Tagged: உயிர்வலி

மயிலாடுதுறையில் கழக சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையீடு

மயிலாடுதுறையில் கழக சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையீடு

மயிலாடுதுறை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையிடப்படும் நிகழ்வு 30.12.2013 திங்கள் மாலை 6.30 மணியளவில் புத்தகச் சோலை மேல் தளத்தில் உள்ள பெரியார் அரங்கில் சிறப்புடன் நடந்தது. கழக மாவட்டத் தலைவர் மா.மகாலிங்கம் தலைமை தாங்கினார். டி.பன்னீர்செல்வம் (ம.தி.மு.க.), வழக்கறிஞர் வேலு. குபேந்திரன் (வி.சி.), சுப்பு மகேசு (தமிழர் உரிமை இயக்கம்), வழக்கறிஞர் ஜெ. சங்கர் (கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), தனவேந்திரன் (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), எஸ். சுந்தர் (உழைக்கும் விவசாயிகள் இயக்கம்), ந. கலிய பெருமாள் (திருக்குறள் பேரவை) ஆகியோர் உரையைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆவணப்படம் குறித்தும், பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்கள் மீதான வழக்குகளின், உச்சநீதிமன்ற விசாரணைகள் குறித்தும், ராஜீவ் கொலை வழக்கில் முறையான விசாரணைகள் நடத்தப்படாமை குறித்தும், அரிதிலும் அரிதான வழக்குகளை தீர்மானிப்பதில் நீதிமன்றங்களில் நடக்கும் குழப்பங்கள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார். தொடர்ந்து ஆவணப்...

ஈரோட்டில் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம்: கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு

ஈரோட்டில் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம்: கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு

23-02-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 6-00 மணியளவில், ஈரோடு பெரியார் மன்றத்தில் ‘மரணதண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம்’ நடை பெற்றது. மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண.குறிஞ்சி தலைமை தாங்கினார். தமிழ்த் தேச மக்கள் கட்சி நிலவன் அறிமுக உரை ஆற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி, திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம் அற்புதம் அம்மாள், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், எழுத்தாளர் பாமரன், தமிழின பாதுகாப்பு இயக்கம் கி.வே.பொன்னையன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் – லெனினிஸ்ட் ஏ.கோவிந்தராசு ஆகியோர் கருத்துரை ஆற்றினர். த.பெ.தி.க குமரகுருபரன் நன்றி கூறினார். அரங்கில் “உயிர்வலி” படம் திரையிடப்பட்டது. தஞ்சையில் : 01-03-2014 சனிக்கிழமை காலை 9-30 மணி முதல், இரவு 8-00 மணிவரை, தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி சார்பில் தஞ்சாவூர் காவேரி திருமண மண்டபத்தில் “காவிரி எழுச்சி மாநாடு” நடை பெற்றது. காவிரி உரிமை மீட்பு,...