுகள் புதைக்கப்படாமல் துர்நாற்றம் அடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் சபர்மதியில் தலித்  மக்கள் கடந்த ஞாயிற்றுக்...