Tagged: ஆட்டோ சரவணன்

சாவிலும் சடங்குகளை தவிர்க்கச் சொன்ன தோழர்

11 .6.16 அன்று சென்னை மாவட்ட கழகத் தோழர் ஆட்டோ சரவணன் முதலாமாண்டு நிகழ்ச்சி இராயப்பேட்டை பத்ரிநாராயணன் படிப்பகத்தில் கழகப் பொதுச்செயலாளர்விடுதலை இராசேந்திரன் படத்திற்கு மாலை அணிவித்து இரங்கல் உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்ட இந்நிகழ்வில் கழகத்தோழர்கள் திரளாக கலந்து வீர வணக்கம் செலுத்தினர். “மரணத்திலும் சடங்குகளை மறுக்கச்சொன்ன பெரியார் தொண்டர் சரவணனுக்கு வீர வணக்கம்!” என்ற வாசகங்களடங்கிய சுவரொட்டியை கழகத் தோழர்கள் ஒட்டியிருந்தனர். -புரட்சிப் பெரியார் முழக்கம் – 16.06.2016.