Tagged: கீதா

பெரியார் கண்ட ரஷ்யாவும் சாதிய இந்தியாவும் – வ.கீதா

ரஷ்யப் புரட்சி நடந்து ஒரு நூற்றாண்டாகிறது. புரட்சிக் காலகட்டத்தில் பெரியாரும், அதுகுறித்த விரிவாக நடத்திய விவாதங்களை முன்வைக்கிறது இக்கட்டுரை, பெரியார் விட்டுச சென்ற நுட்பமான சமூகப் புரிதலை சமகாலத்தில் முன்னெடுப்பதில் தவறிவிட்டோம் என்ற விமர்சனத்தையும் கட்டுரை பதிவு செய்கிறது. போல்ஷெவிக் புரட்சியின் 100ஆவது ஆண்ட விழாவை அடுத்தாண்டு நாம் அனுசரிக்க இருக்கும் வேளையில் அப்புரட்சி மரபு ஈன்ற முக்கியமான அரசியல் ஆளுமைகளில் ஒருவரான ஃபிடல் காஸ்டிரோவை நினைவு கோராமல் இருக்க முடியாது. காரணம், போல்ஷெவிக் புரட்சியாளர்களான லெனின், ட்ராட்ஸ்கி ஆகியோரை போல அவருமே சோசலிசத்தை கட்டியெழுப்பும் பணியை புதிய மானுடத்தை உருவாக்க முனையும் பணியுடன் அடையாளப்படுத்தினார். அவரின் சக புரட்சியாளரான செ குவேரா, உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பது எத்தனை அவசியமோ, புதிய மனிதனை உருவாக்கும் செயல்பாடும் அத்தனை அவசியமானது என்று வாதிட்டார். இத்தகைய உருவாக்கத்தை கட்டளைகள் மூலமோ புரட்சி நடந்து முடிந்த மாத்திரத்திலோ சாதிக்க முடியும் என்று அவர் நினைக்கவில்லை. கல்வி,...

பெரியார் மீது அவதூறு கக்கும் ம.பொ.சி. பரம்பரைக்கு மறுப்பு

பெரியார் மீது அவதூறு கக்கும் ம.பொ.சி. பரம்பரைக்கு மறுப்பு

மதிவண்ணன் நூல் வெளியீட்டு நிகழ்வில் பேசிய பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன், பெரியார் மீது ம.பொ.சி.யின் பேத்தி பரமேசுவரி என்பவர், இணையதளத்தில் அவதூறுகள் எழுதி வருவதை சுட்டிக்காட்டி பேசினார். அவரது உரையையும், அவதூறுக்கு மறுப்பாக ‘குடிஅரசு’ பதிவுகளையும் (4 ஆம் பக்கம்) வெளியிடுகிறோம். ராவ் சாகிப் எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள் மற்றும் மதிவண்ணன் எழுதிய, ‘உள் ஒதுக்கீடு’; ‘தொடரும் விவாதம்’; ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’, ‘ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா’ ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 15.3.2014 அன்று சென்னை அய்கப் அரங்கில் நடைபெற்றது. ‘கருப்புப் பிரதிகள்’ இந்த நூல்களை வெளியிட் டுள்ளது. நூல்களை ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் வெளியிட, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். வ.கீதா, புனித பாண்டியன் மற்றும் தோழர்கள் உரையாற்றினர். நீலகண்டன் தொகுத்து வழங்கினார். ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’ நூலை அறிமுகம் செய்து பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த...