Tagged: கடவுள்

கடவுள்-மதமற்ற புதிய உலகு வரட்டும்

கடவுள்-மதமற்ற புதிய உலகு வரட்டும்

‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (செப்.22) மராட்டியத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவுப் போராளி தபோல்கர் நினைவாக  பேராசிரியர் வசந்த் நடராசன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். மனித சமுதாய வரலாற்றைப் படித்தால் மற்ற எந்த காரணத்தையும்விட மதத்தின் பேரால் நடந்த போர்களே அதிகம் என்பதைப் பார்க்க முடிகிறது. சரியாகச் சொன்னால், எந்ததெந்தக் காலகட்டங்களில் மதமும் அதன் மீதான கொள்கைப் பிடிவாதமும் தீவிரமாகக் கோலோச்சினவோ அந்தக் கால கட்டங்களில்தான் மனிதர்கள் மீது மிகக் குரூரமான சித்திரவதைகளும் நடைபெற்றன. உதாரணமாக, கத்தோலிக்க சர்ச்சோடு உடன்படாதவர்களைக் கொடுமைப்படுத்திய ஸ் பானிய விசாரணைகள் நடைபெற்ற காலத்தைக் கூறலாம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராகத் தொடங்கி வளர்ந்த நாசிசம் இரண்டாம் உலகப் போரில் போய் முடிந்தது. இப்போது ‘இஸ் லாமிய தீவிரவாதம்’ தலை தூக்கியிருப்பது, சிலர் குறிப்பிடுவதுபோல் வெவ் வேறு கலாச்சாரங்களுக்கு இடையே நடக்கும் மோதல் அல்ல. இஸ் லாம் மதத்துக்கும், கிறிஸ் துவ மதத்துக்கும் இடையிலான மோதல்தான். அதன்...

மதங்களுக்கு சவால் விடும் அறிவியல்

மதங்களுக்கு சவால் விடும் அறிவியல்

கடவுள், மதங்கள் காலத்துக்கு பொருந்தி வராதவை என்று பேராசிரியர் வசந்த் நடராசன் ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தைப் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். பார்ப்பனர்கள் பழமைவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது அக்கட்டுரை. அதே ‘இந்து’ ஏட்டில் பல மறுப்புக் கட்டுரைகள் வெளி வந்தன. அதில், பேராசிரியர் நடராசனின் கடவுள், மத மறுப்பு கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஜிரேந்திர சர்மா என்ற ஆய்வாளர், ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மதம் குறித்து அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது அவரது கட்டுரை. கட்டுரை சுருக்கம் இதுதான்: “மதத்துக்கும் அறிவியலுக்குமான முரண்பாடுகள் வெடித்து வருகின்றன. இதில் மதம் தொடர்பாக முன்வைக்கப்பட்டு வந்த கருத்துகள் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றன. நவீன வாழ்க்கையின் தத்துவங்கள் இரண்டு. ஒன்று சமத்துவம்; மற்றொன்று சுதந்திரம். இரண்டுமே மதத்துக்கு எதிரானவைதான் சமூக மாற்றத்தை மதப் பழமைவாதிகளால் ஏற்க முடியவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ் தவ மதம் மாற்றங்களை எதிர்த்தது....

தலையங்கம்: ‘கடவுள்’ ஒருவர் இருக்கிறாரா?

தலையங்கம்: ‘கடவுள்’ ஒருவர் இருக்கிறாரா?

“கடவுள் எப்படி எங்கள் குழந்தையை இப்படி ஒரு கொடூரமான முறையில் எடுத்துக் கொள்ளலாம்?” என்று கேட்கிறார், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பில் பலியான இளம் பெண் பொறியாளர் சுவாதியின் பாட்டி! காலம் முழுதும் கடவுளை நம்பிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் நியாயமான கோபத்துக்குப் பின்னால், கொந்தளிக்கும் உணர்வுகளை குறைத்து மதிப்பிட முடியாது. பேத்தியைப் பறி கொடுத்த துயரத்தின் வெளிப்பாடு – அவர் நம்பும் கடவுளின் நேர்மையை சந்தேகிக்க வைத்துவிட்டது. எப்படியோ குண்டு வைப்பதை கடவுளால் தடுக்கவும் முடியவில்லை. இப்போது மக்களின் கோபம் ஆட்சியின் செயலின்மை மீதுதான். ‘கடவுள்’ தப்பி விட்டார்! ‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பது’ என்று கூறுவார்கள். எல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆட்சி நிர்வாகம் சுறுசுறுப்பாகக் களமிறங்கிவிடும். ஆரவாரம், பதட்டம், குற்றவாளிகள் தேடுதல், பாதுகாப்பு கெடுபிடிகள் – இவை எல்லாம் சில வாரங்கள் தொடரும். தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து செய்தி கிடைக்காத சோகத்தில் மூழ்கிக் கிடந்த...