“பெரியார் எனும் பெருவிளக்கு நமக்கு உறுதுணை”

அண்ணல் காந்தியும், தந்தை பெரியாரும் ஒப்பற்றத் தியாகிகளும் இணைந்து முன்னெடுத்த வைக்கம் போராட்டம், தமிழ்நாட்டில் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. இதுவே பின்னாளில் இந்தியாவிற்கே சமூக நீதிக்கான விதையாக அமைந்தது.

பெரியார், அய்யா முத்து, டி.கே. மாதவன், கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், நீலகண்ட சாஸ்திரி, காந்திராமன், மண்ணத்து பத்மநாபன் போன்ற தியாகிகளை மீண்டும் அறிமுகப்படுத்தி, அவர்களின் உணர்வுகளை இளைய சமுதாயத்திற்கும், மக்களுக்கும் ஊட்ட வேண்டிய பொறுப்பு இப்பொழுதும் நமக்கு இருக்கிறது.

சனாதனக் கொடுமைகளைத் தகர்த்தெறிய வேண்டிய இந்த நேரத்தில் ஜாதிய மதவாத சக்திகளும் தலைதூக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தேசத்தை இருளில் ஆழ்த்தும் இவர்களை விரட்ட பெரியார் எனும் பெருவிளக்கு நமக்கு உறுதுணையாக இருக்கும். எனக்கு மனிதப் பற்றைத் தவிர வேறு எந்தப் பற்றும் இல்லை என்று சொன்ன மாசற்றத் தலைவராய் சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்டவர் தலைவர் பெரியார்.

அவரது தேவை தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்திற்கே தேவை. இதை உணர்ந்து சகோதரர்களாய் கரம் கோர்த்து சமத்துவம் படைக்க உறுதி ஏற்போம்.

– வைக்கம் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

பெரியார் முழக்கம் 06042023 இதழ்

You may also like...