கடற்கரையில் காதலர்களுக்கு கழகத்தினர் வாழ்த்து!

14.2.2015 அன்று சென்னை மாவட்டம் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதவெறி அமைப்பான இந்து மகாசபை சார்ந்தவர்கள் உலக காதலர் தினத்தை கொச்சைப்படுத்தி நாய்களுக்கு திருமணம் செய்தும், காதலர்களுக்கு கட்டாய தாலி கட்டுவோம் என்பதை எதிர்த்தும், காதலர்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஜாதி, மதங்களை கடந்து உலக காதலர் தினத்தை கொண்டாடிய நிகழ்வு காலை 10 மணியளவில் சென்னை மெரினா கண்ணகி சிலை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார்.
கழகத்தின் சார்பில் இப்படி ஒரு விழா எடுப்பதை அறிந்த இந்து மகாசபை அமைப்பினர், கண்ணகி சிலை அருகில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை இரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கழகத் தோழர்கள் காதலர்களுக்கு இனிப்பு கொடுத்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். (தோழர் மாங்காடு சேகர் இனிப்பு களுக்கு ஏற்பாடு செய்திருந்தார்) காவல் துறை நேரடியாகவும், மறைமுகமாகவும் காதலர்களை அச்சுறுத்தியதாலும் ஊடகங்கள், காமிராக்களில் படம் பிடிக்க முயன்றதாலும் மெரினா கடற் கரை பகுதிக்கு, காதலர்கள் வர தயங் கினர். இருப்பினும் இந்த அச்சுறுத் தலைக் கடந்துவந்த காதலர்களுக்கு கழக சார்பில் தோழர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் தபசி. குமரன், சென்னை மாவட்டப் பொருப்பாளர்கள் பா. ஜான் மண்டேலா, ஏசு, ஆ. வேலு, அருள்தாசு, தட்சணாமூர்த்தி, பிரகாசு, மாரி, இராவணன் மற்றும் நாத்திகன், மருதமூர்த்தி, முழக்கம் உமாபதி, ஜெயந்தி, சாந்தி, காஞ்சிபுரம் தினேஷ், அருண், வழக்கறிஞர்கள் துரை அருண், திருமூர்த்தி, விழுப்புரம் அய்யனார் உள்பட ஏராளமான தோழர்கள் காதலர்களுக்கு இனிப்பு கொடுத்து வாழ்த்துகள் சொல்லும் போது காதலர்கள் முகமலர்ச்சியை நேரில் பார்க்க முடிந்தது.

பெரியார் முழக்கம் 19022015 இதழ்

You may also like...

Leave a Reply