இதுதான் தமிழ்நாடு; இதுதான் பெரியார் மண்!

மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சார்ந்த ஒரு பட்டதாரி பெண்,  தன்னை நரபலி தரப்போகிறார்கள் என தனது குடும்பத்தினரிடம் பயந்து பாதுகாப்பு கேட்டு தமிழ்நாடு வந்துள்ளார். மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, அவரை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஒப்படைத்து, நீதிபதி உரிய பாதுகாப்பு வழங்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார். அரசு வழக்கறிஞரும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார். தமிழ்நாடு தான் தன்னைப் பாதுகாக்கும் என்று தமிழ்நாடு வந்ததாக அந்தப் பெண் கூறி உள்ளார். ஆர்.எஸ்.எஸ் குடும்பம், சொந்த மகளை நரபலி தருகிறது; பெரியார் மண் அவரை காப்பாற்றுகிறது. இதுதான் தமிழ்நாடு; இதுதான் பெரியார் மண். சங்கிகளே என்ன சொல்லப் போகிறீர்கள்?

பெரியார் முழக்கம் 02032023 இதழ்

You may also like...