Tagged: ஆனைமலை திவிக

பெரியார் பிறந்தநாள் விழா ஆனைமலை

தலைவர்பெரியாரின் 138-வதுபிறந்தநாள் விழா ஆனைமலையில் கழகதோழர்களால் சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் சமத்துவபுரத்தில் பெரியார்சிலைக்கு மாலைஅணிவித்தனர். கழககொடியை புனிதா, கீதாஆகிய தோழர்கள்ஏற்றி வைத்தனர். பின்பு பெரியார்படத்திறப்பு நிகழ்வு நடந்தது. விழாவில்பெரியார் திராவிடர்கழக ஒருங்கிணைப்பாளர் காசு.நாகராசு. அம்பேத்கர்இளைஞர் முன்னணி தலைவர்   கவி.மணிமாறன் மற்றும்கழகத்தோழர்கள் வே.வெள்ளிங்கி, ராசேந்திரன், அப்பாதுரை, அரிதாசு, மணிமொழி, ஆனந்த், கணேசு, முருகேசன் உள்படதோழர்கள் 75பேர்கலந்து   கொண்டனர். மதியம் மாட்டுக்கறி விருந்தில் பொதுமக்கள்என 200பேர்பங்கேற்றனர்

விநாயகர் சிலை ஊர்வலம் – ஆனைமலை திவிக மனு

​பொள்ளாச்சி-ஆனைமலை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 5ம் தேதி இந்துமத வெறியர்களால் மற்ற சமூகத்தாரின் வன்மத்தை தூண்டுவது போல் சென்னை உயர் நீதி மன்றம் பிறப்பித்த விதிகளுக்கு மாறாக செயல்படுவதை கண்டித்தும் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்துகின்ற நீர் நிலைகளில் கரைப்பதும் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வதும் காவல்துறைகளின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதை கண்டித்தும் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் 20க்கும் மேற்பட்ட தோழர்களால் மனு வழங்கப்பட்டது