திரு. வி.க. முதலியார் புறப்பட்டு விட்டார்

 

காங்கிரசுக்காரர்களின் அயோக்கியத்தனங்களைக் கண்டு சகிக்காமல் தோழர் திரு. வி. கல்யாணசுந்திர முதலியார் முதலியவர்கள் துணிந்து காங்கிரஸ் சிவிக் போர்டார் என்பவர்களால் நிறுத்தப்பட்ட நபர்களுக்கு விரோதமாயும், உண்மையில் தகுதி உடையவர்களுக்கு அநுகூலமாயும் பிரசாரம் செய்யப் புறப்பட்டு விட்டார்கள்.

காங்கிரஸ் சிவிக் போர்டாரால் தெரிந்தெடுக்கப்படும் மெம்பர்கள் என்பவர்களில் பலர், தெரிந்தெடுப்பு அதிகாரம் பெற்றவர்கள் என்பவர் களுக்குச் சொந்தத்தில் பணம் கொடுத்துத் தெரிந்தெடுத்துக் கொள்ளப்படு கிறார்கள் என்கின்ற புகார் திருநெல்வேலி, திருச்சி, திருவண்ணாமலை முதலிய இடங்களில் ஏற்பட்டது யாரும் அறியாததல்ல. இம்மாதிரி சூழ்ச்சியும், அயோக்கியத்தனமும் ஒழிய வேண்டும் என்பதே தோழர் முதலியார் போன்றவர்களின் முக்கிய கவலையாக இருந்திருக்குமென்று நம்புகிறோம்.

எப்படி இருந்தாலும் இப்போதாவது இவர்கள் உண்மையை உணர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி அடைகின்றோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 01.03.1936

You may also like...