ஒரு  விசேஷம்  வம்பளப்போன்

 

சென்னையில்  நடந்த  தலைவர் தெரிந்தெடுப்பு விருந்துக்கு  தோழர்  சத்தியமூர்த்தியை  அழைக்கவே  இல்லையாம்.  லக்ஷ்மிபதி  அம்மாளை  கூப்பிடவே  இல்லையாம்.  காங்கிரசின்  நன்றி  விசுவாசத்திற்கு  வேறு  என்ன  ருஜுவு  வேண்டும்.

சத்தியமூர்த்தியார்  லக்ஷிமிபதி  அம்மாளை  காரைக்குடி  மகாநாட்டுக்குத்  தலைவராகத்  தேர்ந்தெடுக்க  வேண்டுமென்று  ஜில்லா  சபைகளுக்கு  ரகசியக்  கடிதம்  எழுதினதினால் இருவரையும்  குற்றவாளியாக்கி  தலைமைப்  பதவியில்  இருந்து  தள்ளப்போகிறார்கள்  போலும்!

குடி அரசு  செய்தி விமர்சனம்  15.12.1935

You may also like...