Tagged: காதலர்களுக்கு ‘காவல்’ தரும் காவலாண்டியூர்

காதலர்களுக்கு ‘காவல்’ தரும் காவலாண்டியூர் !

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பாலமலையில் மே 17, 18 தேதிகளில் பெரியாரியல் பயிலரங்கம் மிகச்சிறப்பாகவும் கருத்துச் செறிவாகவும் நடைபெற்றது.அந்த பயிரங்கத்தின் இடையே ஜாதிமறுப்பு காதல் திருமணம் நடைபெற்றது. குமாரபாளையம் சக்தி (தந்தை பெயர் முருகன்), ஓசூரைச் சேர்ந்த பிரீத்தி (தந்தை பெயர் ஆனந்த்) ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் அவர்கள் மணி நடத்தி வைத்தார். மேட்டூரில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காவலாண்டியூர் கிராமம்,கழகக் கட்டமைப்புடன் செயல்படக்கூடிய பகுதி. பெயரிலேயே‘காவல்’அடையாளத்தைக் கொண்டிருக்கும் இந்த ஊருக்கு ஒருதனி சிறப்பு உண்டு. குடும்பத்தையும் ஜாதியையும் எதிர்த்து, ஜாதி மறுப்பு திருமணம் புரிந்த ஏராளமான இணையர்களுக்கு புகலிடம் தந்து, ‘காவல்’ காத்த ஊர் காவலாண்டியூர். மாதக் கணக்கில் அடைக்கலம் பெற்ற இணையர்களும் உண்டு. அண்மையில் வெளி வந்த சின்னத்துரை எனும் தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ஊரை விட்டு ஓடி வந்த ஓர் ஜாதி மறுப்பு இணையர், ‘காவலாண்டியூர்’...