Tagged: இந்திரா காந்தி

கால் பந்தாட்டப் போட்டி – தெருமுனைக் கூட்டங்களுடன் மயிலையில் 4 நாள் பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

சென்னையில் மயிலாப்பூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் பெரியார் பிறந்த நாள் விழாவை கால்பந்து போட்டிகளோடு இணைத்து நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். கடந்த செப். 26ஆம் தேதி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் விழா, அறிவியல் பரப்பும் மூடநம்பிக்கை எதிர்ப்பு கலை நிகழ்ச்சிகளுடன் விழா எழுச்சியுடன் நடந்தது. இது குறித்த செய்தி: சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் , துடிப்பாக செயல்படக்கூடிய இளைஞர்களைக் கொண்ட அமைப்பு, கழகப் போராட்டங்களிலும், களப்பணிகளிலும் முன்னணியில் நிற்கும் தோழர்கள், பெரியார் பிறந்த நாளையொட்டி பார்ப்பனரல்லாத இளைஞர்களின் விளையாட்டாகத் திகழும் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான போட்டி, கடந்த செப்.25ஆம் தேதி இராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாநகராட்சி மைதானத்தில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மோகன கிருட்டிணன் தொடங்கி வைத்தார். 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. அம்பேத்கர் பெயரில் இயங்கும் அணி...

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கு வழங்கப் பட்டுள்ள 370 ஆவது பிரிவை நீக்கும் நோக்கத் தோடு மோடி ஆட்சி விவாதங்களைத் தொடங்கி யிருக்கிறது. காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜிதேந்திரசிங் பிரதமர் அலுவலக இணையமைச்சராக்கப்பட்டுள்ளார். பதவி ஏற்ற அடுத்த நாளே இந்த விவாதத்தை அவர் தொடங்கிய நிலையில், ‘370’ உருவான வரலாற்றை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனா, அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய பெரும்பான்மையானவர்கள் அறிய மாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும் பாலானவை இந்தியாவுடன் இணைந்துவிட்டன. இணைய மறுத்த ஐதராபாத் சமஸ்தானத்தை இராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல். காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னரான ஹரிசிங் ஆட்சி செய்து வந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இ ஸ்லாமியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன்...