Tagged: இரங்கல் உரை

அய்யா அருணாசலம் மறைவு திராவிடர் இயக்கத்திற்கு பேரிழப்பு

‘அய்யா அருணாசலம் மறைவு திராவிடர் இயக்கத்திற்கு பேரிழப்பு’ திருக்கண்ணபுரத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு பேச்சு திருக்கண்ணபுரம் மே. 25 பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் தமிழ் இசை மன்றம், தமிழ் சான்றோர் பேரவை நிறுவனருமான அய்யா அருணாசலம் அவர்கள் நேற்று முன்தினம் சென்னையில் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் நடைபெற்றது. அய்யா அருணாசலம் அவர்களின் இறுதி நிகழ்வில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் தலைமைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா, நாகை மாவட்ட செயலாளர் தெ.மகேசு, மாவட்ட அமைப்பாளர் அன்பரசன், மாவட்ட பொருளாளர் விஜயராகவன், திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, திருச்சி மாவட்ட அமைப்பாளர் குணா, மயிலாடுதுறை நகர தலைவர் நாஞ்சில் சங்கர் ஆகியோர் பங்கேற்று இறுதி மரியாதை செய்தனர். பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு பேசுகையில்...