வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி; பெரியாருக்கு ஒரு நீதி

வைக்கம் போராட்டத்தில் பெரியார் சிறைச் சாலைகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்தார். அதே நேரத்தில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் பார்ப்பனர்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.

  • வைக்கம் போராட்டத்தைப் பார்வையிட வந்த காங்கிரஸ் தலைவர் சீனிவாச அய்யங்கார் வைக்கம் திவான் வீரராகவ அய்யங்கார் வீட்டில் தங்கினார்.
  • மற்றொரு காங்கிரஸ் தலைவர் எஸ்.வி. வெங்கட்ரமண அய்யங்கார், காவல்துறை ஆணையர் அனுப்பிய காரைப் பயன்படுத்தினார். தீண்டாமையை ஆதரித்த வைதீகர்களுடன் சேர்ந்து விருந்து உண்டார்.
  • வைக்கம் போராட்டத்தில் மன்னர் மரணமடைந்த வுடன் மகாராணி அதிகாரத்துக்கு வந்தவுடன் போராட்டத்தின் கோரிக்கைகளை ஏற்க முன் வந்தார். அப்போது திவான் பெரியாரோடு நாங்கள் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டார். காரணம் பெரியார், திருவாங்கூர் சமஸ்தானத் துக்கும் வைதீகர்களுக்கும் எதிராக சமரசமின்றி போராடியது தான். இந்த நிலையில் ராஜாஜியை திவான் அழைத்து காந்தியாரோடு சமரசம் பேச ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறார். வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்பதையே விரும்பாத ராஜாஜி, திவான் வேண்டுகோளை ஏற்று காந்தியாரோடு பேசி வைக்கம் வரவழைத்தார்.
  • வைக்கம் வந்து சேர்ந்த காந்தியாரை சமஸ்தான அரசு தனது விருந்தினராகவே நடத்தி கவுரவித்தது. அதே நேரத்தில் பெரியார் வைக்கம் வந்தபோது மன்னர் தந்த வரவேற்பைப் புறக்கணித்து போராட்டக் களத்தில் குதித்தவர் பெரியார்.

இதுதான் சனாதனம்; இதுதான் பார்ப்பனியம்!

பெரியார் முழக்கம் 13042023 இதழ்

You may also like...