மனிதமே முதலில்….

1936ஆம் ஆண்டு சென்னை நகராட்சி உறுப்பினர் பதவிக்கு பெத்துநாயக்கன்பேட்டையில் போட்டியிட்டார் அண்ணா. அண்ணாவுக்கு ஓட்டு போட்டால் ஆலயங்களில் விளக்கு எரியாது என்று எழுதியது ஜெயபாரதம் ஏடு. அதற்கு அண்ணா, “நகரின் சேரிகள் பன்னெடுங்காலமாக இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. முதலில் அவைகளுக்கு விளக்கு போட வேண்டும். அதற்குப் பிறகு பணமும் நேரமும் மிச்சமிருந்தால் ஆலயங்களில் விளக்கு எரியும். நண்டும் நட்டுவாக்கிளியும் கடித்துத் துன்பப்படும் சேரி மக்களுக்கு விளக்கு போடாமல் ஆலயங்களுக்குப் போட்டுப் பயனில்லை” என்று பதில் கொடுத்தார். அப்படியானால் உனக்கு ஓட்டு இல்லை என்று சிலர் கூற, உங்கள் ஓட்டு எனக்குத் தேவையே இல்லை என்று கூறிவிட்டார் அண்ணா.

பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

You may also like...