Tagged: அனைத்துலக காணாமல்போனோர் நாள் !

அனைத்துலக காணாமல்போனோர் நாள் !

இளந்தமிழகம் இயக்கம் ஒருங்கிணைத்த ஒன்று கூடலில் திராவிடர் விடுதலை கழகம்,தமிழ் தேசிய விடுதலை இயக்கம், சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை,தமிழ் தேச மக்கள் கட்சி,தமிழக மக்கள் முன்னணி,அம்பேத்கர் சிறுத்தைகள் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டு ஈழத்தில் காணாமல் செய்யப்பட்டோர் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டி ஐ.நா விற்கான கோரிக்கை மனு UNICEF அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில், திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன்,சென்னை மாவட்ட கழ்க செயலாளர் உமாபதி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் அமைப்பாளர் தோழர் தியாகு, தமிழ்தேச மக்கள் கட்சி பொது செயலாளர் தமிழ்நேயன், தமிழக மக்கள் முன்னணி தோழர்பாவேந்தன், பேராசிரியர் ராமு மணிவண்ணன் சிபிஎம்எல் கட்சி தோழர்கள் செல்வி தலைமை குழு உறுப்பினர், மற்றும் கண்ணன் தென்சென்னைமாவட்டகுழு உறுப்பினர் மற்றும் கழக தோழர்கள்,ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.